31 டிசம்பர், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்....


நேற்று என்பது நினைவிலும்
நாளை என்பது கனவிலும்
இன்று என்பது நிகழ்விலும்
இப்போது என்பதே வாழ்விலும்
மனதிலும் உறுதியாகட்டும்
சகலமும் அன்புமயமாக மாறட்டும்


நம்பிக்கை நிறைந்த இக்கண்களை போல்
புன்னகை உறைந்த இவ்வுதடுகள் போல்
என்றும் அமைதியும் அன்பும்
நிறைந்திட வாழ்க்கையே
வசந்தமாக மாறட்டும்

யாவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

24 டிசம்பர், 2010

சுள்ளென்று ஒரு காதல்...

"ஏய் இங்க வா, என்ன பண்ணிகிட்டு இருக்க அங்க?"
அன்பு அதில் மிச்சமிருப்பதாக கற்பனை செய்து கொண்டோ, தர்க்கத்திடம் சமரசம் செய்து கொண்டோ கரைத்துக்கொண்டிருந்த புளியை அப்படியே வைத்து, கொதித்துக்கொண்டிருந்த பருப்பை சிம்மில் வைத்து விட்டு கூடத்திற்கு சென்றாள் அவள். இரு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து இப்போது தனியே குடித்தனம் செய்யும் ஜோடியில் ஹீரோயின் இவள் பெயர் நிலா,

"ஏண்டா இப்படிக் கத்துற மெதுவாவே பேசத்தெரியாதா உனக்கு? ஸ்பீக்கர் தொண்டை. இந்த சோ கால்டு ஸ்பீக்கர் தொண்டை தாங்க நம்ம கதையோட ஹீரோ பேரு

வெங்கட் பீ. ஏ. ஹிஸ்டரி கடைசி பெஞ்சு ஆனலும் பாஸ் பண்ணிட்டான். இப்ப நம்ம ஹீரோ வோட புலம்பலை கேப்போம்.

'வெளில தாங்க நாங்க காதல் திருமணம் கைகூடுன ஜாலியான ஜோடி, இங்க வந்து பாத்திங்கன்னா தெரியும் என் பிழைப்பை, எப்ப பாத்தாலும் ஆர்டர் போட்டுகிட்டு... இதுக்கு தான் ஒரே வயசுல கல்யானம் கட்ட கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க போலயிருக்கு. அப்போ தெரியல எனக்கு! வெண்ணிலா வை சுருக்கி நிலான்னு
வைத்துக்கொண்டால் தான் ஸ்டைலாம். பாருங்க என்னை போடா வாடா ன்னு தான் கூப்பிடுறா, மத்தவங்களுக்கு எதிர அவ என்னை மரியாதையா பேச முயற்சி செய்யுரப்போ எனக்கு வர்ர சிரிப்ப அடக்க முடியாம நான் திண்டாடுறதை பார்த்து இவளே முடிவு பண்ணிட்டாளாம் இனி போடா வாடா தான்னு. அட அதுவாச்சும் பரவாயில்லைங்க நேத்து ஒரு வேலை பண்ணியிருக்கா பாருங்க... '

என்ன ? கூப்பிட்ட அப்புறம் பேசாம உக்காந்திருக்க? சொல்லு அடுப்பில வேலையிருக்கு.

"ஆம்மாண்டி உனக்கு அடுப்பில வேலையிருக்கும், பேங்க்ல வேலையிருக்கும் ஆனா எங்கிட்ட பேச மட்டும் நேரமிருக்காது" என்றான். "என்ன தான் கோபமா நான் திட்டினாலும் அவ மேல உண்மையான கோபமே இல்லன்னும் என்னை கவனிக்க வைக்க கத்துறேன்னும் ஈசியா கண்டுபிடிச்சுடுறா"

கொஞ்சம் இரு வரேன்னுட்டு உள்ள போனவ காப்பியோட வெளில வந்தா.

என் கையில் கொடுத்துட்டு எதிர்ல உக்காந்துகிட்டா.

"என்ன தெரியனும் உனக்கு. உன் கிட்ட ஆயிரம் முறை சொல்லியாச்சு, நான் லோன் அப்ளை பண்ண போறேன்னு. உன் வருமானத்தை வச்சு மூணு வேளை சாப்பிடலாம் அவ்வளவுதான். என்னையும் வேலைக்கு போகாதன்னு சொல்லிட்ட சரி. போகல. என் ஒய்ஃப் எங்கயும் கைகட்டி நிக்ககூடாதுனு சொல்லிட்ட, பெருமையா இருக்கு, ஆனா எனக்கு இருக்குற மிச்ச நேரத்துல ஏதேனும் சீரியல் பாத்துகிட்டு வீட்டை துடைச்சுகிட்டு இருந்தா நீ சந்தோஷமா இருப்பியா? ஏதாவது செய்யனும்னு எனக்கு தோணுது. ஒரு லட்சம் இருந்தா ஒரு சொந்த தொழில ஆரம்பிச்சுடலாம். கொஞ்ச நாள் கஷ்டபட்டா அப்புறம் நல்லா வந்திடலாம். நீயும் எவ்வளவு காலம் தான் இந்த சொற்ப சம்பளத்துக்கு கஷ்ட படுவ. இவளைக்கட்டுனதுக்கு பேசாம பெத்தவங்க சொன்னவளையே கட்டியிருந்தா இன்னும் எப்படியோ வசதியா வாழலாமேன்னு உனக்கு தோணுதில்ல. என்னால பொறந்த வீட்டு சீதனம் எல்லாம் கொண்டு வர முடியாது. ஏண்டா இவள லவ் பண்ணிணோம்னு நீ நினைச்சிட்டா அன்னைக்கே நான் செத்துடுவேன்." எதற்கும் கலங்காதவள் இன்று கண்ணீரோடு அவன் எதிரில்.

"என்னை புரிஞ்சிகிட்டது அவ்வளோதானா? உன்னை கஷ்ட்டபடாம காப்பாத்தனும்னு தானே டி நான் இவ்வளவும் செய்யுறேன்." என்றான் நிராயுதபாணியாய்.

"அது தான் கஷ்டமாயிருக்கு எனக்கு. எவ்வளவு பாரத்தை உன் மேலயே சுமத்துறது? இதுக்கு உன்னையும் கூட கூட்டிட்டு போகலாமின்னு தான் இத்தனை நாள் காத்திருந்தேன். நீ வர்ரதாயில்ல. என்ன தான் சமாதானம் ஆகிட்டாலும் என் வீட்டுக்கோ உன் வீட்டுக்கோ போய் நிக்க முடியாது. அதான் நானே போனேன். தப்பா? அப்படியும் ஏதாச்சும் ஷூரிட்டி இல்லாம லோன் ஒகே ஆகாதுன்னு சொல்றாங்க" நிலா.

சற்று யோசித்தவன், "சரி கிளம்பு" என்றான்.

"எங்க" நிலா

"நீ வா என் கூட" வெங்கட்

சற்று நேரத்தில் தான் படித்த கல்லூரி பேராசிரியரின் வீட்டின் முன் கொண்டு வண்டியை நிறுத்தினான்.

"இறங்கு" அவள் ஏற்கனவே லோன் கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்தாள். கல்லூரியில் படிக்கும் போது இவர்களின் மேல் மதிப்பும் பரிவும் கொண்ட பேராசிரியர். நிச்சயம் உதவுவார். இது ஏன் நமக்கு தோன்றவேயில்லை? சிந்தித்தபடி நடந்தாள்.

சற்று நேரத்தில் எல்லாம் நல்லபடியாக கையெழுத்தாகியது. "என்ன நிலா இதை ரெண்டு வருஷம் யோசிச்சியா? முன்னாடியே கேட்டிருக்கலாமே". என்றார் பேராசிரியர்.

"தயக்கமா இருந்துச்சு சார்" நிலா.

"காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்ட எத்தனை பேர்

இப்படி முன்னேற ஆவலோட இருக்காங்க? உங்களுக்கு உதவுறது எனக்கு ரொம்ப திருப்தி ம்மா. நல்லா முன்னுக்கு வாங்க". என்றவரிடமிருந்து ஆசிகளுடன் விடை பெற்று வீட்டுக்கு வந்தார்கள்.

எவ்வளவு நாள் கனவு, எப்படி ஒரு உதவி, நிமிடத்தில் செய்து விட்டானே இவன். தன் மேல் இவனுக்கு அன்பில்லையோ என சந்தேகபட்டதை நினைத்து வெட்கப்பட்டாள். அவன் கைகளை பிடித்துக் கொண்டு "தாங்க்ஸ் டா" என்றாள். "இன்னும் நீ என்னை புருஷனாவே ஏத்துக்கலை, கூட படிச்ச ஃப்ரெண்டா தான் நினைக்கிற...  ஏத்துக்கிட்டிருந்தா  தள்ளி நின்று  நன்றி சொல்லமாட்டே" என்றவனை நன்றியுடன் பார்த்த அவள் அணைத்து விட்டிருந்த அடுப்பை மீண்டும் பற்ற வைத்தாள் இந்த முறை ஈடுபாட்டோடு....

23 டிசம்பர், 2010

காண்பதெல்லாம் காதல்

காமாலைக் காரனுக்கு
காண்பதெல்லாம் மஞ்சள்
காதல் காரனுக்கு
காண்பதெல்லாம் காதல்









காதல் காபி...


அன்பே  நீ தரும் காபி
கூட சொல்கிறது
உன் காதலை...

22 டிசம்பர், 2010

கவிதைப் பிரசவம்....

வெற்றுக்கட்டம் இல்லை
செவ்வகம் அழைக்கிறது...
ஏதேனும் எழுது என்னுள்
தினமும் எழுது...
இல்லையென்றால் உன்
நாள் முழுமை பெறாது
என்கிறது...
ஏதோ தட்டுகிறேன்
பின் அழிக்கிறேன்..
வரைவாக சேமிக்கிறேன்..
சில சமயம் அதையும்
அழிக்கிறேன்....
பல சமயம் எழுதாமலே
மூடி விடுகிறேன்...
மிகச்சில சமயம்
என்ன எழுத போகிறோம்
எனத் தெரியாமலே
ஆரம்பித்து...
கைகள் தானாக தட்டச்ச
பிறக்கிறது அழகான கவிதை...
அப்போதெல்லாம் என் தாக்கம்
அதனுள் இருப்பதாக
தெரிவதில்லை...
எழுதி முடித்து பின்
சரி பார்க்கும் போது கூட
தோன்றுவதில்லை
மறு முறை படிக்கும் போதும் தான்...
இந்த கவிதை பிரசவத்தில்
என் பங்கு என்ன
யோசித்து யோசித்து
பார்த்தால்
மறுபடியும் பிறப்பது
இன்னொரு கவிதை...
உள்மனம் சொல்கிறது
அந்த கவிதையே நீ தானடி
உன்னில் உன் பங்கை
எப்படி பிரிப்பாய்? என
இது புரியாத புதிராய் நீள
எதற்கும் நிறைவடையா
மனம் ஓடுகிறது
இன்னும் ஒரு கவிதையின்
பிரசவத்துக்காய்...

20 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (நிறைவுப்பகுதி)

இன்னும் கொஞ்சம்   நேரம் சென்றதும் கதை முடிந்தது. தம்பிடம் போட்ட ஜன்னலோர இருக்கை ஒப்பந்தம் அடுத்த பகுதிக்கு வர நான் ஓரத்திலும் அவன் நடுவிலும் மாறி அமர பயணம் தொடர்ந்தது. ரயிலில் சாப்பாடு வாங்கி அப்பா தர எல்லோரும் சாப்பிட்டோம். வழக்கம் போல் முழு சாப்பாடு சாப்பிடாத
தற்கு என்னை திட்டி விட்டு மீதி முக்கால் சாப்பாட்டை தானம்
கொடுத்தார்கள்.  அவன் என் தம்பி மட்டும் எப்படியோ சாப்பாட்டிற்கு திட்டு வாங்காமல் சாப்பிட்டு முடிச்சுடுறான்.
இந்த களேபரத்தில் எல்லாம் மறந்து,  வேடிக்கை பார்ப்பதில் மனம் லயித்திருக்க, அங்கு வந்த அவர் அதான் புத்தகம் கொடுத்து படிக்க சொன்ன ஆள் எல்லோர் கையிலிருந்தும் புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ பெற்றுக்கொண்டு  நகர்ந்தார், இல்லை மீண்டும் என் பக்கம் திரும்பி ஒரு முறை முறைத்து பாப்பா அந்த புத்தகத்தை கொடு என்று கேட்டார். நான் தயங்க, என் அப்பாவுக்கு அவர் புத்தகத்தை தர மாட்டேன் என்று சொல்வதாக புரிந்து விட, கையிலிருந்து வேகமாக பிடுங்கி கொடுத்துவிட்டார்.  நாம் வாங்கினாலும் கொடுத்து விட வேண்டுமோ என்ற சந்தேகத்துடன் நான் குழம்பி, கேட்டால் திட்டு கிடைக்குமோ என அமைதியாயிருந்து விட்டேன். சற்று நேரத்தில் தம்பி கையிலிருந்த ஸ்போர்ட்ஸ்டாரும்
பறி போய்விட  இருவரும் விழித்தபடி இருந்தோம். உறக்கத்திலிருந்த அம்மா விழித்தவுடன் "அவன் கிட்ட இதுக ரெண்டும் மானத்த வாங்கிடுச்சுங்க" என்று அப்பாவே ஆரம்பித்தார்கள்.
எல்லா கதையும் கேட்டு விட்டு "அய்யோ இதுக ரெண்டும் புத்தகத்தை மெட்ராஸ்ல கடையில் வாங்குச்சுங்க. உங்களுக்கு  நியாபகம் இல்லையா?" என்றார் அம்மா.
"அவன் பெரிய இவனாட்டம் அவனோடதை வச்சுகிட்டு தராம ஏமாத்துற மாதிரியில்ல பேசினான். ஏன் எங்கிட்ட அப்பவே சொல்லல நீங்க?" என்ற அப்பாவின் குரலில் கனிவிருந்தது.
"பயமா இருந்துச்சு ப்பா"
"சரி அவன் போய்ட்டான், போனா போகட்டும் விடுங்க"
ஏமாற்றத்திலும் ஒரு நிறைவிருந்தது அப்பாவின் அன்புக்கு பாத்திரமானோம்.
"இதுவே பழக்கம் போலிருக்கு, இப்படிதான் அத்தனை புத்தகமும் சுட்டான் போலிருக்கு, திருட்டு பயல், முறைச்சானா அவன், ராஸ்கல், என்ன நினைச்சிகிட்டான் அவன்." என்ற அம்மாவின் கோபமும் சற்று
நேரத்தில் சரியாகிவிட ரம்மியமான பிற்பகலில் வேளையில் மயிலாடுதுறை ஜங்ஷனுக்கு வந்து இறங்கினோம். அதோடு மாயமாய் மறையும் மந்திர மனிதனும் மாயமாய் மறைந்து விட்டான்.

பின் குறிப்பு:
  1. அந்த மாயமாய் மறையும் மந்திர மனிதன் கதை ஆங்கில ஹாலோ மேன் படத்தின் உல்டா கதை என பிற்பாடு படம் பார்த்த போது தான் தெரிந்து கொண்டேன் ஹா ஹா... 
  2. தலைப்பை பார்த்து படிக்க வந்து ஏமாந்துவிட்டதாக ஃபீல் பண்னிணா ரொம்ப ஸாரி, உண்மைச்சம்பவம் னு எழுதியிருக்கும் போதே சுதாரிச்சிருக்கனும்....இப்படி எத்தனை பேர்டா கிளம்பியிருக்கிங்க ன்னு நீங்க சொல்றது காதுல கேக்குது.....
  3. வேலை மெனக்கெட்டு என் இடுகையை படிக்க வந்த அன்பர்களுக்கு என் பணிவான நன்றிகள்! நல்லாயிருந்திச்சுன்னா கருத்துரையில் சொல்லிடுங்க!

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-4)

அந்த கதையை படித்து முடிக்கும் வரை ஒரு முறை கூட புத்தகத்தை கீழே வைக்கவில்லை. சிறுவர் மலர், கோகுலம் யங்க் வோர்ள்ட் தவிர  நான் படித்த முதல் நாவல் எனச் சொல்லாம்.
  "நேற்று வரை  நேரம் போகவில்லையே
   உனதருகே  நேரம் போதவில்லையே
   எதுவும் பேசவில்லையே
   இன்று ஏனோ
   எதுவும் தோன்றவில்லையே
   இது எதுவோ
   இரவும் விடியவில்லையே
   அது விடிந்தால்
   பகலும் முடியவில்லையே
   உன் அருகே....."
இப்படித்தான் என் முதல் காதல் ஆரம்பித்தது (அட புத்தகங்களுடன் தாங்க).  இன்று வரை ஒரு நொடியும் அலுக்காமல் தொடர்கிறது. சில சமயம் என் பாய்ஃப்ரெண்டு (அதாங்க ஹஸ்பண்டு) கூட பொறாமைப்படும் அளவு அந்த முதல் காதல் இன்னும் பசுமையா இருக்கு. சரி இப்போ கதைக்கு போவோம்.

ஆராய்ச்சியாளர் இருவர் பேசிக்கொள்ளுவதாக அமைந்த அந்த முதல் பத்தி இன்னும் நினைவில் உள்ளது.  "காற்றை கண்ணால் பார்க்க முடிவதில்லை ஏன்னா அது ஓளியை தனக்குள்ள ஊடுருவ விடுறதால..அதே போல எல்லா திடப் பொருள்களையும்  மறைய வைக்க முடியும் ங்குறது  என் நம்பிக்கை. உதாரணத்துக்கு இந்த காகிதம் இருக்கு இதை ஒளி ஊடுருவது போல மாற்றி வைக்க கொஞ்சம் எண்னெய் தடவினா ஆகிடும். அது போல நான் கண்டுபிடித்த மருந்தை சாப்பிடா உயிரினம் கூட மறைந்திடும். ஓவ்வொரு செல்லயும் மறைய வைக்க தேவையான எல்லாத்தையும் அதில் சேர்த்திருக்கேன்."

ஏன் ஏன் இப்படி அவசரப்படுறிங்க? அதான், அதே தான், கடைசி பத்தி வரைக்கும் படிங்க.

முக்கால் வாசி படிச்சிருப்பேன், அப்போது கூடை நிறைய புத்தகங்களுடன் அதாங்க பழைய சஞ்சிகைகள். குமுதம், ஆனந்தவிடன், ஜூனியர் விகடன், கல்கி ன்னு ஒரு பட்டளத்தையே தூக்கிகிட்டு ஒருத்தர் வந்து எங்கள் அருகே உக்கார்ந்து இருந்தவர்களுக்கு எல்லாம் கொடுத்தார். அப்போதே என்னையும், ஸ்போர்ட்ஸ்டார்ல மூழ்கியிருந்த என் தம்பியையும் முறைத்து பார்த்தார். அப்போது புரியவேயில்லை எனக்கு அவர் முறைத்ததற்கு பொருள். 
தொடரும்....

18 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன் உண்மைச்சம்பவம் (பகுதி-3)

தான் புத்திசாலியா இல்லையா என தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் இருக்காது?
கடை வாசலுக்கு சென்று, "எங்களுக்கு புத்தகம் வேணும்"
என்ன புத்தகம்?
என் தம்பி "ஸ்போர்ட்ஸ்டார்"
" 15 ரூபாய்,  வேற என்ன வேணும்?"
அப்போது தான் கண்ணில் பட்டது மாயமாய் மறையும் மந்திர மனிதன் என்னும் சிறுவர் கதை புத்தகம்.
"அது வேணும்"
"சரி 3.50, இந்தாங்க மிச்ச சில்லரை". வாங்கிக்கொண்டு புத்திசாலி என நிரூபிக்கப்பட்ட சந்தோஷத்துடன் ஓடி வந்து ரயிலில் ஏறினோம். வண்டி அப்போதும் நின்று கொண்டு தானிருந்தது. ஹி ஹி....
சற்று நேரத்தில் அப்பாவும் வந்து விட வண்டி மெல்ல நகர ஆரம்பிக்க ஜன்னல் ஓர சீட்டடுக்கான எங்கள் சண்டை முற்றி பாதி தூரம் வரை அவன் மீதி தூரம் வரை நான் என்று முடிவாகி ஓய்ந்தது, "அப்பா நாங்க இருவரும் புத்திசாலிங்க! தெரியுமா!"
அப்பா, "அப்படியா? யார் சொன்னா?"
"எங்களுக்கு புக் கொடுத்தாங்க"
"யார்?"
"ஹிக்கின் பாதம்ஸ் கடைல"
"அதனால?"
"அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம் தருவாங்களாம்!"
"அப்படின்னா அவன் எப்படி கடை  நடத்துறது? பாருங்க யார் கேட்டாலும் கொடுக்குறான்"
"அம்மா தான் சொல்லுச்சு"
 எங்களையறியாமலே அம்மாவை மாட்டிவிட, "அம்மா சொன்னாளா? அவ புத்தகம் படிக்க ஏதாச்சும் சொல்லி வாங்கவைப்பா"
"அதுக்கு தான் ஸ்போர்ட்ஸ்டார் வாங்கிட்டு வந்திருக்கான் என் பையன்" என்ற அம்மாவின் கவலை அப்போது புரியவில்லை எனக்கு.
பதிலில் குழம்பி ஏமாற்றத்துடன்,  அப்படின்னா நாங்க புத்திசாலிங்க கிடையாதா? (அதை எப்படி தெரிஞ்சுகாம விடுறது!!??) 
" நீங்க புத்திசாலிங்க தான் யார் இல்லனு சொன்னாங்க?" அப்பா.
என்ன டா இது இப்படி குழப்புறாங்களே சரி சொல்லிடாங்க ஒகே!
சரி ஸ்போர்ட்ஸ்டார் நடு பக்கத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த உலககோப்பை கிரிக்கெட் லிருந்து பிரபலங்களின் முழு அளவு படம்
மடித்து ஸ்டேப்பிள் பண்ணியிருக்கும். வேகமாக ஆலன் டேவிட் படத்தை எடுத்து பெட்டி உரையின் ஒரு பக்கத்தில் வைத்தான் தம்பி. சற்று நேரத்தில் அவரவர் சிந்தனைக்குள் அவரவர் காணாமல் போக நான் என் புத்தகத்தில் மூழ்கினேன். மாயமாய் மறையும் மந்திர மனிதனின் உலகிற்குள் மூழ்கியேவிட்டேன்....
தொடரும்...

17 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன்....(உண்மைச்சம்பவம் பகுதி-2)

"இன்னும் நேரமிருக்கு. அப்பா வந்திடுவாங்க,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அங்க இருக்கு பாருங்க ஒரு புத்தக கடை, ஹிக்கின் பாதம்ஸ் அங்க புத்திசாலிங்களுக்கு மட்டும் தான் புத்தகம்  விற்பாங்க தெரியுமா?" என்று எங்கள்  அம்மா ஒரு வித்தியாசமான வாக்கியத்தை சொல்ல, எங்கள் (நானும், என் தம்பியும்) இருவரின் முகத்திலும் ஆச்சர்யக்குறி. 
சரி செக் பண்ணிடுவோம் என்று எண்ணியவாறே,  எங்களுக்கு தருவாங்களா? என்றோம்.
"ம் ம் கேட்டுப்பாருங்க", இது அம்மா.
"ஆனா காசு?" இது என் தம்பி.
அம்மா இருபது ரூபாயை கையில் கொடுத்து "போய் வாங்கிக்கங்க." என்று சொல்ல வண்டியிலிருந்து இறங்கி தட தடவென ஓடினோம்.
           தொடரும்....

16 டிசம்பர், 2010

மாயமாய் மறையும் மந்திர மனிதன்...(உண்மைச்சம்பவம்) (பகுதி-1)

இடம்      : தென்னக ரயில் நிலையம். எழும்பூர், சென்னை.
நேரம்     : காலை மணி 9. 30
வருடம்: 1988 -  1992  குள் என்றோ ஒரு மே மாத நாள். வருடமொரு முறை மயிலாப்பூரில் இருக்கும் தாத்தா பாட்டி வீட்டுக்கு சென்றதால் சரியாக நினைவில்லை.

"சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் புறப்படும்." ஒலிப்பெருக்கி அறிவிப்பைத் தொடர்ந்து எங்களுக்குள் பதற்றம்.
தண்ணீர் எடுக்க சென்ற அப்பா இன்னும் வரவில்லையே!  ட்ரெய்ன் கிளம்பிட்டா?

தொடரும்.....








14 டிசம்பர், 2010

நித்தியின் கவிதை

அப்க்க்க்க்டெக்ன்மொஹீயீஜ்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்ல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்
ஊப்ப்ப்ப்ப்ப்ஃர்ஸ்டுவ்வ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்
ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்
ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்ஃஸ்
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ழ்
12344444567890000000


என் மூன்று வயது மகனின் முதல் கவிதை. ...
அவனுக்கு தெரிந்த ஏ பி சி யும் எண்களும்..
தமிழ் தட்டச்சில் உருவம் மாறி...

10 டிசம்பர், 2010

மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....

பொதுவாக படிப்பது என்றாலே குதூகலமான செயல் எனக்கு. அதிலும் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பேஷன் மாறுவதைப்போல என் அபிமானமும் புல் தாவரத்திலிருந்து ஏரொ நாட்டிகல் தொழில்னுட்பம் வரை ஒன்று விடாமல் ஓயாமல் தாவுவதுண்டு. அதற்கேற்றார்போல் சிங்கை தேசியக் கிளை நூலகமும் பத்து நிமிட நடையில் சென்றடையும் இடத்திற்கு தானாகவே இடம்பெயர வீட்டை விட்டு இறங்கினால் கால்கள் தாமாகவே அங்கு தான் செல்கின்றன. சமீப காலமாக ஆன்மிகம் கவனமீர்க்கிறது.
  • தன்னை உணருதல் என்றால் என்ன?
  • நம் யுனிவர்ஸ் தோன்றியது எப்படி? (பெரு வெடிப்பு கொள்கை-big bang theory என்னை சமாதானப்படுத்தவில்லை) அப்படியே இருந்தாலும் ஏன் தோன்றியது?
இவைதான் இப்போது என்னைக்குடையும் கேள்விகள். அவை பற்றிய நூல்களையும் வலை உலாவிலும் தேடியதில் கண்ணில் பட்டது எழுத்தாளார் பாலகுமாரனின் சிந்தனைகள்...
முதல் கேள்விக்கு இந்த கருத்துக்கள் உதவும். நம்மை நாமே அறிந்து கொள்ள இவை ஆற்றும் பணிகள் கொஞ்சமல்ல. அவற்றில் சில...

  • மனிதனுடைய கர்வத்தை அசிங்கமாக்குவது மரணம்....
  • தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்குத் தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும்
  • மிகவும் உற்றுக் கவனித்தால் நமது தேவைகள் மூன்றாம் மனிதரின் பாராட்டுக்காக ஏற்பட்டவை. மற்றவர்கள் பொறாமையோடு பார்ப்பது நம்மில் பலருக்குப் பிடித்த விஷயம்.
  • உண்மையாய் பேச, மென்மையாய் வாழ பலபேருக்கு தெரியவில்லை. அப்படி வாழ்வதில் விருப்பமும் இல்லை.
  • ஜெயித்தலோடு எந்த யுத்தமும் முடிவதே இல்லை. வெற்றிக்குப் பிறகே யுத்தம் கடுமையாகிறது. எதிரி மூர்க்கமாகிறான். கூர்மையாகிறான். யுத்தம் முடிந்து போய் பழிவாங்குதல் வந்து விடுகிறது. வெற்றி பெற்றவர் அசரவே முடியாது போகிறது. தோல்வியை விட வெற்றிதான் பெரிய வேதனை என்பது பலருக்குப் புரியவில்லை.


  • எதிர்காலம் பற்றி ஏங்கியவருக்கும் இறந்த காலம் பற்றி நொந்தவருக்கும் உடல் வாடும். நிலைத்தவருக்கு உள்ளே சிவம் தோன்றும். சிவமாய் மாற்றும்.
  • தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
  • கூரிய அறிவாலும், ஆழ்ந்த பக்தியாலும் இறைவன் கண்ணுக்குத் தெரிவானோ.. சத்தியத்தை அறிய சத்தியமாகவே இரு. திருவருள் வசப்பட்டு அதனாலே அதை அடையலாம். உனது உன்னுதலால் எதுவும் முடியாது. அகந்தையின் முயற்சி இதில் மட்டும் உதவாது.
  • அகந்தை அழிக்கும் முதல் படி தான் யார் என்று கேட்டுக்கொள்வது. தான் யார் என்று அறியும் நோக்கத்தோடு யோசிப்பவனை நிலை நிறுத்தத்தான்


    உருவ வழிபாடு. ஒன்றில் மனசு நிலைப்பட மற்றவை காணாது போகும்.

    மற்றவை தொந்திரவு இல்லாதபோது ஒப்புக்கொண்ட ஒன்றையும் எடுத்து எறிந்துவிட முடியும்



  • எது மிகப்பெரிய வெற்றி? எதுவும் வேண்டாத நிலையே மிகப்பெரிய வெற்றி. எல்லாம் இருக்கிறது என்று மனம் அமைதியாய் இருக்கிற நிலையே மிகப்பெரிய வெற்றி. எவரோடும் நெல்முனை அளவும் பிணக்கு இல்லை என்ற மனோநிலையே மிகச்சிறந்த வெற்றி. யாரைப் பற்றி நினைக்கிறபோதும் முகத்தில் ஒரு புன்னகை தோன்றுகிற நிலையே அற்புதமான வெற்றி.

    .
    மேலும் படிக்க...
தேடல் தொடரும் வரை இடுகைகளும் தொடரும்.

8 டிசம்பர், 2010

நேரத்திலிருந்து காணாமல் போகிறேன்

குளிர் காற்றும்

இருண்ட மேகங்களும்

சலசலக்கும் நெற்பயிர்களும்

பொங்கும் சுழிநீரும்

கரைவரை தொட்டுக்கொண்டு

தளும்பித் தளும்பி

வளைந்து ஓடும் நதியழகும்

ச்சோவென்ற மழையும்

நடுங்கும் குளிரும்

வேகமான வழிப்பயணமும்....

என்றோ எங்கோ


எதற்கோ என்னவோ தேடப்போய்

வேறு எதுவாகவோ

மாறிவிட்டதைப் போல்
ஓர் உணர்வு!

மழையில் மழையாகிறேன்

தீயில் தீயாகிறேன்

காற்றில் காற்றாகிறேன்

மேகத்தில் மேகமாகிறேன்

வானத்தில் வானமாகிறேன்

வெற்றிடத்தில் வெற்றிடமாகிறேன்

ஆகவில்லையென்றாலும்

ஆகிடவே விழைகிறேன்

ஒரு மணித்துளிக்குள்


இவ்வளவு யுகங்களா?

ஒரிரு வினாடிகளுக்கு

இத்தனை நீட்சியா?

ஒரு முழு நாளுக்கு

இவ்வளவே நொடிகளா?

என்னுள் என்னென்னவோ

மாற்றங்கள்....

அவ்வப்போது நேரத்திலிருந்து

காணாமல் தான் போகிறேன்...

மலையருவி...

வரவேற்கும் ஈர மண்
கரும்பாறைகள்
ஓர் ஆயிரத்துக்கும்
குறைவில்லா குரங்குகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஹோவென்ற சத்தம்
அருவியின் லயத்தை
அறிவுறுத்த
அந்தச் சாரலுடன்
மழைச்சாரலும்
சேர்ந்து கொள்ள
மனதின் சக்தி நிலை
மாறுதல்களை
சொல்லிட வார்த்தைகளே
இதுவரை இல்லை
அருகில் சென்று
கால்கள் நனைக்க 
ஜில்லென்று குளிர்
ஊசிபோல் இறங்கியது
முழுவதும் இறங்குவதா
வேண்டாமா என்ற
கேள்வி உடனடியாக
விடைபெற்றுக்கொள்ள
அருவியின் மடியில்
அழகான தாலாட்டு....
இயற்கையின் மற்றொரு
குழந்தை...
மலையருவி.

19 நவம்பர், 2010

தியான லிங்கம்

தீராத தாகமும்
ஓயாத தேடலும்
எனை துளைத்தெடுக்கும்
கேள்விகளும்
ஏது செய்தாலும்
கிடைக்காத நிறைவும்
கணப்பொழுதும் நீங்காத
செய்ய வேண்டியதை
செய்யாமலிருப்பது போன்ற
குற்ற உணர்வும்
சதா எனை ஆட்டிப்படைக்க
என்ன தேடுகிறேன் என்ற
தெளிவே இல்லாமல்
தேடுவதும்
இங்கு தான் எங்கோ
இருக்கிறது வழி
தேடு தேடு என்று
மனம் கட்டளை இடுவதுமே
வாழ்க்கையாகி போனது
இவற்றிலிருந்து தப்பிக்க
நானாக இழுத்து
விட்டுக்கொண்டிருக்கும்
புதிய வேலைகளும்
சீக்கிரமே அவையும்
அலுத்து விடுவதும்
என்றுமே அலுக்காத
புத்தகம் படிக்கும்
பழக்கமும்
ஒவ்வொரு தேடலுக்கும்
முடிவுண்டு நிச்சயமாக
என்ற எண்ணமும்
வீண் போகவில்லை
கையில் கிடைத்தன
காட்டுப்பூ
அத்தனைக்கும்
ஆசைபடு
ஆயிரம் ஜன்னல்
எனும் நூல்கள்
தியான லிங்கத்தையும்
சத்குருவையும் பார்க்க
ஆவல் வந்தது
அதற்கான நேரமும்
கூடி வந்தது
என்னவோ விஞ்ஞானம்
எதுவோ என்னை ஈர்த்தது
தினம் ஒரு மணி நேரம்
போராடியபின் அடையும்
தியான நிலை
தியான லிங்கத்தின்
சன்னதியில்
இரு நிமிடங்களில்
கிடைத்தது
பேரமைதியும்
பயமேயில்லாத
மனமும்
என்னவோ ஒரு
அசெளகர்யமும்
சத்குருவின்
தரிசனத்தின் போது
உணர நேர்ந்தது
சந்தேகத்துடன் சில சமயம்
கண்மூடித்தனமாக சில சமயம்
கடவுள் பக்தி உள்ளதால்
கடவுளாக யாரையுமே
ஏற்றுக்கொள்வது
சாத்தியமேயில்லை எனக்கு
நல்ல ஒரு வழி காட்டியாக
உணர்கிறேன் த்குருவை

27 அக்டோபர், 2010

பார்த்துப்பழகிய அதே....

பார்த்துப்பழகிய
அதே ஊர்

அணுஅணுவாய் ரசித்த
அதே இடங்கள்

ஒவ்வொரு மண்ணிலும்
கலந்திருக்கும்
என் அன்பு

உயர உயர
பறந்து சென்று
பறக்காமலே

பெரிய வட்டமாக
சுற்றி இறங்கும்
பிற்பகல் பறவை

எப்போதும் உயிருடன்
இருப்பதை
அறிவுறுத்திக்
கொண்டிருக்கும்
கடிகாரமுள் சத்தம்

என் அன்பு
என் கோபம்
என் அழுகை
என் வெறுப்பு
என் பதற்றம்
என் ஏமாற்றம்
எல்லாம் பார்த்தும்
எனை வெறுக்காத
என் வீடு

காய்கறியோ
கோலமாவோ
ப்லாஸ்டிக் பொருளோ
கூவி விற்கும்
வியாபாரியின் குரல்

காரைக்கால் வானொலி
நிலைய காலை
நேரப்பாடல்கள்

கூடவே
இப்போது நேரம்
காலை ---மணி -- நிமிடங்கள்
அறிவிப்பாளரின் குரல்

வாழ்க்கையின்
பாதியைத் தின்ற
பேருந்துக்காத்திருப்புகள்

தினம் தவிர்க்க
முடியாத
பேருந்துப்பயணங்கள்

வழி நெடுகிலும்
துணை வரும்
அரசலாறு...

பயிலுமிடத்தை
நெருங்கும்போது
காரணமின்றி
அதிகப்படும்
பதட்டம்

அன்பான ஆசிரியர்கள்
அழகான படிப்பு

எல்லாம்
அதிவேகமாய்
அன்னியப்படுத்தபட்ட
சிங்கப்பூர் சம்பந்தம்

முன்பெல்லாம்
இந்தியப்பயணத்தை
வெகுவாய்
எதிர்பார்த்திருந்த
மனம்

இத்தனை வருடங்களில்
நொந்து குழம்பி இனி
சென்றால் சுற்றுலா தான்
என்னும் நிலைக்கு
தெளிந்து
பக்குவப்பட்டுவிட்ட
அறிவு

காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்

வாழ்க்கையே

எளிது! எளிது!
இனிது! இனிது!

30 செப்டம்பர், 2010

நிறைந்த நிறைவிலி..

எதுவுமே போதாது போல
என்ன செய்தாலும்
நிறைவேயில்லாத மனம்...

எப்போதும் எதையாவது
செய்யாமல் இருப்பதே
தவறு போல் ஏங்கும்...

எதை ஆரம்பித்தாலும்
கால நேரம்
மறந்து அதனுள்
சென்றுவிடும்
சிறு குழந்தை போல்...

மீண்டு வந்தபின்
இவ்வளவு நேரம்
மற்ற வேலைகள்
செய்யவில்லையே
என ஏங்கும்...

நிகழும் நொடிகளை மட்டுமே
தொடர ஆரம்பித்த பின்
அட என்ன இது
இப்படி சமத்துக் குழந்தை
போல் சத்தமில்லாமல்
அலைபாயாமல்
அழகான பரிணாமத்தில்
அதே மனம்.

28 செப்டம்பர், 2010

பிரிட்ஜ் இல்லாத நாட்கள்

±¾¢÷À¡Ã¾ «¾¢÷¢ø ±Ã¢îºø ÅÃÅ¢ø¨Ä Á¡È¡¸ ¦Å̸¡ÄÁ¡¸§Å ²ì¸Á¡¸ þÕó¾ Å¢"Âò¨¾ «Óø ÀÎò¾ ¸¢¨¼ò¾ Å¡öôÒ측¸ ÁÉõ Ìà¸Ä¢ò¾Ð. ±ýÉ ¦ºöÂÄ¡õ?

ӾĢø ¯ûÇ¢Õó¾ ¦À¡Õð¸¨Ç ±ÎòÐ §Á¨ƒÂ¢ø ¨Åì¸ §Á¨ƒ§Â ¿¢¨ÈóÐ ÀÂÓÚò¾¢ÂÐ.

¸Å¨ÄìÌâ º¢Ä ¦À¡Õð¸û

  1. «¨Ã ¼ôÀ¡ §¾í¸¡ö ÐÕÅø
  2. ´Õ ¼ôÀ¡ À¡ø
  3. Àð¼÷
  4. ÌÆó¨¾Â¢ý ƒ¤Ã ÁÕóÐ
  5. º¢Ä ¸¡ö¸È¢¸û
  6. 3 ¦ÃʧÁð À§Ã¡ð¼¡ì¸û (Ò¾¢ÂÐ Å¡í¸ ÁÈóÐ §À¡É ஞாÀ¸ ºì¾¢ìÌ ¿ýÈ¢)
  7. À¡¾¢ ¾£÷ó¾ Á¡ì Áð¼ý
  8. ¦¸¡ïº§Á þÕó¾ மாக் º¢ì¸ý
  9. «¨ÃòÐ ¨Åò¾ §¾¡¨º Á¡×
  • º¢Ä Å¢¾¢Ó¨È¸û «ÅºÃÁ¡¸ «Óġ¢É...
  • «ýÚ §¾í¸¡ö ÐÕÅÖõ Á¡ì Áð¼ý Á¡ì º¢ì¸ý ±øÄ¡õ §º÷óÐ ´Õ ÌÆõÒ ¾ÂáÉÐ
  • À¡¸ü¸¡ö¸û ÀØòР⺽¢ôâì¸û §À¡ø «Æ¸¡¸ Ţâ󾨾 À¡÷òРú¢ì¸ §¿÷ó¾Ð
  • ´Õ Å¡ÃòÐìÌõ §ÁÄ¡¸ Å£½¡¸¡Áø Àð¼÷ þýÚõ ±ý¨É À¡÷òÐ º¢Ã¢ì¸¢ÈÐ
  • ´Õ À¡ò¾¢Ãò¾¢ø ¾ñ½£÷ ¨ÅòÐ «¾ý §Áø Á¡× ÌŨǨ ¨Åì¸ 2 ¿¡ð¸û ÒǢ측Áø §¾¡¨º ͨÅ¡¸ þÕó¾Ð, ÁÚ ¿¡û 芸ÄóÐ «õÁ¡Å¢ý Ó¨ÈôÀÊ ¦Á¡Ú ¦Á¡Ú §¾¡¨º.
  • ¸È¢§ÅôÀ¢¨Ä ¼ôÀ¡Å¢ø ¯ÕÅ¢ ¨Åò¾ ÀÊ ´Õ Å¡ÃÁ¡¸ «ôÀʦ þÕ츢ÈÐ
  • §¸Ãð, À£ýŠ ¦ÅǢ¢§Ä§Â ºó§¾¡"Á¡¸ þÕ츢ýÈÉ
  • ¾¢ÉÓõ ´Õ ³óÐ ¿¢Á¢¼ ¿¨¼Â¢ø ¦ºøÄìÜÊ Á¡÷즸ðÊø Ò¾¢Â ¸¡ö¸È¢¸û Å¡í¸¢ º¨Áயல்
  • §Á¨ƒÂ¢ý §Áø «ò¾¨É ÀÆí¸Ùõ «Äí¸¡ÃÁ¡ö «Î츢 ¨ÅôÀ¾¢ø þô§À¡Ð ±ø§Ä¡Õõ ¿¢¨È§ŠÀÆõ º¡ôÀ¢Î¸¢§È¡õ.
  • Ëô ôãºÃ¢ø ¨ÅìÌõ ¯¼ø ¿ÄòÐìÌ §¸Î Å¢¨ÇÅ¢ìÌõ ôâº÷§ÅðÊù §º÷ò¾ ¦À¡Õð¸¨Ç «È§Å ¾Å¢÷ôÀÐ.
  • Á¡¾ì¸½ì¸¡¸ ¸¡ö¸È¢ Å¡í¸¢ ¯û§Ç ¨ÅòÐ º¢ÄÅü¨È º¨Á측Á§Ä à츢¦ÂâÅÐ, ƒ¢øÖýÛ þÕìÌ ±Î측§¾ ±ýÚ ±¨¾Â¡ÅÐ ¦¾¡Îõ ÌÆ󨾸¨Ç Å¢ÃðÎÅÐ, ¿ì¦¸ðŠ ±Ûõ À¾ôÀÎò¾ Àð¼ ¯½¨Å ±ñ¦É¢ø ¦À¡Ã¢òÐ ÌüÈ ¯½÷×¼ý ¾¢ýÉ즸¡ÎôÀÐ. «ÅºÃòÐ측¸ Å¡í¸¢ ¨Åò¾¢ÕìÌõ ¦ÃʧÁð À§Ã¡ð¼¡¨Å «ÖôÒ측¸ ÍðÎ ¨ÅôÀÐ §À¡ýÈ ÀÆì¸í¸Ç¢Ä¢ÕóÐ þýŠ¼ýð Ţξ¨Ä
  • À¡ø ÁðÎõ ÀÂÓÚò¾¢ì¦¸¡ñÊÕó¾Ð... ´Õ ¿¡û ÓØÐõ ¾ñ½£÷ Å¢¼¡Áø ¸¡ö¨Åì¸ ¸¡¨Ä¢ø ¾¢Èó¾ À¡ø þÃ× Å¨Ã ºÁ÷ò¾¡¸ Å¡º¨ÉԼɢÕì¸...«ó¾ ÀÂÓõ ´Å÷..
  • º¨ÁÂĨÈ¢ø ±ô§À¡Ðõ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø §¸ðÌõ ¦ÁøĢ ¯÷ ¯÷ ºò¾õ þøÄ¡Áø ţΠ§ÀèÁ¾¢Â¡ö §¾¡ýÚ¸¢ÈÐ

þÉ¢ ÌÇ¢÷ º¡¾É ¦ÀðÊ §Åñ¼¡õ ±Ûõ ÓÊ×ìÌ ¿¡ý ÅóРŢð¼¡Öõ...âô§À÷ À¡÷ì¸ Åó¾ ¬û ºÃ¢ ¦ºö Ҿ¢Â¾¢ý Ó측ø Å¢¨Ä §¸ð¸ §ÀÕóÐ ¸ð¼½õ ¦¸¡ÎòÐ «ÛôÀôÀð¼¡ý. ±ýɾ¡ý þ¾¢Ä¢ÕìÌõ ±É þ¨½Âò¾¢ø À¡÷ò¾¡ø ²¸ôÀð¼ Å¢Çì¸ôÀ¼íÙ¼ý, ¸¢¨¼ò¾ ¾¸Åø¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ ¿¡§Á À¢Ã¢òÐ À¡÷ô§À¡§Á ±É À¡÷ò¾¡ø ôãº÷ìÌû þÕìÌõ ôÄ¡ŠÊì ¸Å¨Ã ¸ÆüȢɡø ¯û§Ç ±øÄ¡§Á ¦¾÷Á§¸¡ø, à츢 ±Ã¢Ôõ ¦À¡Õð¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ «ùÅÇ× À½õ Å¡í¸¢ ¦¸¡û¸¢È¡÷¸û, ¸õôú÷, â§Ä ŠÅ¢ðî, §Àý, ÜÄ÷, ¸¢Ã¢ø, ÌÆ¡ö¸û ¾Å¢Ã ¦ÅÚõ Ìô¨À ¾¡ý ±øÄ¡õ. À¢Ã¢ðƒ¢ý §ÁÄ¢Õó¾ Á⡨¾ Íò¾Á¡¸ «×ð. ±í§¸ ²Á¡ó§¾¡õ ±É ¿¢¨ÉòÐôÀ¡÷ò¾¡ø þÐÄ ¬ÃõÀòÐÄ þÕó§¾ Àô ¾¡ý ±É þÕÀ¾¡ñθÙìÌ Óý Áɾ¢ø À¾¢ó¾ Å¢ÇõÀà Áí¨¸ Ó¸õ ¿¢ÆÄ¡¸...

þÉ¢ Ò¾¢Â§¾ Å¡í¸¢É¡Öõ Á¡¾ò¾¢ø 15 ¿¡ð¸û ¿¢Úò¾¢§Â ¨Åì¸ ´Õ øº¢Â ¾¢ð¼ò§¾¡Î þÕ츢§Èý.

17 செப்டம்பர், 2010

மார்கழிக்கோலம்

மார்கழி அதிகாலை...

முதல் நாள் இரவே
தின்னையில் வரைந்து
பழகியிருந்த
கலர் கோலம்....

தெருவை அடைத்தபடி
பெரிதாய் உயிர்பெற....

கையில் கலர்களும் கோலமாவும்
காயவைத்த சாரமிழந்த டீத்தூளும்
சலித்தெடுத்த ஆற்றுமணலும்
வேகமாக நிறமாற்றங்களை
சந்திக்க...

மனம் மட்டும் கோலத்திலேயே
அமிழ்ந்திருக்க...

அம்மா, பாட்டி, அத்தைகள்
யாவரும் தூக்கத்திலிருந்து
வெளிவர போராடியபடி...

இந்த டீயை குடித்து விட்டு
மிச்சத்தை போடம்மா...
தலையில் ஒரு கம்பளி
போட்டுகொள்ள கூடாதா?
ரொம்ப குளிருதே...
சின்ன கோலமா போடேன்...

கூஜாவிலிருந்து டம்ளருக்கு
மாறிய சூடான கடை டீயுடன்
உண்மை கரிசனத்துடன்
என் தாத்தா...

எல்லாம் தூங்கரதை பாரு
சின்ன குழந்தையை
கோலம் போட விட்டுட்டு....
என்னால் மற்றவர்களுக்கு
கிடைக்கும் போனஸ் திட்டு...

பஜனை வரும் நேரத்தில்
அவசரமாக கோலத்தை
முடிக்கும் அடுத்த வீட்டு
சின்னப் பாட்டி...

பாம்பு கிடக்கும் நீ
தனியே கொல்லைக்கு
போகாதேன்னு
எத்தனை முறை
சொல்றது...

பதறியபடி
பூசணிப்பூ பறித்து தரும்
என் ஆசைபாட்டி...

தூக்கம் வராமல்
பார்த்துக்கொண்ட
கோவில் ஒலிபெருக்கியின்
சத்தமான பக்தி பாடல்கள்

அரையாண்டு பரிட்சைகள்..
இடையில் படிக்க கிடைத்த
விடுமுறை நாட்கள்...

குளிர் கால மதிய வெயில்
சுட்டெரிக்காமல்
மெல்ல பட்டுச்செல்ல
நாள் முழுதும்

ஊதல் காற்று...

தூரத்தில் கேட்கும்
பறவைகளின் ஒலி
குயிலின் ஒசை

புது பாவாடை சரசரக்க
இனிப்பு வழங்க
வரும் பிறந்த நாள் சிறுமி

இந்த வீட்டுக்கோலம் தான்
ரொம்ப பெரிசா அழகா இருக்கு...
ஆச்சரியத்தபடி போகும்
வழிபோக்கர்கள்...

"யாரு தாத்தா
கோலம் போட்டது?"

"என் பேத்திம்மா"
பெருமையாய்
என் தாத்தா புன்முறுவலுடன்...

என் வீட்டு வாசலில்
சிறிதாய் கோலமிடும் என் அம்மா...

"என்னடீ தாத்தா வீட்டில்
பெரிய கோலமா போடுற
இங்க சின்ன கோலம்
தான் போடமுடியுது
தினமும்"

குளிர் ஒத்துக்கொள்ளாத
அங்கலாய்ப்புடன் அன்பு அம்மா...

"இனி இங்கயும் பெரிய
கோலம் போடுறேம்மா"
இருவீட்டிலும் கோலம்
போட்டு காலை ஏழு மணிக்கு
படுத்துறங்கிய சில நாட்கள்

போகி பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
நாட்களில் மட்டும்
என்னை கோலம் போட விடாத
வில்லி அத்தைகள்...

அன்றெல்லாம் அம்மாவின்
திருப்த்திகாய்
இடம் தெரியா வண்ணம்
பாய் விரித்தது போல் ரங்கோலி
என் வாசலில்...

இள வேனிற் காலம் முழுதும்
மார்கழி நினைவில்....

அடுத்த மார்கழி எப்போது
வருமென காத்திருப்பு...

"அவள் வெளி நாட்டில்
இருக்கிறாள்"
இன்று
பெருமையாய் என்
பெற்றோர்...

ஆறாம் மாடியில்...
அப்பார்ட்மென்ட்
வாசலில்....

இருக்கும் இடத்தில்
கோலமிட
மனமில்லாமல்
அதே நான்....

16 செப்டம்பர், 2010

யோகா

யோகா என்றால் ஒரு தனி மதிப்பு இருக்கிறது, மற்ற உடற்பயிற்சிகள் போலில்லாமல் உடலையும், உள்ளுறுப்புகளையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியாக அது அமைகிறது. எந்த வயதினரும் செய்யக்கூடிய பயிற்சிகள் அதில் உண்டு . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்காக வாழ்வில் சாப்பிடுவது தூங்குவது போல இதையும் ஓர் அங்கமாக பிடிவாதாமாக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே. இதனால் கிடைக்கும் பலன்கள் எண்னற்றவை. இதை தொடர்ந்து செய்து வருவோரை பார்க்கும் போது  நாம் உணரலாம். இவையெல்லாம் நமக்கு நன்றாக தெரிந்தும் தினமும்  நம் வாழ்வில் கடைபிடிப்பதில்லை. அதை தட்டிக்கழிக்க ஆயிரம் காரணங்கள். யோக பயிற்சி மட்டும் நம் வாழ்க்கை முறையானால் வாழ்வே இனிமையாக மாறிவிடும்.

13 செப்டம்பர், 2010

உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாரா?

அட இப்படி ஒரு கதையா? என்று நினைக்கவைத்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்...

மிஸ்டர் சங்கரனுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவர் ஒரு பெரிய குல்லா வியாபரி. பரம்பரையாகவே சங்கரனின் குடும்பம் குல்லா வியபாரம்தான் செய்து வந்தார்கள். எனவே சங்கரனும் குல்லா வியாபாரமே செய்து வந்தார். அவரது தாத்தா குல்லா  விற்பனையில் தனது சாதனைகள், அனுபவங்கள், விற்பனை நுணுக்கங்கள் எல்லாவற்றையும் விரிவாக அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தார். எனவே சங்கரனும் தாத்தாவின் அறிவுரைகளை நினைவில் வைத்து குல்லா விற்பனை செய்து வந்தார்.

ஒரு முறை சங்கரன் ஒரு கிராமத்தில் குல்லா விற்றுவிட்டு அடுத்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். பாதி தூரம் செல்லும் போது ஒரே வெய்யிலாக இருந்ததால் ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு செல்ல தீர்மானித்தார். குல்லா மூட்டையை பாதுகாப்பாக அருகிலேயே வைத்துவிட்டு சற்று கண்ணயர்ந்தார். சற்று நேரத்துக்குப்பிறகு க்றீச் க்றீச் என்ற ஒலி அருகில் கேட்கவே திடுக்கிட்டு கண்விழித்தார். முதலில் மூட்டையை பார்த்தார் ஆ ஒரு குல்லாய் கூட மூட்டையில் இல்லை. அங்குமிங்கும் பார்த்தவர் மரத்தின் மேலிருந்த குரங்கு கூட்டத்தை பார்த்து அசந்து போனார். ஒவ்வொரு குரங்கின் தலையிலும் ஒவ்வொரு குல்லாய். 

ஆனால் சங்கரன் அலட்டிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் இந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என அவருக்கு தாத்தா சொல்லி கொடுத்திருக்கிறார்.  நாம் செய்வதையே குரங்குகளும் திரும்ப செய்யும் எனவும் தலையில் உள்ள ஒரு குல்லாயை வைத்து எல்லாவற்றையும் திருப்பிவிடலாம் என நினைத்தார்.

மரத்தின் மேலிருந்த குரங்குகள் எல்லாம் அவரை பார்த்து பல்லை காண்பித்து இளித்துக்கொண்டிருந்தன.

'சிரிக்கிறீர்களா? முட்டாள் குரங்குகளே உங்களிடமிருந்து எப்படி குல்லாய் வாங்குவது என எனக்கு தெரியும்' என்று மனதிற்குள் சிரித்தவாரே தனது தலையிலிருந்த குல்லாயை தூரமாய் தூக்கி எறிந்து விட்டு அலட்சியமாக மேலே பார்த்தார்.

அட, இது என்ன, ஒரு குரங்கு கூட குல்லாவை தூக்கி எறியவில்லையே என்று நினைத்த போது ஒரு குட்டிக்குரங்கு மரத்திலிருந்து வேகமாக இறங்கி வந்து இவர் வீசி எறிந்த குல்லாவை எடுத்துக்கொண்டு மரத்தின் மேலேறிக்கொண்டது.

சங்கரனுக்கு ஒரே ஆச்சர்யம், என்னங்க ஆதி இப்படி ஆகிப்போச்சே! என்ன கொடும சரவணன் இது!  என்னங்கடா   இது புது தினுசா இருக்கு! உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்றெல்லாம் ரெடிமேட் வசனங்களுடன் அவர் அங்கலாய்க்கும் போது, இன்னொரு அதிர்ச்சி,
அந்த குட்டிக்குரங்கு பேசியது "உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தார்னு நினைச்சுகிட்டியா?"

2 செப்டம்பர், 2010

காலம்

கடந்த காலமெனும்
நினைவுகளிலும்

எதிர்காலமெனும்
கற்பனைகளிலும்

நிகழ்காலமெனும்
நிஜத்தை

நின்று ரசிக்காமல்
ஓடி ஓடி எதையோ
தேடுகிறோம்

எதைத்தேடுகிறோம்
என  நினைத்துப்பார்த்தால்
பணம், பதவி, சொத்து,
வெற்றி, அங்கிகாரம்
இப்படி
ஏதுவோ ஒன்று

கிடைத்ததா? என்றால்
இல்லவே இல்லை

கிடைத்தாலும்
அதை  நினைக்க
நேரமேயில்லை

ஒன்றன் பின் ஒன்றாக
நம் இலக்குகள்
மாற மாற

தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை

தேடலும் ஓடலும்
தவறேயில்லை
வாழ்வின் ஒளியே
அவைதான்

நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்

கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்

எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்

தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்

வாழ்வை ரசிப்போம்
ரசித்தபடியே
ஓடுவோம்
தேடுவோம்

வெற்றியை
கொண்டாடுவோம்

11 ஆகஸ்ட், 2010

வெட்டி பந்தா

பாசிடிவ் திங்கிங்க்
தைரியம்
அஃபிர்மேஷன்

மின்னல்

ஃப்லாஷை அனைக்க மறந்து
வானம் எடுக்கும் புகைப்படம்

ஹைக்கூ...

நவீன திருக்குறள்...

அவ்வளவு ஆழமில்லாவிட்டாலும்

அழகு...

19 ஜூலை, 2010

ப்லாஸ்டர் ஆப் பாரிஸ் வினாயகர்

நான் செய்த முதல் வினாயகர் சிலை...

3 ஜூலை, 2010

தேடல்...

முடிவில்லா அலைவரிசைகளின்

அணிவகுப்பு காற்றில்....

அளவில்லா வாகனங்களின்

அணிவகுப்பு வீதியில்....

கணக்கில்லா தூசுகள்...

விதவிதமான ஒலிகள்

காதில் ஒலித்தபடி...

எண்ணிலடங்கா

எண்ணங்கள் மனதில்...

அமைதி தேடி...

ஓடி ஓடி

சோர்ந்து... தளர்ந்து...

ஒரு நாள் வரும் அமைதி

அதுவரை ரசித்திருப்போம்

நம் ஆராவாரத்துடனேயான

அமைதியின் தேடலை....

மலர்..

உன் இதழ்களோரம்
ஈர மென்மை

பார்த்தவுடன் புத்துணர்வு

காய்ந்திடத்தான் போகிறோம்

எனத்தெரிந்தும் சுணங்காமல்

அழகை அள்ளித்தருகிறாய்...

வண்ணத்திலும் வாசத்திலும்

மனதை கொள்ளை கொள்கிறாய்...

இன்றலர்ந்த மலர் நீ

ஒர் ஆயிரம் அழகை

தோற்கடிக்கும் அரசி நீ

காலையில் பிறப்பும்

மாலையில் இறப்பும்

விரும்பி ஏற்கும்

அதிசய அழகி நீ...

உனை எங்கு பார்த்தாலும்

நின்று விடத்தோன்றுகிறது.

கண்களால் படம்பிடித்து

மனதில் பதித்து

பத்திரப்படுத்த...

எத்தனை முறை

கவி வார்த்தாலும்

போதாது போலவே

உன்னழகை அரைகுறையாய்

சொன்னது போலவே...

தவிப்புடன் நான்...

இயற்கையின்

பிரம்மிப்பில்

முதலிடம் உனக்கு....

கார்பன் மொனாக்ஸைடு...

இது ஒரு விஷ வாயு...வாகனங்களிலிருந்தும், ஜெனரேட்டர்களிலிருந்தும் பின் எங்கெல்லாம் பெட்ரொலியம் எரிகிறதோ அங்கு வெளிப்படும் புகையில் இது இருக்கும். 500 பகுதி காற்றில் ஒரு பகுதி (CO) கார்பன் மொனாக்ஸைடு இருந்தாலே அரைமணியில் உயிரைக்கொல்லும் ஆபத்தான வாயு இது.

இரத்த சிவப்பு அணுக்களில் ப்ராண வாயு (ஆக்ஸிஜென்) சேரவேண்டிய இடத்தில் இது சேர்ந்து உடலுக்கு ஊறு செய்யும். இந்த வாயு வின் அளவை சுற்றுப்புறத்தில் இருந்து குறைக்க ஹாப்சலைட் எனப்படும் ஒரு கலவை உதவுகிறது. மாங்கனைஸ், கோபால்ட், காப்பர், சில்வர் இவற்றின் ஆக்ஸைடுகள் கலந்த இக்கலவை கார்பன் மொனாக்ஸைடை உயிருக்கு ஆபத்தில்லாத கார்பன் டை ஆக்ஸைடாக மாற்ற வல்லது.

