காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 டிசம்பர், 2010

காண்பதெல்லாம் காதல்

காமாலைக் காரனுக்கு
காண்பதெல்லாம் மஞ்சள்
காதல் காரனுக்கு
காண்பதெல்லாம் காதல்









காதல் காபி...


அன்பே  நீ தரும் காபி
கூட சொல்கிறது
உன் காதலை...

15 மே, 2010

பாவம் வானவில்...

மழைவிட்ட பின்னும்
நீ குடை பிடித்தே நட
உன் பூப்போட்ட
சேலையில்
இருக்கும் நான்கு
வண்ணம் தவிர
மற்றணைத்தும்
உருகி ஊற்றுகின்றன பார்
பாவம் வானவில்...

4 மே, 2010

நான் தனிமையில் இல்லை...

விடுவிடுவென நீ
சென்றுவிட்டாய்...

உன் மனம்
புரியாதது போல்
நான் வெறுப்பேற்றியது...
தவறு தான்
என் இனியவளே..

எனக்கல்லவா தெரியும்
தினம் நான்
கடக்கும் பாதை
முள்ளும் கல்லும்
நிறைந்தது என...

யாவற்றையும்
சரிசெய்து
ஒரு நாள் வருவேன்
உன்னருகில்

அவசரப்படாமல்
காத்திரு...

அதுவரை

என் தோட்டத்தில்
தென்றலாய்
என்னருகிலேயே
வீசிக்கொண்டிரு

காதல் நிறைந்து
கண் பார்க்காமல்
கை தொடாமல்
உன் புகைப்படத்தை
மட்டும் தினம் பார்த்து
உன்னுடன்
பேசிக்கொண்டு
தானிருக்கிறேன்..

என்ன? காதோரம்
நரைமுடி கொஞ்சம்...

பிள்ளைகள் 
வளர்ந்த பின்
வரவேண்டியதாய்
இருக்கும்..

பணம் தேவையில்லை
என்பதெல்லாம்
பேச்சில் எல்லோர்க்கும்
இருந்தாலும்..


நீயும் நானும்
நம் பிள்ளைகளும்
நன்றாய் வாழ...

சிக்கிக்கொண்ட
சூழ் நிலை
கைதிகளாய்
நாம்...

எனக்கு நீ
உனக்கு நான்
இதில் எங்கு தனிமை...

நான் தனிமையில்

இல்லை...
என்னவளே...

நீ தான்
என் மனதில்
எப்பொதும்
இருக்கிறாயே...

3 மே, 2010

குழல்

காற்று புகுந்து உனை
மீட்டிச் சென்றால் இன்பம்...

அலைகடலென பொங்கும்
என் நினைவலைகள்...

என்னவளே காற்றோடு
விளையாடும் உன் குழல்...

அதனை ஒதுக்கும் போதெல்லாம்
மீட்டும் உன் விரல்கள்...

அமுத கானமோ என்
மனதிற்குள்...

29 ஏப்ரல், 2010

புன்னகை

சகியே உன் உதடுகள்
இரண்டும் நீண்டு
கண்கள் இரண்டும் மலர்ந்து
எப்போது சிரிப்பாய்
எனைப்பார்த்து...

என காத்து கிடந்தேன்
காதலிக்கும் போது...

அந்த அழகில்
அமிழ்ந்து கிடந்தேன்
பல காலம்...

இப்போதும் ஏக்கத்துடன்
காத்துத்தான் கிடக்கிறேன்
நீ   நம் குழந்தைகளை
கவனிப்பதை முடித்து
என் பக்கம் எப்போது
பார்ப்பாயென்று...

ஒரு பிள்ளை இடையில்
தூக்கி ஒரு பிள்ளை
கையில் பிடித்து
நடக்கும் அழகில்
அமிழ்ந்து தான் போகிறேன்
இப்போதும்....

ஆனால்  நீ மட்டும் சகியே
அப்படியே இருக்கிறாயே
அதே புன்னகையுடன்...

26 ஜனவரி, 2010

இதழ்கள்

மென்மை
அழுத்தமான நிறம்
குவிந்திருக்கும் போதும் அழகு
மலர்ந்திருக்கும் போதும் அழகு
நாளெல்லாம் பார்த்துக்கொண்டெ
இருக்கலாம்
கைளிலும் அள்ளிச்செல்லலாம்
போகும் வழியெல்லாம்
நிறைந்திருந்தாலும்
காதலியே உன் முகத்தில்
இருக்கும் இதழ்களை
பார்த்து எத்தனை
போட்டியும் பொறாமையும்
அவற்றுக்கு