7 ஜூன், 2014

மனம் இப்போது...

நோக்கமின்றி காயபடுத்தியதில் 
வலியொன்றும் பெரிதாயில்லை
தாக்கமெதுவும் மனதிலில்லை

கோபத்தில் மோதியதில்
கோபம் தீர்ந்த பின்
வருத்தமும் திருத்தமும் 
மட்டுமே மிஞ்சியது

வேண்டுமென்றே காயப்படுத்துவது
எப்போதுமேயில்லை என்பதில்
மமதை தோன்றுகிறது

தன் தவற்றிலிருந்து
தானே கற்றுகொள்வது
அறிந்து மனம் தெளிந்தது

மனம் வேறு, புத்தி வேறாய் 
நின்று வாதம் செய்யச் செய்ய
இரண்டிலிருந்தும் தள்ளி நின்று 
நான் இரண்டுமல்ல என்பது
புலனாயிற்று

முதலும் முடிவும் தெரியாமல்
குழம்பி கிடக்கும் மனிதம்
சிறு தெளிவிலும் 
பெரிதாகத்தான் திளைக்கிறது

6 ஜூன், 2014

மழையில் ஒரு பயணம்



திகட்ட திகட்ட நனைந்தேன்
குளிர் எலும்புகளில் ஊடுருவ
நடுங்கிக்கொண்டே நடந்தேன்
மழையை விருப்பத்துடன் என்னில்
வாங்கிக்கொண்டேன்

 முன் செல்லும் என் மகன் அறியான்
நான் நனைந்துகொண்டு
அவனிடம் குடை கொடுத்தது
அவனுக்காக மட்டும் அல்ல என்று