நெரிசலான சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் இதனை வைப்பதால் விஷவாயுவின் அளவைக் குறைக்கலாம்.

26 ஜூன், 2010

நான் ப்ளாக் ஆரம்பித்த கதை...

தமிழில் ப்ளாக் எழுதுவது நீண்ட நாட்களாகவே இருந்தாலும் எழுதவேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்ததேயில்லை. படிப்பதோடு சரி. தமிழ் தட்டச்சு மென் பொருளும் தட்டும் முறையும் தெரியாது என்ற சாக்கு வேறு. புத்தகம் படிக்கும் பழக்கமும் நூலகம் செல்வதும் எனக்கு மிக மிக மிக பிடித்த விஷயங்கள். நிறைய படி, நீ ஒரு புத்தகம் எழுதவேண்டும் என மிகச்சிறுவதிலிருந்தே என்னிடம் சொல்லிக்கொண்டிருப்பார் என் அம்மா. இப்போது எழுதச்சொல்லி தூண்டியவர் என் ப்ரியமான தோழி...அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். மிகவும் நன்றி தோழி!!!

என் மகனின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டத்தில் தான் அவரை முதன் முதலில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிலரை பிடித்துவிடும் அல்லவா? அதுபோல் அவரை பார்த்தவுடன் நீண்ட காலம் பழகிய ப்ரியமான தோழி போல் தோன்றியது. சரி என பேச ஆரம்பித்தால் அட நம்மை போலவே இவரும் சிந்திக்கிறாரே என தோன்ற ஆரம்பித்த பிரம்மிப்பு ஒன்றரை ஆண்டுகளாக இன்று வரை தொடர்கிறது. என்னை விட ஒரு படிமேல் என்று தான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருவதிலிருந்து நேர நிர்வாகம் வரை அவரிடமிரிந்து ஏராளமான விஷயங்கள் கற்று கொண்டிருக்கிறேன். எழுதுவதில் இயல்பாக விருப்பம் இருந்தாலும் எழுத என்ன இருக்கிறது என யோசித்து தயங்கி கொண்டிருந்தபோது, கூகுல் வழியான வலைதாவலில் தமிழ் மன்றம் எனும் வலைதளத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் குறிப்பாக (கீதம் அவர்களின் பின்னூட்டங்கள்) உற்சாகமும் அட நம்ம எழுத்தை கூட படிக்கிறார்களே என எண்ண வைத்தது. அந்த நேரத்தில் என் தோழி சிங்கையில் பொதுப்பிரிவு சிறுகதை போட்டி நடப்பதாகச் சொல்லி என்னையும் எழுதச்சொன்னார். தயங்கித் தயங்கி எழுதி அனுப்பினேன். அவரும் அனுப்பினார். எழுதி அனுப்பியதை மறந்ததாக சொல்லிகொண்டு பதில் வருகிறதா என தினமும் வீட்டு தபால் பெட்டியை முற்றுகையிட்டு கொண்டிருந்தேன். முத்தமிழ் விழாவே வந்து விட்டது இனி எங்கே நமக்கு பதில் வரப்போகிறது என அயர்ந்த சமயம், ஒரு நாள் மாலை நேரம் தோழியின் செல் அழைப்பு.... உங்கள் தபால் பெட்டியை பாருங்கள். எனக்கு பரிசு வந்துவிட்டது, உங்களுக்கும் கண்டிப்பாக வந்திருக்கும் என சொன்னார். வேகமாக போய் திறந்து பார்த்தில் ஆச்சர்யம் நிஜம் தான் எனக்கும் பரிசு கிடைத்துவிட்டது. சிறிது நேரம் நம்பவே முடியவில்லை. கிடைத்தது ஊக்கப்பரிசு என்றாலும் அது மிகப்பெரிய சந்தோஷத்தை தந்தது. படிப்பில் முதல் மதிப்பெண் வாங்கி பரிசு பெறும் போது கூட அப்படி இல்லை. முதல் பரிசும் இரண்டாம் பரிசும் பெற்றவர்கள் ஏற்கனவே தங்கமுனைப்பேனா விருது பெற்ற எழுத்தாளர்கள். மற்ற நான்கு இடங்களில் எங்களுக்கு இரண்டு. முதல் கதைக்கே பரிசு என்பது ஒரு மாபெரும் வெற்றி என் கனிப்பில் (என் கதை தமிழ்மன்றம் வலைதளத்தில் சிறுகதை பகுதியில் இருக்கிறது). இப்படித்தான் நான் எழுத ஆரம்பித்தேன். இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய என் ப்ளாக் இப்போது 100 இடுகைகள் முடிந்து 101 வது இடுகைக்கு வந்துவிட்டது. ப்ரியமுடன்......வசந்த் மற்றும் சி. கருணாகரசு இடும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருகிறது. என் தோழியின் ப்ளாக் லிங்க் ஐ அவரின் அனுமதி பெற்று பின்னர் இதில் பதிக்கின்றேன். வசந்த் என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில்,

படிப்பது என்றாலே செய்தித்தாள் படிப்பது மட்டும் தான் என்று கொள்கை வைத்திருக்கும் என் ஹீரோ (என் கணவர்) என் பதிவுகளை படித்து உடனுக்குடன் அழைத்து பாராட்டும் போது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நன்றி ஹீரொ!

அவரின் விருப்பப்படி வீடு முழுதும் கீதாச்சாரம்... வெறும் சுவற்றில் மட்டுமில்லாமல் வாழ்விலும் பின்பற்றும் அவர் மனதிலும்... என் 100 வது பதிவில் அவர் மனதோடு இணைந்த கீதாச்சாரம் இருக்கவேண்டும் என்பதால் பதித்தேன்.
என் ஆத்ம திருப்திக்காக எழுதுவதில் ஊக்கம் அளிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் கோடி!!!

25 ஜூன், 2010

கீதாச்சாரம்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவருடைதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இதுவே வாழ்வின்  நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

ஆகவே
கடமையை செய் பலனை எதிர்பாராதே!

- கீதாசாரம்

ஒற்றுமை


அட என்னைய மாதிரியே இருக்குற...

நான் அப்படியே சாப்பிடுவேன்...

எப்ப கேக் தயாராகுறது?
எப்ப சாப்பிடுறது?
நான் அப்படியே சாப்பிடுவேன்.

வஜ்ராசனம்

 நான் தூங்கலை.... வஜ்ராசனம் செய்யுறேன்.
நிஜமா....!

22 ஜூன், 2010

அப்பா என்னும் ஓர் அன்புப்பொக்கிஷம்

சரி எது தவறெது
பிரித்து பார்க்க

பகுத்தறிவுக்கு

பிள்ளையார் சுழியிட்டது நீ

நிஜமெது நிழலெது

தலைகீழாய் பார்த்தாலும்

கண்டுணர கண்ணுக்கு

கற்றுத் தந்தது நீ

உண்மை எது பொய்மை எது

விளங்கித் தெளியும்

பக்குவம் சொன்னது நீ

வினாக்களின்

கூட்டுத்தொந்தரவு நான்

விடைகளின்

பிரதானக் களஞ்சியம் நீ

சளைக்காமல் முகம் சுளிக்காமல்

பதில்களை சொல்லி என்

அறிவுக்கு உரமிட்டது நீ

நீ அழுதால்

நான் அழுவேன் என

அழுவதையே

நிறுத்திக்கொண்டவன் நீ

உன் காலணியை

எனக்கணிவித்து

அக்கினி அணலில்

தீ மிதித்ததும் நீ...

அடைமழையில் குடை

எனக்குமட்டும் பிடித்து

பத்திரமாய் பள்ளியில்

எனைச்சேர்த்து

காய்ச்சலில் நொந்ததும் நீ...

ஏனோ உன்னை

ஒரு மனிதனாகவே

என்னால் ஏற்றுக்கொள்ள

முடியவில்லை...

அப்பா என்றால் அன்பு..

அப்பா என்றால் சஞ்ஜீவி மலை..

அப்பா என்றால் பொக்கிஷம்..

அப்பா என்றால் அன்பின் ஊற்று..

அப்பா என்றால் அறிவின் சுடர்..

அப்பா என்றால் கணிவின் கருப்பொருள்..

அப்பா என்றால் கடவுள்..

இப்படியெல்லாம் தான்

என் மனதில் பதிந்திருக்கிறாய்...

அடுத்த பிறவி என்று

நமக்கு ஒன்று இருந்தால்

நீ எனக்கு மகனாக வா...

மாபெரும் இந்த

பிறவிக்கடனை

சிறிதேனும்

அடைக்க முடிகிறதா

பார்க்கிறேன்...

நீ என்றென்றும்

உளம் மகிழ

நலம் வாழ

உருகி வேண்டுகிறேன்

இத்தந்தையர் தினத்தில்

உன் மறுபிம்பமான

கடவுளிடம்...

16 ஜூன், 2010

உன் முத்தம்

ஒரு கன்னத்தில்
அடித்தாய்
கர்த்தரை மனதில்
கொண்டு
மறு கன்னத்தை
காட்டினேன்
அதில் உன்
அன்பு முத்தம்
ஒரு அடி
ஒரு கிள்ளு
ஒரு தள்ளு
ஒரு முத்தம்
யாவும்  நிச்சயம்
உன் அருகாமையில்....

14 ஜூன், 2010

நடுங்கும் விரல்கள்

நடுங்கும் விரல்கள்
கேட்கின்றன...

தாங்கும் கையின்
நம்பிக்கையை....

சந்தியாக்காலம்


இளமஞ்சள் வெயிலும்
இதமாயில்லை
தென்றல் காற்றும்
சுகமாயில்லை
என்னே என் தனித்தீவில்
கையில் புத்தகத்துடன் நான்..

இங்கே வந்தும்
புத்தகமா அம்மா?
சிணுங்கும் என்
செல்லத்தின் குரல்..

இடையே வேறு ஒர் சங்கொலி
அட என்ன இது சத்தம்
படித்துக்கொண்டிருந்த
கவனம் சிதறி
நிமிர்ந்த போது..

நகரும் கட்டடம்  போல்
தன் பயணத்தை
துவக்கியிருந்த
ஸ்டார் விர்கோ...


ஆச்சர்யித்தபடி
கண்களை மீண்டும்
புத்தகத்துக்கு
திருப்புமுன்.. 

ஒரு கனம் விருந்தளித்த
அந்தக் காட்சி...


மேற்கில் அந்திசூரியனின்
சிவப்பு வண்ண அமர்க்களம்..








எதிர்திசையில் வெளிர் நீலம்
வெண்மேகத்தையும்
வான்நீலத்தையும்
சாம்பல் நிறமாக்கி பின்
கருமையாக்கவும்
இரவு படும்
ரசிக்கும்படியான அவசரம்...

நடுவானில் இரண்டும்
கலந்த ஊதா
அதிலும் சிவப்பு வெளிச்சம்
அங்கங்கே கீற்றுகளாய்...

அதுவரை
தூங்கிக்கொண்டிருந்த
விளக்குகளின்
கண்விழிப்பு
ஒவ்வொன்றாய்...

காற்றும் இப்போது
சில்லென்று...

கண்களுக்கு
ரசனை
வரும்போது...

தினமும் நாம்
பார்க்கும்
காட்சிகளும்
கவிதைகளாய்...

10 ஜூன், 2010

விளம்பரங்கள் படுத்தும் பாடு......

பழைய சின்ன மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சீர் செய்ய கிளம்பினார்கள் அப்பாவும் இரு பிள்ளைகளும். கடையில் புதிய மிதிவண்டி வாங்கைக்கொள்ளுங்கள், பழையதை சரி செய்ய இதில் பாதி பணம் வந்துவிடும் என்று சொன்னதால் இரண்டையும் எடுத்துக்கொண்டு வீடு வந்தனர். சின்ன பிள்ளைக்கு ஏக கொண்டாட்டம். சரி பழைய வண்டியை இப்போது என்ன செய்யலாம் என நான் கேட்க, பெரிய மகன் உடனே நகைகளை வாங்கிக்கொண்டு பணம் தரும் இரு பிரபல நிறுவனங்களின் பெயரைச் சொன்னான். எதுக்கு டா அந்த பெயரையெல்லாம் சொல்ற என்றேன், இல்லம்மா அங்க சைக்கிளை கொடுத்தால் பணம் தருவாங்க.. என்றான்.

ஏன் ரொம்ப கவலையா இருக்கே?
எனக்கு பணம் வேணும்?
அதுக்கு தான் ‘-----‘ இருக்கே, கவலையவிடு!

என்பதான தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த குழந்தைகளை படுத்தும் பாடு அப்பப்பா...

சிரித்து முடித்து, அவனுக்கு விளக்கி முடித்தபின் ஒரே வருத்தமாகி விட்டது. ஒரு முறை பார்த்தாலே பதிந்துவிடும் குழந்தைகள் மனதில் பல முறை இது போல் பதியவைத்தால் விளைவு??

9 ஜூன், 2010

மனிதனுக்குள் எலி ???!!!

இது மரபணு சகாப்தத்தில் ஒரு சுவாரஸ்யம். மனித மரபணுக்களின் முழு டிராப்ட் 2002 ல் வெளியிடப்பட்டது. ஒரு வருடத்திற்கு பின் எலியின் மரபணுக்கள் டிராப்ட் தயாரானது. சற்று ஏறக்குறைய 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே எலியின் மூதாதையர்களும் மனிதனின் மூதாதையர்களும் பரிணாம வளர்ச்சியில் தனியே பிரிக்கபட்டுவிட்டாலும் சமீபத்திய ஆய்வறிக்கையின் படி மனிதனுக்கும் எலிக்கும் உள்ள வேறுபாடு வெறும் 300 ஜீன்கள் தானாம். அதாவது மொத்தம் உள்ள 30 000 ஜீன்களில் 300 தனித்தன்மை வாய்ந்தவை தவிர மற்றணைத்தும் எலிகளிடமும் உள்ளனவாம்.

ம்யூட்டேஷன் எனப்படும் ஜீன் மாறுபாடு எலிகளுக்கும் மனிதனுக்கும் மிக குறைந்த வித்தியாசங்கள் கொண்டுள்ளதால் எலிகள் ஆராய்ச்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறது, சோதனை எலி என்ற பெயரில். மனிதனின் ஜீன்களில் 99 சதவீதம் எலியின் ஏதாவது ஒரு ஜீனை ஒத்திருக்கிறது. அதனால் எலிக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் ஒரு சதவீதம் தான்!!!


2 ஜூன், 2010

நிறப்பாகுபாடு...

மலர்களையும் விட்டு
வைக்கவில்லை
நிறப்பாகுபாடு...

மனிதர்களிடமிருந்து
இன்னும் முழுமையாய்
விலகாமலே...

பூக்களிடம் தாவிவிட்டது...

உடைக்கேற்ற
வண்ணமென்ற பெயரில்...

கறுப்பு ரோஜா
பச்சை மல்லி
நீலச் சந்தனமுல்லை
எல்லாமே
சாத்தியம் இப்போது...

சில குடும்பங்கள்
வறுமையின்றி வாழ
உதவமுடியுமானால்...

நானும் அணிவேன்
நிறம் மாற்றிய பூக்களை
விருப்பமில்லாமலேயே...

31 மே, 2010

மரபணுக்கள்..

மரபணு என்றால் என்ன?


மரபணு பற்றி எளிதாக தெரிந்து கொள்ள அதனை ஒரு புளூபிரிண்டோடு ஒப்பிடலாம்.

உயிரற்ற பொருளை செய்வதற்கு முதலில் அதன் வரைபடம் தயார் செய்து நீள, அகல உயர அளவுகள் எல்லாம் தேர்வு செய்து எப்படி இருக்க வேண்டும் என யோசித்து அந்த தகுதிகள் எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைப்பது போல் இந்த மரபணு இழைகளில் மனிதனுக்கு தேவையான அத்தனை குணங்களும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் ஒட்டு மொத்த சாப்ட்வேர் அவனின் முடி மற்றும் ரத்த செல்கள் உட்பட ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும். இந்த இழைகளின் வேலை பதிவுகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்ய மற்ற செல் உறுப்பினர்களுக்கு கட்டளை இடுவதும் தான்.

அரசன் பாதுகாப்பாக கோட்டைக்குள் இருந்து கொண்டு ஓலையில் கட்டளை அனுப்புவது போல் இந்த மரபணுக்கள் பத்திரமாக ஒவ்வொரு செல்லின் நியூக்ளியஸ் எனப்டும் பகுதியில் ஹாயாக இருந்து கொண்டு மெசஞ்சர் ஆர் என் ஏ வாக கட்டளைகளை பிறப்பிக்கும். இந்த எம். ஆர். என். ஏக்கள் சைட்டோப்லாசம் பகுதிக்கு வந்து சேர்ந்தவுடன் கட்டளைகளை செயல்படுத்த ஆரம்பிக்கும். இதற்கு உதவி செய்ய நிறைய சிப்பாய்கள் சைட்டோப்லாசம் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும். கட்டளை வந்தவுடன் செயல் படுத்தவே இந்த ஏற்பாடு.

மரபணுக்களை மீண்டும் தொடர்வோம்....

வலையுலக நேரம்...

சுட்டிகள் பின்னே  என்
வலையுலக பயணம்
கட்டணம் பணமாயில்லை
நேரமாக மட்டுமே
நேரத்தை வேலை செய்து
பணமாக்கலாம்...
பணத்தை ஏது செய்தும்
நேரமாக்க முடியாது...
பிள்ளைக்கு பள்ளி விடுமுறை...
வசதியாக  என் நேரம்
வலையுலகில் அதிகரித்தபடி....
 என் வீட்டு சுட்டிகள்
தொலைக்காட்சியின் முன்
நானோ கணினிக்கு
என்னை அர்பணித்த படி...
இல்லை இனி இது இப்படியில்லை..
மாற்றுவேன் என
முடிவு செய்தேன்
போன விடுமுறையை
போலவே...

29 மே, 2010

அமைதி

தெள்ளிய நீர் போல
ஒர் அதிர்வுமின்றி
அமைதியாய்
நின்றிருக்கிறது
மனப்பரப்பு

நெடுங்காலம்
கழித்து ஒரு
பேரமைதி

சிந்தனைகளின்றி
நிச்சலனமாய்
மனதின் மேற்பரப்பு

எண்ணங்களெல்லாம்
யோசனையில் ஆழ்ந்திருக்க
எப்போதும் ஓடிக்கோடிருக்கும்
அந்த மனக்குதிரை
சத்தமே இல்லாமல்...

சோர்ந்து விட்டதா?
ஓடிப்பயனில்லை
என தெரிந்து கொண்டு விட்டதா?

மெல்லிய இசையில்
மயங்கி விட்டதா?

மழைவிட்ட வானம் போல்
தெளிவாய்....

கழுவி விட்ட தரை போல்
புதிதாய்...

வயிறு நிறைந்த குழந்தை போல்
திருப்தியாய்...

நீர் விட்ட செடி போல்
வளமாய்...

தொடர்ந்து தோற்கும் என்
மனக்குதிரை நிறுத்தப்
போராட்டங்கள்
ஓய்ந்து போன நேரம்...

மாற்ற தேவையில்லா
சிறிய விஷயங்களும்

மாற்ற முடியாத
பெரிய விஷயங்களும்

தெரிந்து தெளிந்த
அலைகளில்லா கடல் போல...
அத்திப்பூ போல...
ஆர்பாட்டம் இல்லா
பேரணி போல...
அமைதியில் என் மனம்..

27 மே, 2010

மனித ஜீனோமிக்ஸ்

ஜீன் தெரபி
ஜீன் தெரபியின் மூலம் நம் உடலில் என்ன வகை  நோய்கள் வர சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை கண்டு பிடிப்பது  இப்போது
எளிதாக முடியும். கருவில் உள்ள குழந்தையின் ஜீன்களும் பரிசோதிக்கப்பட்டு அப்பா, தாத்தா சொத்தாக வரக்கூடிய மரபுவழி நோய்களை முன்பே தெரிந்து சரியான சிகிச்சை தருகிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜக்ட்
மனித உடலில் உள்ள ஜீன்கள் அட்டவணை தயாரிப்பு. இது நபருக்கு நபர் கைரேகை போல வேறுபடும் ஒரு விஷயம். முதன் முதலில் ