எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழ் அணங்கே!! உன் சீர் இளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்!!
31 டிசம்பர், 2010
புத்தாண்டு வாழ்த்துக்கள்....
24 டிசம்பர், 2010
சுள்ளென்று ஒரு காதல்...
"ஏண்டா இப்படிக் கத்துற மெதுவாவே பேசத்தெரியாதா உனக்கு? ஸ்பீக்கர் தொண்டை. இந்த சோ கால்டு ஸ்பீக்கர் தொண்டை தாங்க நம்ம கதையோட ஹீரோ பேரு
வெங்கட் பீ. ஏ. ஹிஸ்டரி கடைசி பெஞ்சு ஆனலும் பாஸ் பண்ணிட்டான். இப்ப நம்ம ஹீரோ வோட புலம்பலை கேப்போம்.
என்ன ? கூப்பிட்ட அப்புறம் பேசாம உக்காந்திருக்க? சொல்லு அடுப்பில வேலையிருக்கு.
"ஆம்மாண்டி உனக்கு அடுப்பில வேலையிருக்கும், பேங்க்ல வேலையிருக்கும் ஆனா எங்கிட்ட பேச மட்டும் நேரமிருக்காது" என்றான். "என்ன தான் கோபமா நான் திட்டினாலும் அவ மேல உண்மையான கோபமே இல்லன்னும் என்னை கவனிக்க வைக்க கத்துறேன்னும் ஈசியா கண்டுபிடிச்சுடுறா"
கொஞ்சம் இரு வரேன்னுட்டு உள்ள போனவ காப்பியோட வெளில வந்தா.
என் கையில் கொடுத்துட்டு எதிர்ல உக்காந்துகிட்டா.
சற்று யோசித்தவன், "சரி கிளம்பு" என்றான்.
"எங்க" நிலா
"நீ வா என் கூட" வெங்கட்
சற்று நேரத்தில் தான் படித்த கல்லூரி பேராசிரியரின் வீட்டின் முன் கொண்டு வண்டியை நிறுத்தினான்.
"இறங்கு" அவள் ஏற்கனவே லோன் கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்தாள். கல்லூரியில் படிக்கும் போது இவர்களின் மேல் மதிப்பும் பரிவும் கொண்ட பேராசிரியர். நிச்சயம் உதவுவார். இது ஏன் நமக்கு தோன்றவேயில்லை? சிந்தித்தபடி நடந்தாள்.
சற்று நேரத்தில் எல்லாம் நல்லபடியாக கையெழுத்தாகியது. "என்ன நிலா இதை ரெண்டு வருஷம் யோசிச்சியா? முன்னாடியே கேட்டிருக்கலாமே". என்றார் பேராசிரியர்.
"தயக்கமா இருந்துச்சு சார்" நிலா.
"காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட எத்தனை பேர்
இப்படி முன்னேற ஆவலோட இருக்காங்க? உங்களுக்கு உதவுறது எனக்கு ரொம்ப திருப்தி ம்மா. நல்லா முன்னுக்கு வாங்க". என்றவரிடமிருந்து ஆசிகளுடன் விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.
23 டிசம்பர், 2010
22 டிசம்பர், 2010
கவிதைப் பிரசவம்....
செவ்வகம் அழைக்கிறது...
ஏதேனும் எழுது என்னுள்
தினமும் எழுது...
இல்லையென்றால் உன்
நாள் முழுமை பெறாது
என்கிறது...
ஏதோ தட்டுகிறேன்
பின் அழிக்கிறேன்..
வரைவாக சேமிக்கிறேன்..
சில சமயம் அதையும்
அழிக்கிறேன்....
பல சமயம் எழுதாமலே
மூடி விடுகிறேன்...
மிகச்சில சமயம்
என்ன எழுத போகிறோம்
எனத் தெரியாமலே
ஆரம்பித்து...
கைகள் தானாக தட்டச்ச
பிறக்கிறது அழகான கவிதை...
அப்போதெல்லாம் என் தாக்கம்
அதனுள் இருப்பதாக
தெரிவதில்லை...
எழுதி முடித்து பின்
சரி பார்க்கும் போது கூட
தோன்றுவதில்லை
மறு முறை படிக்கும் போதும் தான்...
இந்த கவிதை பிரசவத்தில்
என் பங்கு என்ன
யோசித்து யோசித்து
பார்த்தால்
மறுபடியும் பிறப்பது
இன்னொரு கவிதை...
உள்மனம் சொல்கிறது
அந்த கவிதையே நீ தானடி
உன்னில் உன் பங்கை
எப்படி பிரிப்பாய்? என
இது புரியாத புதிராய் நீள
எதற்கும் நிறைவடையா
மனம் ஓடுகிறது
இன்னும் ஒரு கவிதையின்
பிரசவத்துக்காய்...
20 டிசம்பர், 2010
மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (நிறைவுப்பகுதி)
தற்கு என்னை திட்டி விட்டு மீதி முக்கால் சாப்பாட்டை தானம்
கொடுத்தார்கள். அவன் என் தம்பி மட்டும் எப்படியோ சாப்பாட்டிற்கு திட்டு வாங்காமல் சாப்பிட்டு முடிச்சுடுறான்.
பறி போய்விட இருவரும் விழித்தபடி இருந்தோம். உறக்கத்திலிருந்த அம்மா விழித்தவுடன் "அவன் கிட்ட இதுக ரெண்டும் மானத்த வாங்கிடுச்சுங்க" என்று அப்பாவே ஆரம்பித்தார்கள்.
எல்லா கதையும் கேட்டு விட்டு "அய்யோ இதுக ரெண்டும் புத்தகத்தை மெட்ராஸ்ல கடையில் வாங்குச்சுங்க. உங்களுக்கு நியாபகம் இல்லையா?" என்றார் அம்மா.
"அவன் பெரிய இவனாட்டம் அவனோடதை வச்சுகிட்டு தராம ஏமாத்துற மாதிரியில்ல பேசினான். ஏன் எங்கிட்ட அப்பவே சொல்லல நீங்க?" என்ற அப்பாவின் குரலில் கனிவிருந்தது.
"பயமா இருந்துச்சு ப்பா"
"சரி அவன் போய்ட்டான், போனா போகட்டும் விடுங்க"
ஏமாற்றத்திலும் ஒரு நிறைவிருந்தது அப்பாவின் அன்புக்கு பாத்திரமானோம்.
"இதுவே பழக்கம் போலிருக்கு, இப்படிதான் அத்தனை புத்தகமும் சுட்டான் போலிருக்கு, திருட்டு பயல், முறைச்சானா அவன், ராஸ்கல், என்ன நினைச்சிகிட்டான் அவன்." என்ற அம்மாவின் கோபமும் சற்று
நேரத்தில் சரியாகிவிட ரம்மியமான பிற்பகலில் வேளையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்து இறங்கினோம். அதோடு மாயமாய் மறையும் மந்திர மனிதனும் மாயமாய் மறைந்து விட்டான்.
பின் குறிப்பு:
- அந்த மாயமாய் மறையும் மந்திர மனிதன் கதை ஆங்கில ஹாலோ மேன் படத்தின் உல்டா கதை என பிற்பாடு படம் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன் ஹா ஹா...
- தலைப்பை பார்த்து படிக்க வந்து ஏமாந்துவிட்டதாக ஃபீல் பண்னிணா ரொம்ப ஸாரி, உண்மைச்சம்பவம் னு எழுதியிருக்கும் போதே சுதாரிச்சிருக்கனும்....இப்படி எத்தனை பேர்டா கிளம்பியிருக்கிங்க ன்னு நீங்க சொல்றது காதுல கேக்குது.....
- வேலை மெனக்கெட்டு என் இடுகையை படிக்க வந்த அன்பர்களுக்கு என் பணிவான நன்றிகள்! நல்லாயிருந்திச்சுன்னா கருத்துரையில் சொல்லிடுங்க!
மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-4)
"நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
உன் அருகே....."
இப்படித்தான் என் முதல் காதல் ஆரம்பித்தது (அட புத்தகங்களுடன் தாங்க). இன்று வரை ஒரு நொடியும் அலுக்காமல் தொடர்கிறது. சில சமயம் என் பாய்ஃப்ரெண்டு (அதாங்க ஹஸ்பண்டு) கூட பொறாமைப்படும் அளவு அந்த முதல் காதல் இன்னும் பசுமையா இருக்கு. சரி இப்போ கதைக்கு போவோம்.
ஆராய்ச்சியாளர் இருவர் பேசிக்கொள்ளுவதாக அமைந்த அந்த முதல் பத்தி இன்னும் நினைவில் உள்ளது. "காற்றை கண்ணால் பார்க்க முடிவதில்லை ஏன்னா அது ஓளியை தனக்குள்ள ஊடுருவ விடுறதால..அதே போல எல்லா திடப் பொருள்களையும் மறைய வைக்க முடியும் ங்குறது என் நம்பிக்கை. உதாரணத்துக்கு இந்த காகிதம் இருக்கு இதை ஒளி ஊடுருவது போல மாற்றி வைக்க கொஞ்சம் எண்னெய் தடவினா ஆகிடும். அது போல நான் கண்டுபிடித்த மருந்தை சாப்பிடா உயிரினம் கூட மறைந்திடும். ஓவ்வொரு செல்லயும் மறைய வைக்க தேவையான எல்லாத்தையும் அதில் சேர்த்திருக்கேன்."
ஏன் ஏன் இப்படி அவசரப்படுறிங்க? அதான், அதே தான், கடைசி பத்தி வரைக்கும் படிங்க.
முக்கால் வாசி படிச்சிருப்பேன், அப்போது கூடை நிறைய புத்தகங்களுடன் அதாங்க பழைய சஞ்சிகைகள். குமுதம், ஆனந்தவிடன், ஜூனியர் விகடன், கல்கி ன்னு ஒரு பட்டளத்தையே தூக்கிகிட்டு ஒருத்தர் வந்து எங்கள் அருகே உக்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் கொடுத்தார். அப்போதே என்னையும், ஸ்போர்ட்ஸ்டார்ல மூழ்கியிருந்த என் தம்பியையும் முறைத்து பார்த்தார். அப்போது புரியவேயில்லை எனக்கு அவர் முறைத்ததற்கு பொருள்.
18 டிசம்பர், 2010
மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-3)
கடை வாசலுக்கு சென்று, "எங்களுக்கு புத்தகம் வேணும்"
என்ன புத்தகம்?
என் தம்பி "ஸ்போர்ட்ஸ்டார்"
" 15 ரூபாய், வேற என்ன வேணும்?"
அப்போது தான் கண்ணில் பட்டது மாயமாய் மறையும் மந்திர மனிதன் என்னும் சிறுவர் கதை புத்தகம்.
"அது வேணும்"
"சரி 3.50, இந்தாங்க மிச்ச சில்லரை". வாங்கிக்கொண்டு புத்திசாலி என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்துடன் ஓடி வந்து ரயிலில் ஏறினோம். வண்டி அப்போதும் நின்று கொண்டு தானிருந்தது. ஹி ஹி....
சற்று நேரத்தில் அப்பாவும் வந்து விட வண்டி மெல்ல நகர ஆரம்பிக்க ஜன்னல் ஓர சீட்டடுக்கான எங்கள் சண்டை முற்றி பாதி தூரம் வரை அவன் மீதி தூரம் வரை நான் என்று முடிவாகி ஓய்ந்தது, "அப்பா நாங்க இருவரும் புத்திசாலிங்க! தெரியுமா!"
அப்பா, "அப்படியா? யார் சொன்னா?"
"எங்களுக்கு புக் கொடுத்தாங்க"
"யார்?"
"ஹிக்கின் பாதம்ஸ் கடைல"
"அதனால?"
"அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் தருவாங்களாம்!"
"அப்படின்னா அவன் எப்படி கடை நடத்துறது? பாருங்க யார் கேட்டாலும் கொடுக்குறான்"
"அம்மா தான் சொல்லுச்சு"
எங்களையறியாமலே அம்மாவை மாட்டிவிட, "அம்மா சொன்னாளா? அவ புத்தகம் படிக்க ஏதாச்சும் சொல்லி வாங்கவைப்பா"
"அதுக்கு தான் ஸ்போர்ட்ஸ்டார் வாங்கிட்டு வந்திருக்கான் என் பையன்" என்ற அம்மாவின் கவலை அப்போது புரியவில்லை எனக்கு.
பதிலில் குழம்பி ஏமாற்றத்துடன், அப்படின்னா நாங்க புத்திசாலிங்க கிடையாதா? (அதை எப்படி தெரிஞ்சுகாம விடுறது!!??)
" நீங்க புத்திசாலிங்க தான் யார் இல்லனு சொன்னாங்க?" அப்பா.
என்ன டா இது இப்படி குழப்புறாங்களே சரி சொல்லிடாங்க ஒகே!
சரி ஸ்போர்ட்ஸ்டார் நடு பக்கத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த உலககோப்பை கிரிக்கெட் லிருந்து பிரபலங்களின் முழு அளவு படம்
மடித்து ஸ்டேப்பிள் பண்ணியிருக்கும். வேகமாக ஆலன் டேவிட் படத்தை எடுத்து பெட்டி உரையின் ஒரு பக்கத்தில் வைத்தான் தம்பி. சற்று நேரத்தில் அவரவர் சிந்தனைக்குள் அவரவர் காணாமல் போக நான் என் புத்தகத்தில் மூழ்கினேன். மாயமாய் மறையும் மந்திர மனிதனின் உலகிற்குள் மூழ்கியேவிட்டேன்....
17 டிசம்பர், 2010
மாயமாய் மறையும் மந்திர மனிதன்....(உண்மைச்சம்பவம் பகுதி-2)
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அங்க இருக்கு பாருங்க ஒரு புத்தக கடை, ஹிக்கின் பாதம்ஸ் அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் விற்பாங்க தெரியுமா?" என்று எங்கள் அம்மா ஒரு வித்தியாசமான வாக்கியத்தை சொல்ல, எங்கள் (நானும், என் தம்பியும்) இருவரின் முகத்திலும் ஆச்சர்யக்குறி.
சரி செக் பண்ணிடுவோம் என்று எண்ணியவாறே, எங்களுக்கு தருவாங்களா? என்றோம்.
"ம் ம் கேட்டுப்பாருங்க", இது அம்மா.
"ஆனா காசு?" இது என் தம்பி.
அம்மா இருபது ரூபாயை கையில் கொடுத்து "போய் வாங்கிக்கங்க." என்று சொல்ல வண்டியிலிருந்து இறங்கி தட தடவென ஓடினோம்.
16 டிசம்பர், 2010
மாயமாய் மறையும் மந்திர மனிதன்...(உண்மைச்சம்பவம்) (பகுதி-1)
நேரம் : காலை மணி 9. 30
வருடம்: 1988 - 1992 குள் என்றோ ஒரு மே மாத நாள். வருடமொரு முறை மயிலாப்பூரில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றதால் சரியாக நினைவில்லை.
"சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்." ஒலிப்பெருக்கி அறிவிப்பைத் தொடர்ந்து எங்களுக்குள் பதற்றம்.
தண்ணீர் எடுக்க சென்ற அப்பா இன்னும் வரவில்லையே! ட்ரெய்ன் கிளம்பிட்டா?
14 டிசம்பர், 2010
நித்தியின் கவிதை
10 டிசம்பர், 2010
மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
- தன்னை உணருதல் என்றால் என்ன?
- நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...
- மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
- தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
- மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
- உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
- ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.
- எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
- தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
- கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
- அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்
உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.
மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்
எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.
.
மேலும் படிக்க...
8 டிசம்பர், 2010
நேரத்திலிருந்து காணாமல் போகிறேன்
இருண்ட மேகங்களும்
சலசலக்கும் நெற்பயிர்களும்
பொங்கும் சுழிநீரும்
கரைவரை தொட்டுக்கொண்டு
தளும்பித் தளும்பி
வளைந்து ஓடும் நதியழகும்
ச்சோவென்ற மழையும்
நடுங்கும் குளிரும்
வேகமான வழிப்பயணமும்....
என்றோ எங்கோ
எதற்கோ என்னவோ தேடப்போய்
வேறு எதுவாகவோ
மாறிவிட்டதைப் போல்
ஓர் உணர்வு!
மழையில் மழையாகிறேன்
தீயில் தீயாகிறேன்
காற்றில் காற்றாகிறேன்
மேகத்தில் மேகமாகிறேன்
வானத்தில் வானமாகிறேன்
வெற்றிடத்தில் வெற்றிடமாகிறேன்
ஆகவில்லையென்றாலும்
ஆகிடவே விழைகிறேன்
ஒரு மணித்துளிக்குள்
இவ்வளவு யுகங்களா?
ஒரிரு வினாடிகளுக்கு
இத்தனை நீட்சியா?
ஒரு முழு நாளுக்கு
இவ்வளவே நொடிகளா?
என்னுள் என்னென்னவோ
மாற்றங்கள்....
அவ்வப்போது நேரத்திலிருந்து
காணாமல் தான் போகிறேன்...
மலையருவி...
கரும்பாறைகள்
ஓர் ஆயிரத்துக்கும்
குறைவில்லா குரங்குகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஹோவென்ற சத்தம்
அருவியின் லயத்தை
அறிவுறுத்த
அந்தச் சாரலுடன்
மழைச்சாரலும்
சேர்ந்து கொள்ள
மனதின் சக்தி நிலை
மாறுதல்களை
சொல்லிட வார்த்தைகளே
இதுவரை இல்லை
அருகில் சென்று
கால்கள் நனைக்க
ஜில்லென்று குளிர்
ஊசிபோல் இறங்கியது
முழுவதும் இறங்குவதா
வேண்டாமா என்ற
கேள்வி உடனடியாக
விடைபெற்றுக்கொள்ள
அருவியின் மடியில்
அழகான தாலாட்டு....
இயற்கையின் மற்றொரு
குழந்தை...
மலையருவி.
19 நவம்பர், 2010
தியான லிங்கம்
27 அக்டோபர், 2010
பார்த்துப்பழகிய அதே....
அதே ஊர்
அணுஅணுவாய் ரசித்த
அதே இடங்கள்
ஒவ்வொரு மண்ணிலும்
கலந்திருக்கும்
என் அன்பு
உயர உயர
பறந்து சென்று
பறக்காமலே
பெரிய வட்டமாக
சுற்றி இறங்கும்
பிற்பகல் பறவை
எப்போதும் உயிருடன்
இருப்பதை
அறிவுறுத்திக்
கொண்டிருக்கும்
கடிகாரமுள் சத்தம்
என் அன்பு
என் கோபம்
என் அழுகை
என் வெறுப்பு
என் பதற்றம்
என் ஏமாற்றம்
எல்லாம் பார்த்தும்
எனை வெறுக்காத
என் வீடு
காய்கறியோ
கோலமாவோ
ப்லாஸ்டிக் பொருளோ
கூவி விற்கும்
வியாபாரியின் குரல்
காரைக்கால் வானொலி
நிலைய காலை
நேரப்பாடல்கள்
கூடவே
இப்போது நேரம்
காலை ---மணி -- நிமிடங்கள்
அறிவிப்பாளரின் குரல்
வாழ்க்கையின்
பாதியைத் தின்ற
பேருந்துக்காத்திருப்புகள்
தினம் தவிர்க்க
முடியாத
பேருந்துப்பயணங்கள்
வழி நெடுகிலும்
துணை வரும்
அரசலாறு...
பயிலுமிடத்தை
நெருங்கும்போது
காரணமின்றி
அதிகப்படும்
பதட்டம்
அன்பான ஆசிரியர்கள்
அழகான படிப்பு
எல்லாம்
அதிவேகமாய்
அன்னியப்படுத்தபட்ட
சிங்கப்பூர் சம்பந்தம்
முன்பெல்லாம்
இந்தியப்பயணத்தை
வெகுவாய்
எதிர்பார்த்திருந்த
மனம்
இத்தனை வருடங்களில்
நொந்து குழம்பி இனி
சென்றால் சுற்றுலா தான்
என்னும் நிலைக்கு
தெளிந்து
பக்குவப்பட்டுவிட்ட
அறிவு
காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்
வாழ்க்கையே
எளிது! எளிது!
இனிது! இனிது!
30 செப்டம்பர், 2010
நிறைந்த நிறைவிலி..
என்ன செய்தாலும்
நிறைவேயில்லாத மனம்...
எப்போதும் எதையாவது
செய்யாமல் இருப்பதே
தவறு போல் ஏங்கும்...
எதை ஆரம்பித்தாலும்
கால நேரம்
மறந்து அதனுள்
சென்றுவிடும்
சிறு குழந்தை போல்...
மீண்டு வந்தபின்
இவ்வளவு நேரம்
மற்ற வேலைகள்
செய்யவில்லையே
என ஏங்கும்...
நிகழும் நொடிகளை மட்டுமே
தொடர ஆரம்பித்த பின்
அட என்ன இது
இப்படி சமத்துக் குழந்தை
போல் சத்தமில்லாமல்
அலைபாயாமல்
அழகான பரிணாமத்தில்
அதே மனம்.
28 செப்டம்பர், 2010
பிரிட்ஜ் இல்லாத நாட்கள்
±¾¢÷À¡Ã¾ «¾¢÷¢ø ±Ã¢îºø ÅÃÅ¢ø¨Ä Á¡È¡¸ ¦Å̸¡ÄÁ¡¸§Å ²ì¸Á¡¸ þÕó¾ Å¢"Âò¨¾ «Óø ÀÎò¾ ¸¢¨¼ò¾ Å¡öôÒ측¸ ÁÉõ Ìà¸Ä¢ò¾Ð. ±ýÉ ¦ºöÂÄ¡õ?
ӾĢø ¯ûÇ¢Õó¾ ¦À¡Õð¸¨Ç ±ÎòÐ §Á¨ƒÂ¢ø ¨Åì¸ §Á¨ƒ§Â ¿¢¨ÈóÐ ÀÂÓÚò¾¢ÂÐ.
¸Å¨ÄìÌâ º¢Ä ¦À¡Õð¸û
- «¨Ã ¼ôÀ¡ §¾í¸¡ö ÐÕÅø
- ´Õ ¼ôÀ¡ À¡ø
- Àð¼÷
- ÌÆó¨¾Â¢ý ƒ¤Ã ÁÕóÐ
- º¢Ä ¸¡ö¸È¢¸û
- 3 ¦ÃʧÁð À§Ã¡ð¼¡ì¸û (Ò¾¢ÂÐ Å¡í¸ ÁÈóÐ §À¡É ஞாÀ¸ ºì¾¢ìÌ ¿ýÈ¢)
- À¡¾¢ ¾£÷ó¾ Á¡ì Áð¼ý
- ¦¸¡ïº§Á þÕó¾ மாக் º¢ì¸ý
- «¨ÃòÐ ¨Åò¾ §¾¡¨º Á¡×
- º¢Ä Å¢¾¢Ó¨È¸û «ÅºÃÁ¡¸ «Óġ¢É...
- «ýÚ §¾í¸¡ö ÐÕÅÖõ Á¡ì Áð¼ý Á¡ì º¢ì¸ý ±øÄ¡õ §º÷óÐ ´Õ ÌÆõÒ ¾ÂáÉÐ
- À¡¸ü¸¡ö¸û ÀØòР⺽¢ôâì¸û §À¡ø «Æ¸¡¸ Ţâ󾨾 À¡÷òРú¢ì¸ §¿÷ó¾Ð
- ´Õ Å¡ÃòÐìÌõ §ÁÄ¡¸ Å£½¡¸¡Áø Àð¼÷ þýÚõ ±ý¨É À¡÷òÐ º¢Ã¢ì¸¢ÈÐ
- ´Õ À¡ò¾¢Ãò¾¢ø ¾ñ½£÷ ¨ÅòÐ «¾ý §Áø Á¡× ÌŨǨ ¨Åì¸ 2 ¿¡ð¸û ÒǢ측Áø §¾¡¨º ͨÅ¡¸ þÕó¾Ð, ÁÚ ¿¡û 芸ÄóÐ «õÁ¡Å¢ý Ó¨ÈôÀÊ ¦Á¡Ú ¦Á¡Ú §¾¡¨º.
- ¸È¢§ÅôÀ¢¨Ä ¼ôÀ¡Å¢ø ¯ÕÅ¢ ¨Åò¾ ÀÊ ´Õ Å¡ÃÁ¡¸ «ôÀʦ þÕ츢ÈÐ
- §¸Ãð, À£ýŠ ¦ÅǢ¢§Ä§Â ºó§¾¡"Á¡¸ þÕ츢ýÈÉ
- ¾¢ÉÓõ ´Õ ³óÐ ¿¢Á¢¼ ¿¨¼Â¢ø ¦ºøÄìÜÊ Á¡÷즸ðÊø Ò¾¢Â ¸¡ö¸È¢¸û Å¡í¸¢ º¨Áயல்
- §Á¨ƒÂ¢ý §Áø «ò¾¨É ÀÆí¸Ùõ «Äí¸¡ÃÁ¡ö «Î츢 ¨ÅôÀ¾¢ø þô§À¡Ð ±ø§Ä¡Õõ ¿¢¨È§ŠÀÆõ º¡ôÀ¢Î¸¢§È¡õ.
- Ëô ôãºÃ¢ø ¨ÅìÌõ ¯¼ø ¿ÄòÐìÌ §¸Î Å¢¨ÇÅ¢ìÌõ ôâº÷§ÅðÊù §º÷ò¾ ¦À¡Õð¸¨Ç «È§Å ¾Å¢÷ôÀÐ.
- Á¡¾ì¸½ì¸¡¸ ¸¡ö¸È¢ Å¡í¸¢ ¯û§Ç ¨ÅòÐ º¢ÄÅü¨È º¨Á측Á§Ä à츢¦ÂâÅÐ, ƒ¢øÖýÛ þÕìÌ ±Î측§¾ ±ýÚ ±¨¾Â¡ÅÐ ¦¾¡Îõ ÌÆ󨾸¨Ç Å¢ÃðÎÅÐ, ¿ì¦¸ðŠ ±Ûõ À¾ôÀÎò¾ Àð¼ ¯½¨Å ±ñ¦É¢ø ¦À¡Ã¢òÐ ÌüÈ ¯½÷×¼ý ¾¢ýÉ즸¡ÎôÀÐ. «ÅºÃòÐ측¸ Å¡í¸¢ ¨Åò¾¢ÕìÌõ ¦ÃʧÁð À§Ã¡ð¼¡¨Å «ÖôÒ측¸ ÍðÎ ¨ÅôÀÐ §À¡ýÈ ÀÆì¸í¸Ç¢Ä¢ÕóÐ þýŠ¼ýð Ţξ¨Ä
- À¡ø ÁðÎõ ÀÂÓÚò¾¢ì¦¸¡ñÊÕó¾Ð... ´Õ ¿¡û ÓØÐõ ¾ñ½£÷ Å¢¼¡Áø ¸¡ö¨Åì¸ ¸¡¨Ä¢ø ¾¢Èó¾ À¡ø þÃ× Å¨Ã ºÁ÷ò¾¡¸ Å¡º¨ÉԼɢÕì¸...«ó¾ ÀÂÓõ ´Å÷..
- º¨ÁÂĨÈ¢ø ±ô§À¡Ðõ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø §¸ðÌõ ¦ÁøĢ ¯÷ ¯÷ ºò¾õ þøÄ¡Áø ţΠ§ÀèÁ¾¢Â¡ö §¾¡ýÚ¸¢ÈÐ
þÉ¢ ÌÇ¢÷ º¡¾É ¦ÀðÊ §Åñ¼¡õ ±Ûõ ÓÊ×ìÌ ¿¡ý ÅóРŢð¼¡Öõ...âô§À÷ À¡÷ì¸ Åó¾ ¬û ºÃ¢ ¦ºö Ҿ¢Â¾¢ý Ó측ø Å¢¨Ä §¸ð¸ §ÀÕóÐ ¸ð¼½õ ¦¸¡ÎòÐ «ÛôÀôÀð¼¡ý. ±ýɾ¡ý þ¾¢Ä¢ÕìÌõ ±É þ¨½Âò¾¢ø À¡÷ò¾¡ø ²¸ôÀð¼ Å¢Çì¸ôÀ¼íÙ¼ý, ¸¢¨¼ò¾ ¾¸Åø¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ ¿¡§Á À¢Ã¢òÐ À¡÷ô§À¡§Á ±É À¡÷ò¾¡ø ôãº÷ìÌû þÕìÌõ ôÄ¡ŠÊì ¸Å¨Ã ¸ÆüȢɡø ¯û§Ç ±øÄ¡§Á ¦¾÷Á§¸¡ø, à츢 ±Ã¢Ôõ ¦À¡Õð¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ «ùÅÇ× À½õ Å¡í¸¢ ¦¸¡û¸¢È¡÷¸û, ¸õôú÷, â§Ä ŠÅ¢ðî, §Àý, ÜÄ÷, ¸¢Ã¢ø, ÌÆ¡ö¸û ¾Å¢Ã ¦ÅÚõ Ìô¨À ¾¡ý ±øÄ¡õ. À¢Ã¢ðƒ¢ý §ÁÄ¢Õó¾ Á⡨¾ Íò¾Á¡¸ «×ð. ±í§¸ ²Á¡ó§¾¡õ ±É ¿¢¨ÉòÐôÀ¡÷ò¾¡ø þÐÄ ¬ÃõÀòÐÄ þÕó§¾ Àô ¾¡ý ±É þÕÀ¾¡ñθÙìÌ Óý Áɾ¢ø À¾¢ó¾ Å¢ÇõÀà Áí¨¸ Ó¸õ ¿¢ÆÄ¡¸...
þÉ¢ Ò¾¢Â§¾ Å¡í¸¢É¡Öõ Á¡¾ò¾¢ø 15 ¿¡ð¸û ¿¢Úò¾¢§Â ¨Åì¸ ´Õ øº¢Â ¾¢ð¼ò§¾¡Î þÕ츢§Èý.
17 செப்டம்பர், 2010
மார்கழிக்கோலம்
முதல் நாள் இரவே
தின்னையில் வரைந்து
பழகியிருந்த
கலர் கோலம்....
தெருவை அடைத்தபடி
பெரிதாய் உயிர்பெற....
கையில் கலர்களும் கோலமாவும்
காயவைத்த சாரமிழந்த டீத்தூளும்
சலித்தெடுத்த ஆற்றுமணலும்
வேகமாக நிறமாற்றங்களை
சந்திக்க...
மனம் மட்டும் கோலத்திலேயே
அமிழ்ந்திருக்க...
அம்மா, பாட்டி, அத்தைகள்
யாவரும் தூக்கத்திலிருந்து
வெளிவர போராடியபடி...
இந்த டீயை குடித்து விட்டு
மிச்சத்தை போடம்மா...
தலையில் ஒரு கம்பளி
போட்டுகொள்ள கூடாதா?
ரொம்ப குளிருதே...
சின்ன கோலமா போடேன்...
கூஜாவிலிருந்து டம்ளருக்கு
மாறிய சூடான கடை டீயுடன்
உண்மை கரிசனத்துடன்
என் தாத்தா...
எல்லாம் தூங்கரதை பாரு
சின்ன குழந்தையை
கோலம் போட விட்டுட்டு....
என்னால் மற்றவர்களுக்கு
கிடைக்கும் போனஸ் திட்டு...
பஜனை வரும் நேரத்தில்
அவசரமாக கோலத்தை
முடிக்கும் அடுத்த வீட்டு
சின்னப் பாட்டி...
பாம்பு கிடக்கும் நீ
தனியே கொல்லைக்கு
போகாதேன்னு
எத்தனை முறை
சொல்றது...
பதறியபடி
பூசணிப்பூ பறித்து தரும்
என் ஆசைபாட்டி...
தூக்கம் வராமல்
பார்த்துக்கொண்ட
கோவில் ஒலிபெருக்கியின்
சத்தமான பக்தி பாடல்கள்
அரையாண்டு பரிட்சைகள்..
இடையில் படிக்க கிடைத்த
விடுமுறை நாட்கள்...
குளிர் கால மதிய வெயில்
சுட்டெரிக்காமல்
மெல்ல பட்டுச்செல்ல
நாள் முழுதும்
ஊதல் காற்று...
தூரத்தில் கேட்கும்
பறவைகளின் ஒலி
குயிலின் ஒசை
புது பாவாடை சரசரக்க
இனிப்பு வழங்க
வரும் பிறந்த நாள் சிறுமி
இந்த வீட்டுக்கோலம் தான்
ரொம்ப பெரிசா அழகா இருக்கு...
ஆச்சரியத்தபடி போகும்
வழிபோக்கர்கள்...
"யாரு தாத்தா
கோலம் போட்டது?"
"என் பேத்திம்மா"
பெருமையாய்
என் தாத்தா புன்முறுவலுடன்...
என் வீட்டு வாசலில்
சிறிதாய் கோலமிடும் என் அம்மா...
"என்னடீ தாத்தா வீட்டில்
பெரிய கோலமா போடுற
இங்க சின்ன கோலம்
தான் போடமுடியுது
தினமும்"
குளிர் ஒத்துக்கொள்ளாத
அங்கலாய்ப்புடன் அன்பு அம்மா...
"இனி இங்கயும் பெரிய
கோலம் போடுறேம்மா"
இருவீட்டிலும் கோலம்
போட்டு காலை ஏழு மணிக்கு
படுத்துறங்கிய சில நாட்கள்
போகி பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
நாட்களில் மட்டும்
என்னை கோலம் போட விடாத
வில்லி அத்தைகள்...
அன்றெல்லாம் அம்மாவின்
திருப்த்திகாய்
இடம் தெரியா வண்ணம்
பாய் விரித்தது போல் ரங்கோலி
என் வாசலில்...
இள வேனிற் காலம் முழுதும்
மார்கழி நினைவில்....
அடுத்த மார்கழி எப்போது
வருமென காத்திருப்பு...
"அவள் வெளி நாட்டில்
இருக்கிறாள்"
இன்று
பெருமையாய் என்
பெற்றோர்...
ஆறாம் மாடியில்...
அப்பார்ட்மென்ட்
வாசலில்....
இருக்கும் இடத்தில்
கோலமிட
மனமில்லாமல்
அதே நான்....
16 செப்டம்பர், 2010
யோகா
13 செப்டம்பர், 2010
உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாரா?
2 செப்டம்பர், 2010
காலம்
நினைவுகளிலும்
எதிர்காலமெனும்
கற்பனைகளிலும்
நிகழ்காலமெனும்
நிஜத்தை
நின்று ரசிக்காமல்
ஓடி ஓடி எதையோ
தேடுகிறோம்
எதைத்தேடுகிறோம்
என நினைத்துப்பார்த்தால்
பணம், பதவி, சொத்து,
வெற்றி, அங்கிகாரம்
இப்படி
ஏதுவோ ஒன்று
கிடைத்ததா? என்றால்
இல்லவே இல்லை
கிடைத்தாலும்
அதை நினைக்க
நேரமேயில்லை
ஒன்றன் பின் ஒன்றாக
நம் இலக்குகள்
மாற மாற
தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை
தேடலும் ஓடலும்
தவறேயில்லை
வாழ்வின் ஒளியே
அவைதான்
நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்
கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்
எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்
தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்
வாழ்வை ரசிப்போம்
ரசித்தபடியே
ஓடுவோம்
தேடுவோம்
வெற்றியை
கொண்டாடுவோம்
11 ஆகஸ்ட், 2010
19 ஜூலை, 2010
3 ஜூலை, 2010
தேடல்...
அணிவகுப்பு காற்றில்....
அளவில்லா வாகனங்களின்
அணிவகுப்பு வீதியில்....
கணக்கில்லா தூசுகள்...
விதவிதமான ஒலிகள்
காதில் ஒலித்தபடி...
எண்ணிலடங்கா
எண்ணங்கள் மனதில்...
அமைதி தேடி...
ஓடி ஓடி
சோர்ந்து... தளர்ந்து...
ஒரு நாள் வரும் அமைதி
அதுவரை ரசித்திருப்போம்
நம் ஆராவாரத்துடனேயான
அமைதியின் தேடலை....
மலர்..
ஈர மென்மை
பார்த்தவுடன் புத்துணர்வு
காய்ந்திடத்தான் போகிறோம்
எனத்தெரிந்தும் சுணங்காமல்
அழகை அள்ளித்தருகிறாய்...
வண்ணத்திலும் வாசத்திலும்
மனதை கொள்ளை கொள்கிறாய்...
இன்றலர்ந்த மலர் நீ
ஒர் ஆயிரம் அழகை
தோற்கடிக்கும் அரசி நீ
காலையில் பிறப்பும்
மாலையில் இறப்பும்
விரும்பி ஏற்கும்
அதிசய அழகி நீ...
உனை எங்கு பார்த்தாலும்
நின்று விடத்தோன்றுகிறது.
கண்களால் படம்பிடித்து
மனதில் பதித்து
பத்திரப்படுத்த...
எத்தனை முறை
கவி வார்த்தாலும்
போதாது போலவே
உன்னழகை அரைகுறையாய்
சொன்னது போலவே...
தவிப்புடன் நான்...
இயற்கையின்
பிரம்மிப்பில்
முதலிடம் உனக்கு....
கார்பன் மொனாக்ஸைடு...
இரத்த சிவப்பு அணுக்களில் ப்ராண வாயு (ஆக்ஸிஜென்) சேரவேண்டிய இடத்தில் இது சேர்ந்து உடலுக்கு ஊறு செய்யும். இந்த வாயு வின் அளவை சுற்றுப்புறத்தில் இருந்து குறைக்க ஹாப்சலைட் எனப்படும் ஒரு கலவை உதவுகிறது. மாங்கனைஸ், கோபால்ட், காப்பர், சில்வர் இவற்றின் ஆக்ஸைடுகள் கலந்த இக்கலவை கார்பன் மொனாக்ஸைடை உயிருக்கு ஆபத்தில்லாத கார்பன் டை ஆக்ஸைடாக மாற்ற வல்லது.
நெரிசலான சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் இதனை வைப்பதால் விஷவாயுவின் அளவைக் குறைக்கலாம்.
26 ஜூன், 2010
நான் ப்ளாக் ஆரம்பித்த கதை...
25 ஜூன், 2010
கீதாச்சாரம்
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின் நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
ஆகவே
கடமையை செய் பலனை எதிர்பாராதே!
- கீதாசாரம்
22 ஜூன், 2010
அப்பா என்னும் ஓர் அன்புப்பொக்கிஷம்
பிரித்து பார்க்க
பகுத்தறிவுக்கு
பிள்ளையார் சுழியிட்டது நீ
நிஜமெது நிழலெது
தலைகீழாய் பார்த்தாலும்
கண்டுணர கண்ணுக்கு
கற்றுத் தந்தது நீ
உண்மை எது பொய்மை எது
விளங்கித் தெளியும்
பக்குவம் சொன்னது நீ
வினாக்களின்
கூட்டுத்தொந்தரவு நான்
விடைகளின்
பிரதானக் களஞ்சியம் நீ
சளைக்காமல் முகம் சுளிக்காமல்
பதில்களை சொல்லி என்
அறிவுக்கு உரமிட்டது நீ
நீ அழுதால்
நான் அழுவேன் என
அழுவதையே
நிறுத்திக்கொண்டவன் நீ
உன் காலணியை
எனக்கணிவித்து
அக்கினி அணலில்
தீ மிதித்ததும் நீ...
அடைமழையில் குடை
எனக்குமட்டும் பிடித்து
பத்திரமாய் பள்ளியில்
எனைச்சேர்த்து
காய்ச்சலில் நொந்ததும் நீ...
ஏனோ உன்னை
ஒரு மனிதனாகவே
என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை...
அப்பா என்றால் அன்பு..
அப்பா என்றால் சஞ்ஜீவி மலை..
அப்பா என்றால் பொக்கிஷம்..
அப்பா என்றால் அன்பின் ஊற்று..
அப்பா என்றால் அறிவின் சுடர்..
அப்பா என்றால் கணிவின் கருப்பொருள்..
அப்பா என்றால் கடவுள்..
இப்படியெல்லாம் தான்
என் மனதில் பதிந்திருக்கிறாய்...
அடுத்த பிறவி என்று
நமக்கு ஒன்று இருந்தால்
நீ எனக்கு மகனாக வா...
மாபெரும் இந்த
பிறவிக்கடனை
சிறிதேனும்
அடைக்க முடிகிறதா
பார்க்கிறேன்...
நீ என்றென்றும்
உளம் மகிழ
நலம் வாழ
உருகி வேண்டுகிறேன்
இத்தந்தையர் தினத்தில்
உன் மறுபிம்பமான
கடவுளிடம்...
16 ஜூன், 2010
உன் முத்தம்
அடித்தாய்
கர்த்தரை மனதில்
கொண்டு
மறு கன்னத்தை
காட்டினேன்
அதில் உன்
அன்பு முத்தம்
ஒரு அடி
ஒரு கிள்ளு
ஒரு தள்ளு
ஒரு முத்தம்
யாவும் நிச்சயம்
உன் அருகாமையில்....
14 ஜூன், 2010
சந்தியாக்காலம்
இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை
என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..
இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..
இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..
நகரும் கட்டடம் போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...

கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்..
ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...
மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..

எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...
நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...
அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...
காற்றும் இப்போது
சில்லென்று...
கண்களுக்கு
ரசனை
வரும்போது...
தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...
10 ஜூன், 2010
விளம்பரங்கள் படுத்தும் பாடு......
ஏன் ரொம்ப கவலையா இருக்கே?
எனக்கு பணம் வேணும்?
அதுக்கு தான் ‘-----‘ இருக்கே, கவலையவிடு!
என்பதான தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த குழந்தைகளை படுத்தும் பாடு அப்பப்பா...
சிரித்து முடித்து, அவனுக்கு விளக்கி முடித்தபின் ஒரே வருத்தமாகி விட்டது. ஒரு முறை பார்த்தாலே பதிந்துவிடும் குழந்தைகள் மனதில் பல முறை இது போல் பதியவைத்தால் விளைவு??
9 ஜூன், 2010
மனிதனுக்குள் எலி ???!!!

2 ஜூன், 2010
நிறப்பாகுபாடு...
வைக்கவில்லை
நிறப்பாகுபாடு...
மனிதர்களிடமிருந்து
இன்னும் முழுமையாய்
விலகாமலே...
பூக்களிடம் தாவிவிட்டது...
உடைக்கேற்ற
வண்ணமென்ற பெயரில்...
கறுப்பு ரோஜா
பச்சை மல்லி
நீலச் சந்தனமுல்லை
எல்லாமே
சாத்தியம் இப்போது...
சில குடும்பங்கள்
வறுமையின்றி வாழ
உதவமுடியுமானால்...
நானும் அணிவேன்
நிறம் மாற்றிய பூக்களை
விருப்பமில்லாமலேயே...
31 மே, 2010
மரபணுக்கள்..
மரபணு பற்றி எளிதாக தெரிந்து கொள்ள அதனை ஒரு புளூபிரிண்டோடு ஒப்பிடலாம்.
உயிரற்ற பொருளை செய்வதற்கு முதலில் அதன் வரைபடம் தயார் செய்து நீள, அகல உயர அளவுகள் எல்லாம் தேர்வு செய்து எப்படி இருக்க வேண்டும் என யோசித்து அந்த தகுதிகள் எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைப்பது போல் இந்த மரபணு இழைகளில் மனிதனுக்கு தேவையான அத்தனை குணங்களும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் ஒட்டு மொத்த சாப்ட்வேர் அவனின் முடி மற்றும் ரத்த செல்கள் உட்பட ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும். இந்த இழைகளின் வேலை பதிவுகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்ய மற்ற செல் உறுப்பினர்களுக்கு கட்டளை இடுவதும் தான்.
அரசன் பாதுகாப்பாக கோட்டைக்குள் இருந்து கொண்டு ஓலையில் கட்டளை அனுப்புவது போல் இந்த மரபணுக்கள் பத்திரமாக ஒவ்வொரு செல்லின் நியூக்ளியஸ் எனப்டும் பகுதியில் ஹாயாக இருந்து கொண்டு மெசஞ்சர் ஆர் என் ஏ வாக கட்டளைகளை பிறப்பிக்கும். இந்த எம். ஆர். என். ஏக்கள் சைட்டோப்லாசம் பகுதிக்கு வந்து சேர்ந்தவுடன் கட்டளைகளை செயல்படுத்த ஆரம்பிக்கும். இதற்கு உதவி செய்ய நிறைய சிப்பாய்கள் சைட்டோப்லாசம் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும். கட்டளை வந்தவுடன் செயல் படுத்தவே இந்த ஏற்பாடு.
மரபணுக்களை மீண்டும் தொடர்வோம்....
வலையுலக நேரம்...
வலையுலக பயணம்
கட்டணம் பணமாயில்லை
நேரமாக மட்டுமே
நேரத்தை வேலை செய்து
பணமாக்கலாம்...
பணத்தை ஏது செய்தும்
நேரமாக்க முடியாது...
பிள்ளைக்கு பள்ளி விடுமுறை...
வசதியாக என் நேரம்
வலையுலகில் அதிகரித்தபடி....
என் வீட்டு சுட்டிகள்
தொலைக்காட்சியின் முன்
நானோ கணினிக்கு
என்னை அர்பணித்த படி...
இல்லை இனி இது இப்படியில்லை..
மாற்றுவேன் என
முடிவு செய்தேன்
போன விடுமுறையை
போலவே...
29 மே, 2010
அமைதி
ஒர் அதிர்வுமின்றி
அமைதியாய்
நின்றிருக்கிறது
மனப்பரப்பு
நெடுங்காலம்
கழித்து ஒரு
பேரமைதி
சிந்தனைகளின்றி
நிச்சலனமாய்
மனதின் மேற்பரப்பு
எண்ணங்களெல்லாம்
யோசனையில் ஆழ்ந்திருக்க
எப்போதும் ஓடிக்கோடிருக்கும்
அந்த மனக்குதிரை
சத்தமே இல்லாமல்...
சோர்ந்து விட்டதா?
ஓடிப்பயனில்லை
என தெரிந்து கொண்டு விட்டதா?
மெல்லிய இசையில்
மயங்கி விட்டதா?
மழைவிட்ட வானம் போல்
தெளிவாய்....
கழுவி விட்ட தரை போல்
புதிதாய்...
வயிறு நிறைந்த குழந்தை போல்
திருப்தியாய்...
நீர் விட்ட செடி போல்
வளமாய்...
தொடர்ந்து தோற்கும் என்
மனக்குதிரை நிறுத்தப்
போராட்டங்கள்
ஓய்ந்து போன நேரம்...
மாற்ற தேவையில்லா
சிறிய விஷயங்களும்
மாற்ற முடியாத
பெரிய விஷயங்களும்
தெரிந்து தெளிந்த
அலைகளில்லா கடல் போல...
அத்திப்பூ போல...
ஆர்பாட்டம் இல்லா
பேரணி போல...
அமைதியில் என் மனம்..
27 மே, 2010
மனித ஜீனோமிக்ஸ்
ஜீன் தெரபியின் மூலம் நம் உடலில் என்ன வகை நோய்கள் வர சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை கண்டு பிடிப்பது இப்போது
எளிதாக முடியும். கருவில் உள்ள குழந்தையின் ஜீன்களும் பரிசோதிக்கப்பட்டு அப்பா, தாத்தா சொத்தாக வரக்கூடிய மரபுவழி நோய்களை முன்பே தெரிந்து சரியான சிகிச்சை தருகிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜக்ட்
மனித உடலில் உள்ள ஜீன்கள் அட்டவணை தயாரிப்பு. இது நபருக்கு நபர் கைரேகை போல வேறுபடும் ஒரு விஷயம். முதன் முதலில் ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதன் விலை கோடி கணக்கில் இருப்பதும், அதுவே விற்பனைக்கு வந்ததும் சாமானியர்களுக்கு அசாத்திய விலையில் இருப்பதும், பின் 4 வருடங்கள் கழிந்தபின் கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வரும் என்பது போல் அநியாயமாக விலை குறைவதும் நாம் தினம் பார்க்கிறோம்.
அதேபோல் ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜக்டின் வளர்ச்சியை பார்ப்போம்.
- 2001 இல் முதல் டிராஃப்ட் முழுமை பெற $4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகியது.
- 2007இல் இரு நிறுவனங்கள் டிகோட்மீ, 23அன்ட்மீ பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டது. விலை $10 மில்லியன்.
- பின் $1 மில்லியன்.
- 2008 ல் இதற்கு $60,000 தேவைப்பட்டது.
- 2010 ஒவ்வொரு நோயும் கண்டறிய $500 டாலர்கள் மட்டுமே.
கர்ப்பத்திலேயே கண்டுபிடிக்க உதவுகிறது.
தொழில் நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது!!!
26 மே, 2010
என் மகனின் குறும்பு
ஒரு நாள் சாயுங்காலம் பள்ளி விட்டு வரும்போதே மிகவும் சோர்ந்து இருந்தான். என்ன என்றதற்கு இனி நான் அந்த பள்ளிக்கு போக மாட்டேன்.
அடிக்குறாங்க, நீ வா நம்ம சிங்கப்பூருக்கே போய்டுவோம் என்று ஒரே ஆர்ப்பாட்டம். அப்போது ஜூரமும் வந்து விட்டதால் இரு நாட்கள் கழித்து பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்களிடம் பேசினேன். ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள் என்று கேட்டேன். இல்லை அவன் கொஞ்சம் வாலு, சும்மா மிரட்டி, அடிப்பேன்னு சொன்னதுக்கே அழுதிட்டான் என்
று சொல்லி அனுப்பிவிட்டனர். ஆசிரியர்கள் சொன்னதில் சமாதானம் அடையாததால் அன்று இரவு அவனிடம் பேசினேன். தம்பி இப்போ அம்மாகிட்ட உண்மைய சொல்லு...
யார் உன்னை அடித்தது?
எங்க சார்
எப்போது உன்னை அடித்தார்?
க்ளாஸ் ல.
நீ என்ன செஞ்சே?
கம்பால சாரை அடிச்சேன்.
ஐய்யோ ஏன்?
அவரு என்னை அடிச்சாரு. நான் அவரை அதே கம்பால திரும்பி நிக்கும் போது அடிச்சேன்.
அவர் ஏன் உன்னை அடிச்சார்?
எழுதினதுக்கு.
எழுதினத்துக்கா அடிச்சாங்க?
ஆமாம்.
எதால எழுதின?
பேனாவால.
யாரோட பேனா?
சார் பேனா
எதுல எழுதின?
புக்குல
யார் புக்கு?
சாரோட புக்கு
எந்த புக்கு?
எல்லார் பேரும் எழுதியிருக்கும் இல்ல? அதுல கூட டிக் போடுவாங்களே காலைல. (அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்தர்??!!!)
ஹா ஹா இதை ஏன் ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது!! என் மகனின் குறும்பை இன்று நினைத்தாலும் வாய் விட்டு சிரிப்பேன்.
செய்திகள் வாசிப்பது... .......
25 மே, 2010
எண்ணித்துணிக கருமம்
யாரிடமும் சொல்லாமை நலம்.
செய்யமுடியலன்னா கூட யாரும் திட்டமுடியாது பாருங்க!!
18 மே, 2010
கருமை
நீயின்றி மெருகில்லை
எவ்வோவியத்துக்கும்
கோடுகள் எழுதவும்
புள்ளிகள் வரையவும்
நிறத்தை ஆழமாக்கவும்
கூட பயன்படுவாய்...
ஆம் நிறத்தின் ஓரம்
தூங்கும் கருமை நீ...
நிறத்தின் ஓரம் மட்டும் தூங்கு
மனிதர்கள் கண்களின் ஓரம்
உனகென்ன வேலை...?
15 மே, 2010
பாவம் வானவில்...
நீ குடை பிடித்தே நட
உன் பூப்போட்ட
சேலையில்
இருக்கும் நான்கு
வண்ணம் தவிர
மற்றணைத்தும்
உருகி ஊற்றுகின்றன பார்
பாவம் வானவில்...
கனவு மெய்ப்படும்...
கண்களும் காற்றும் சந்திக்க...
இது இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது
கனவுகளோடு நம் உறக்கமும்...
இன்னும் பின்னியிருக்கிறது
நம் லட்சியங்களும்
அதற்கான முயற்சிகளும்...
இது விடியலுக்கு அருகே
சிறு தொலைவில் உள்ள
வைகறை...
பட்டியல் இருக்கிறது
விடியும்முன் எழுந்து
ஒவ்வொன்றாய் முடிக்க...
இன்னும் இரும்பாய் இருக்கிறது
அவ்வப்போது காயம் பட்டாலும்
உடையாத நம் தன்னம்பிக்கை...
இது விடியல்...
இன்னும் நீண்டிருக்கிறது
வெற்றிகான நம் பயணப்பாதை...
மன்றத்தில் தவழும்
தென்றலாய்....
இன்னும்
கிடைத்துக் கொண்டிருக்கிறது
முன்னேற ஊக்கமும்
உற்சாகமும்...
கண்முன்னே விரிகிறது
நம் கனவு மெய்ப்படும் காட்சி...
முயற்சி ஒன்றே வழி
காட்சி நனவாகும்
கனவு மெய்ப்படும்...
14 மே, 2010
அங்காடித்தெரு
13 மே, 2010
கிறுக்கல்
சிங்காரமாய் சிதறின..
சிறகு முளைத்து
வானில் பறந்தன..
கணினியில் அச்சிட
கைகள் பரபரத்தன..
காகிதமாவது தென்படுகிறதா
கண்கள் தேடின..
பேருந்து பயணத்தின்
மத்தியில் நான்..
கணினியும் இல்லை
காகிதமும் இல்லை
வீட்டிற்குள்
வந்திறங்கியவுடன்
அந்த கவிதை மறந்து
வந்து விழுந்தது...
கவிதையில்லை கிறுக்கல்..
உரை நடை
ஆனால் உரை நடை என்பது பக்குவமாய் செய்து பந்தியிட்டு பரிமாற வேண்டிய முழு சமையல். எங்கேனும் ஒரு தவறிருந்தால் கூட சரியான பதில் சொல்ல வேண்டும்.
எழுதித்தான் பார்ப்போமே என ஆரம்பிக்கிறேன். சிறப்பாக்கிக் கொள்ள உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.
12 மே, 2010
4 மே, 2010
நான் தனிமையில் இல்லை...
சென்றுவிட்டாய்...
உன் மனம்
புரியாதது போல்
நான் வெறுப்பேற்றியது...
தவறு தான்
என் இனியவளே..
எனக்கல்லவா தெரியும்
தினம் நான்
கடக்கும் பாதை
முள்ளும் கல்லும்
நிறைந்தது என...
யாவற்றையும்
சரிசெய்து
ஒரு நாள் வருவேன்
உன்னருகில்
அவசரப்படாமல்
காத்திரு...
அதுவரை
என் தோட்டத்தில்
தென்றலாய்
என்னருகிலேயே
வீசிக்கொண்டிரு
காதல் நிறைந்து
கண் பார்க்காமல்
கை தொடாமல்
உன் புகைப்படத்தை
மட்டும் தினம் பார்த்து
உன்னுடன்
பேசிக்கொண்டு
தானிருக்கிறேன்..
என்ன? காதோரம்
நரைமுடி கொஞ்சம்...
பிள்ளைகள்
வளர்ந்த பின்
வரவேண்டியதாய்
இருக்கும்..
பணம் தேவையில்லை
என்பதெல்லாம்
பேச்சில் எல்லோர்க்கும்
இருந்தாலும்..
நீயும் நானும்
நம் பிள்ளைகளும்
நன்றாய் வாழ...
சிக்கிக்கொண்ட
சூழ் நிலை
கைதிகளாய்
நாம்...
எனக்கு நீ
உனக்கு நான்
இதில் எங்கு தனிமை...
நான் தனிமையில்
இல்லை...
என்னவளே...
நீ தான்
என் மனதில்
எப்பொதும்
இருக்கிறாயே...
3 மே, 2010
2 மே, 2010
இயற்கை
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...
சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...
எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...
இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...
மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...
அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...
காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...
வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்
மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...
1 மே, 2010
தன்னம்பிக்கை
உன் முயற்சி அம்பை
குறிபார்த்து உன்
குறிக்கோள் இலக்கை
நோக்கி எய்துவிடு!
முயற்சிகள்
மண்ணாக கரைந்தாலும்
மறுபடியும் உயிர்த்தெழும்
புற்களைப்போல
நிமிர்ந்து வளர்த்திடு..
வெற்றிகள்
உன் வாசல் தேடி
வரிசையில் நின்றிடும்!
29 ஏப்ரல், 2010
புன்னகை
இரண்டும் நீண்டு
கண்கள் இரண்டும் மலர்ந்து
எப்போது சிரிப்பாய்
எனைப்பார்த்து...
என காத்து கிடந்தேன்
காதலிக்கும் போது...
அந்த அழகில்
அமிழ்ந்து கிடந்தேன்
பல காலம்...
இப்போதும் ஏக்கத்துடன்
காத்துத்தான் கிடக்கிறேன்
நீ நம் குழந்தைகளை
கவனிப்பதை முடித்து
என் பக்கம் எப்போது
பார்ப்பாயென்று...
ஒரு பிள்ளை இடையில்
தூக்கி ஒரு பிள்ளை
கையில் பிடித்து
நடக்கும் அழகில்
அமிழ்ந்து தான் போகிறேன்
இப்போதும்....
ஆனால் நீ மட்டும் சகியே
அப்படியே இருக்கிறாயே
அதே புன்னகையுடன்...
நாஸ்த்தி - நாஸ்த்திகன்
படத்தில் வருவதை யோசித்து விட்டு அது நாஸ்த்தி இல்லடா நா
ஸ்த்திகன், அவனுக்கு விளக்க "அப்படியா?" என சிரித்தான்.
19 ஏப்ரல், 2010
சில்லரை
பேருந்து நிலையத்தில்
காத்திருப்பு...
பிச்சை கேட்டு ஓரு
சிறுவன் என் அருகில்...
கிழிந்த ஆடைகளுடன்
தலையில் எண்னெய் இன்றி..
கொடுக்கலாம் தான்
அதன் பின்
நடக்கபோகும் நிகழ்வு??
அங்கிருக்கும் அத்தனை
பிச்சைகாரர்களும் நம்மை
முற்றுகை இடுவதாக..
என் கண்முன்னே
பயமுறுத்த...
சற்றே யோசித்தபடி நான்
அதே கணத்தில்
என் கையிலிருந்து
ஒரு நாணயம்
தரையில் தேங்கியிருந்த
அழுக்குத்தண்ணீரில்
விழ..
சடாரென குனிந்து
எடுத்தான்..
யோசனையாக என்னை
பார்த்தான்..
நீயே வைத்துக்கொள்
என்றேன்..
சொல்லிவிட்டு நாம் ஏன்
எடுக்கவில்லை..
எவ்வளவு சாமர்த்தியம்
அவனுக்கு..
இனி நடத்துனரிடம்
நூறு ரூபாய்
தந்து சில்லரை வாங்கி
அடக்கடவுளே..
சற்று நேரத்தில்
கையில் அரை அளவு தீர்ந்த
தின்பண்ட பாக்கேட்டுடன்
அவனே தான்..
நிஜமாகவே பசியா??
ஏதோ ஒன்று
அறைந்தது போல்
இருந்தது..
எத்தனை
அம்மா பசிக்குது வை
அலட்சிய படுத்தியிருக்கிறோம்...
இனி இவர்களுக்கென
தனிச் சில்லரை
என் பையில்
எப்போதும் இருக்கும்...
கவலை
புதிய அறிவிப்பு:
ஏதேனும் ஒரு காரணம் தேடிப்பிடித்து எப்போதும் கவலைப்படும் ஊழியர்கள் கவனிக்க..
நாள் முழுதும் உங்கள் கவலை வேலையை பாதிக்காமல் இருக்க..ஒரு வழி..
3 மணிக்கு கொடுக்கப்படும் தேனீர் இடைவேளையில் கவலைப்பட நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 1/2 மணி நேரம் கவலைப்படுங்கள் அது போதும், பின்பு 3.30 லிருந்து சரியாக வேலை செய்ய வேண்டும்..
மீறினால் அபராதம் உண்டு.
இதை பார்த்த பின் வந்த சில கமெண்ட்டுகள்.....
முழு நேரம் கவலைப்படும் அன்பர் 1
"அய்யோ எல்லாத்தையும் விட்டுட்டா அப்புறம் யார் தான் அவ்வளவு கவலையும் படுறது. இதெல்லாம் நடக்கிற காரியமா?"
கவலைப்படும் அன்பர் 2
"டீ குடிக்கும் போது கவலை படுவதா? அட போய்யா சான்ஸே இல்ல. என் மனைவியை இப்பல்லாம் டீ நேரத்துல தொலை பேசாதேன்னு சொல்லிட்டேன்"
கவலைப்படும் அன்பர் 3
"சரி பார்க்கலாம்" , அவ்வப்போது தோன்றிய கவலைகளை ஒத்திப்போட்டு 3 மணி அடித்ததும் யோசித்து பார்த்து
"ஏதோ யோசித்து வைத்தோமே நினைவு வரலையே" என கவலைப்பட்டார்.
கவலைப்படும் அன்பர் 4(வடிவேலு ??!!)
"கொடுக்கிற அரைமணி நேரத்தில லொள்ளைப் பாரு. நான் கவலைப் படுறதையே நிறுத்திட்டேன்ப்பா...அப்பாடி நம்பிட்டாய்ங்க.."
கவலைப்படும் அன்பர் 5
"அய்யோ மூணு மணி வரை கவலைப் பட முடியாதே"
கவலைப்படும் அன்பர் 6
"அப்படியா மற்ற நேரத்துல ஜாலியா இருக்க வேண்டியது தான்"
உழைப்பாளி!!!
கவலைப்படும் அன்பர் 7
இவர் மாத்தி யோசி அன்பர் போலும்...
நிறுவனத்தில் ஊழியர்கள் கவலையில்லாம இருக்கனும்னு தான்
இந்த அறிவிப்பு செய்திருக்காங்க. சபாஷ்!
தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி
திறந்து வலை பார்க்க
ஆரம்பித்து
ஒரு மணி நேரம் ஆயிற்று...
தொ. கா வில் உன்
டோரா முடிந்து
டியோகோ வந்தாயிற்று...
போதும் கண்ணா
தொலைக்காட்சி பார்த்தது போதும்...
அன்று உன் சோர்ந்த
முகம் பார்த்து
போதும் அம்மா
எழுதியபின்...
ஒரு நாளில் உன் தொ. கா நேரம்
இனி ஒரு மணி நேரம் தான்...
முடிவான முடிவாயிற்று..
நீ போய் மடி கனிணியை
வைத்துக்கொண்டு
உட்கார்ந்திரு, என்னை விடு என
நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..
நான் சொல்கிறேன்...
வா வெளியில் சென்று
விளையாடலாம்...
காக்கை யை தேட முடியாது
கார் பார்த்துக்கொண்டே
சாப்பிடலாம்...
பூக்களையும், செடிகளையும்
ரசிக்கலாம்...
இதோ கையில்
உன் ஆசை தூரிகையை எடு
சுவர் முழுதும்
ஓவியம் தீட்டலாம்...
இன்னும் தண்ணீரில்
கூட விளையாடலாம்...
உனக்கான நேரம்
இன்னும் ஒரு வருடம் தான்
நீ பள்ளி செல்லும் வரை தான்
வா விளையாடலாம்
போதும் கண்ணா..
தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.
போதும் அம்மா...
மடி கணினியை
மடியை விட்டு
தூக்கி எறி....
என்னை
வைத்துக்கொள்....
தொலைக்காட்சி
பேசியது போதும்
நீ பேசு என்னுடன்...
பொம்மைகளோடு என்
விளையாட்டு போதும்
நீ விளையாடு என்னுடன்...
வலை பதிந்தது போதும்
என் கன்னத்தில்
முத்தம் பதி...
போதும் அம்மா...
ஓவியம்
நான் பேனா
எடுக்கும் போதும்
ஆசையாய் வாங்கி
அம்மா ம்ம் ம்ம்
என் காகிதம் முழுக்க
உன் கிறுக்கல்கள்
காகிதமும் நிறைந்தது
ஓர் மிகச் சிறந்த
இரண்டு வயது
ஓவியனின்
முதல் முயற்சியால்
தயக்கமே இல்லாத
உன் கோடுகள்
வட்டங்கள்
படைப்பாளிக்கு
வானமே எல்லை
உனக்கும் தான்
கூரை மட்டும்
எட்டவில்லை
தப்பித்து விட்டது
சுவற்றில் ஒரு இடம்
மீதியில்லை
மெழுகு வண்ணங்களில்
பல புதிரோவியங்கள்
மேஜையும்,
நாற்காலியும்
ஆழ் நிற சோபாவும்
கூடத்தான்
மெருகேறி இருக்கின்றன
உன் வண்ணக்காய்ச்சலில்
குளித்து
வென்னிற தரையும்
உன் விளையட்டுத்திடல்
எத்தனை முறை
கடிந்து கொண்டாலும்
அழகாய்
பெருமையாய்
ஒரு புன்சிரிப்பு
உன் உதடுகளில்
காலையிலிருந்து
மாலைவரை
நீ தீட்டிய
ஓவியங்களோடு
மாலையிலிருந்து
மறு நாள் காலைவரை
உன் தந்தையின்
சாய விலை ஆதியாக
அடித்த நேரம்
(நல்ல வேளை
ஆள் வைத்து
சாயம் அடிக்க
வில்லை
கூலியும் சேர்ந்திருக்கும்)
அழகு
.....அந்தம் வரை
வரும் பாட்டுக்களையும்
ரசிக்கிறேன்
என் சின்னத் திருமகனின்
ஓவியத்திறமையை
மெச்சியபடி.....
வெற்றியின் விலாசம்
தோற்பதும்
ஏன் வெல்வதும் கூட
மிகச்சாதாரணம் தான்
அவை மற்றவர்களுக்கு
நிகழும்போது
முயற்சி செய்வதும்
தோற்பதும்
இடியாய் இறங்கும்
நமக்கு எனும் போது
நீ தனித்தீவில்லை
தோல்வியின் விளிம்பில்
திசை தடுமாறி நிற்க
இன்று வென்றவர்
கதை அநேகம்
அவர்கள் தழுவிய
தோல்விகள் ஏகம்
முயல்வதும்
வெல்லும் வரை
அயராது முயல்வதுமே
வெற்றிக்கு விலாசம்
உன்னைத் தயார் செய்
வெல்வதற்கு
மனதையும்
அறிவையும்
உடலையும்
ஆன்மாவையும்
தயார் செய்
தனி ஒரு செல்லாக இருந்து
கருவறையில் வளர்ந்து
பின் பிறந்து
ஒரே வருடத்தில்
குப்புற படுத்து
மண்டி போடு
கை ஊன்றி
கால் பதித்து
தட்டு தடுமாறி நடந்து
பின் நன்றாகவும் நடந்து
பேசவும் கற்றுக்கொண்டு …..
உனக்கா முயற்சியில்லை?
எழு மனந்தளராதே
இன்னும் கொஞ்ச தூரம் தான்
வெற்றியை நெருங்க
வெற்றி உனக்கே!
18 ஏப்ரல், 2010
வாழ்க்கை
வந்தே தீரும்...
போக வேண்டிய நாளும்
வந்தே தீரும்...
நம் நிறுத்தம் வந்தவுடன்
இறங்கி விடத்தான்
போகிறொம் என்றாலும்....
பேருந்தில்
சௌகர்யமான இடம்
பார்த்து அமர்கிறோமே...
இறங்கும் நேரம் வரை
வெளியில் வேடிக்கை
பார்த்து...
ரசித்து...
அடுத்து செய்யப்போகும்
வேலைகளை திட்டமிட்டபடி...
அது போலத்தான்
வாழ்க்கை...