மீன் சாகுபடி
மீன் சாகும்படி
சாகச்செய்தவர்
வெட்டுபவரா?
வாங்குபவரா?
சாவதை
பார்த்த பின்னும்
சாப்பிடத் தோன்றுமோ?
குளம் வைத்து
நீர் வைத்து
மீன் வைத்து
அதற்கு
உணவும் வைத்து
ஆள் வைத்து
பராமரித்து பின்
சாகடித்து.....
இனி அசைவம்
சாப்பிடுவதில்லை
என்று நாமெடுக்கும்
சபதம்
மறுமுறை
வாங்கும் வரை தான்
வெட்டுவதை
பார்த்த வேதனை
ஓரரிரு நாட்கள் தான்
பின் சௌகர்யமாய்
உதவுவது நம் மறதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக