வள்ளுவர் இதை ஏன் எழுதினார் என்று சிந்தித்தால், ஓவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் தோன்றும். ஆனால் இப்போது எப்படி யோசித்தாலும் ஒரே ஒரு காரணம் தான் தோன்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒன்று முடிந்து மற்றது வருகிறது, நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபாடு. எது வந்தாலும் முழுவதும் எதிர்க்காமல் நம்மை தாண்டிச் செல்ல அனுமதித்தால் தானே ஓடி விடும். இதைத்தான் வள்ளுவர் கூறியிருக்கிறார். போராடி பார்த்து இது சரியான வழி இல்லை என்பதை மனப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டுமே இந்த புரிதல் சாத்தியம்.
எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழ் அணங்கே!! உன் சீர் இளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்!!
14 அக்டோபர், 2016
13 அக்டோபர், 2016
அம்மாவின் ஆசிர்வாதம்
காலையில் வழக்கம் போல் வேலைகளை முடித்து விட்டு அம்மாவிடம் தொலைபேசியில் பேசினேன். வாழ்க்கை பல பாடங்களை கற்று கொடுக்க அவற்றை அலுப்பில்லாமல் மனதிடத்துடன் கற்று, பல இன்னல்களை தாண்டி திடமான இப்போதிருக்கும் அம்மாவின் மேல் அன்பும், மதிப்பும் அதிகமாகிறது.
எவ்வளவு பெரிய பிரச்சனை ஆனாலும் இலகுவாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுத்து அதில் திடமாக நிற்கும் இயல்பு அவரிடம் முன்பிருந்தே இருப்பதுதான் என்றாலும் என் பதினைந்து வருட திருமண வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அணுகுமுறையும் எவ்வளவு சரி என்பது தெள்ளத்தெளிவாக இப்போது புரிகிறது.
நீண்டகாலமாக எழுதுவதை விட்டு இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதை நான் சொன்னவுடன் "உடனே ஆரம்பித்து விடு" என்றார். "எழுதினால் யாருக்கேனும் உபயோகமாக எழுத வேண்டும் இல்லாவிட்டால் பயன் இல்லை அம்மா" என்ற போது நெத்தியடியாய் ஒன்று சொன்னார், "உனக்கு பிடித்ததை, நீ அவதானித்த செய்திகளை எழுதுவதற்கு என்ன தயக்கம்? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் உன்னால் எதையுமே செய்ய முடியாது, தயங்காமல் ஆரம்பித்து விடு" என்றார். "எழுதுவது உனக்கு விருப்பம் என்றால் எழுது. என்ன பயன் வேண்டும். அந்த செயல் தரும் நிறைவே பயன் தான்". என்றார். சரி தானே என்று நினைத்த போது, கூடவே மேலும் ஜீரணிக்க சிரமமான சில குண்டுகளையும் தூக்கிப் போட்டார்.
"இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் உருப்படியாக செய்ய தெரியாது, யாராவது ஒரு நோக்கம் கொண்டு எதையாவது முயற்சி செய்தால் அதை விமர்சனம் செய்யத்தெரியும், பின் இவங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்று அங்கலாய்க்க தெரியும். ஏதாவது செய்து அந்த முயற்சியை தடை செய்யத்தெரியும். இது உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதே தான். இந்த தடங்கல்களைத் தாண்டி தைரியமாக என்று செல்கிறாயோ அன்று உனக்கு எல்லா முயற்சியும் பலன் அளிக்கும்" என்றார்.
உண்மை தானே? எல்லாம் நிதர்சனம். சரி முயற்சிப்போமே என எழுத தொடங்கி விட்டேன். நன்றி அம்மா.
எவ்வளவு பெரிய பிரச்சனை ஆனாலும் இலகுவாகவும் தீர்க்கமாகவும் முடிவு எடுத்து அதில் திடமாக நிற்கும் இயல்பு அவரிடம் முன்பிருந்தே இருப்பதுதான் என்றாலும் என் பதினைந்து வருட திருமண வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அணுகுமுறையும் எவ்வளவு சரி என்பது தெள்ளத்தெளிவாக இப்போது புரிகிறது.
நீண்டகாலமாக எழுதுவதை விட்டு இப்போது மீண்டும் தொடங்க வேண்டும் என்ற ஆவல் இருப்பதை நான் சொன்னவுடன் "உடனே ஆரம்பித்து விடு" என்றார். "எழுதினால் யாருக்கேனும் உபயோகமாக எழுத வேண்டும் இல்லாவிட்டால் பயன் இல்லை அம்மா" என்ற போது நெத்தியடியாய் ஒன்று சொன்னார், "உனக்கு பிடித்ததை, நீ அவதானித்த செய்திகளை எழுதுவதற்கு என்ன தயக்கம்? இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் உன்னால் எதையுமே செய்ய முடியாது, தயங்காமல் ஆரம்பித்து விடு" என்றார். "எழுதுவது உனக்கு விருப்பம் என்றால் எழுது. என்ன பயன் வேண்டும். அந்த செயல் தரும் நிறைவே பயன் தான்". என்றார். சரி தானே என்று நினைத்த போது, கூடவே மேலும் ஜீரணிக்க சிரமமான சில குண்டுகளையும் தூக்கிப் போட்டார்.
"இந்த உலகத்தில் யாருக்கும் எதுவும் உருப்படியாக செய்ய தெரியாது, யாராவது ஒரு நோக்கம் கொண்டு எதையாவது முயற்சி செய்தால் அதை விமர்சனம் செய்யத்தெரியும், பின் இவங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது என்று அங்கலாய்க்க தெரியும். ஏதாவது செய்து அந்த முயற்சியை தடை செய்யத்தெரியும். இது உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அதே தான். இந்த தடங்கல்களைத் தாண்டி தைரியமாக என்று செல்கிறாயோ அன்று உனக்கு எல்லா முயற்சியும் பலன் அளிக்கும்" என்றார்.
உண்மை தானே? எல்லாம் நிதர்சனம். சரி முயற்சிப்போமே என எழுத தொடங்கி விட்டேன். நன்றி அம்மா.
9 ஜூலை, 2016
கோடியம்மாள் பாட்டி
வாய்மூடி புன்னைகைக்கும்
அழகான தோழி
நளினமாய் வெளிப்படும்
அன்பும்
கருணையும் கோபமும் கூட
உன் அழகு
எவ்வளவு துன்பம் வந்தாலும்
நல்லதையே செய்யும்
என் அருமை பாட்டி
உன்னிடம் நான்
கற்றுக்கொண்ட
பெரிய படிப்பு அதுதான்
தாத்தாவுக்கு பிடிக்காது என
நிறைய நகை போட்டு பார்க்காமல்
வெளிர் நிறம் உடுத்தாமல்
வாழும் நல்ல மனைவி
எத்தனை முறை
தாத்தா கத்தினாலும்
அமைதியாக அடுத்த வேலையை
பார்க்கும் அன்புப் பாட்டி
ஊர் வம்புக்கு போகாமல்
வெட்டிப் பேச்சு பேசாமல்
இன்று வரை வாழும்
மனிதருள் மாணிக்கம்
யாராவது வலிய வந்து
அவதூறு பேசினாலும்
பெரிய எருமை சாணியை
ஒதுக்குவது போல்
ஒதுக்கிவிட்டு
உன் வேலையை போய்ப் பார் என
சாதாரணமாய் நிலைமையை
சமாளிக்கும் திறமைசாலி
உன் வாடாமல்லி நிற குங்குமம்
வேண்டும் என கேட்டபோது
குனிந்து என் நெற்றியோடு
உன் நெற்றி வைத்து
தலையை ஆட்டி
அழுந்த பதிய வைத்தாய்
தாத்தா இறந்த பின்
ஊருக்கு போய்வந்த நீ
என்னிடம் கேட்டாய்
இந்த வீட்டில் இருக்க
பயமாய் இல்லையா என்று
ஏன் என்று நான் கேட்க
தாத்தா வந்தால் என்ன செய்வாய் என்றாய்
எதுக்கு பயம்?
வாங்கன்னு சொல்லி
உட்கார வைத்து
பேசிக்கிட்டிருப்பேன் என்று நான் சொல்ல
உன் கண்ணில் நிறைந்த கண்ணீரும்
அப்போது நீ தந்த முத்தமும்
இன்னமும் மறக்கலை
தாத்தா இடத்தில் தினமும்
வந்து உட்கார்ந்த அந்த சின்ன குருவிக்கு
தினமும் சாப்பாடு தண்ணீர் வைத்தது
பசுமையாய் நினைவிருக்கு
பாட்டி எனும் சொல்லைவிட
ஆத்தா என்பதே மனதிற்கு
நெருக்கமாயிருக்கு
ஆத்தா எனும் பேரிளம் பெண்
என் முதல் உதாரண மங்கை
வாழ்க பல்லாண்டு
உன் பிறந்த நாளில் வாழ்துகிறேன்
23 ஜனவரி, 2016
ஞானம்
தேடலின் அக்னி தீவிரமாய்
தேடிய மனத்தையே அழிக்க
ஆரம்பித்திருந்த தருணம்
பல பயிற்சிகளையும் முயற்சிகளையும்
கெட்டியாக பிடித்திருந்த நேரம்
புலால் விலக்கி விரதமிருந்து
உடல் வாடி மனம் வாடி
நொந்து நோய் அடைந்த கணம்
முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்த நொடி
சட்டென ஒரு மாயை
மனம் தானே இயங்குவதையும்
ஓடிச்சென்று அதனுடன் குழப்பம் செய்யும்
மனதின் இன்னொரு பகுதி
தனியாக இயங்குவதையும் தெளிவாக உணர்த்திய
அந்த வினாடி மிகச்சிறியது தான்
ஆனால் கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு
விடுதலையான விந்தை
தொடர் மனப்போராட்டம்
முற்றுப்பெற்ற முடிவு
ஓயாத மன அலைகள்
இப்போதும்....
ஆனால் அவை ஒடும் போது
உரசல்கள் இல்லை
தடங்கலற்ற வெள்ளப் பிரவாகம்
இப்படியும் ஒரு ஞான நிலை
இதே பைத்தியக்கார மனதில்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)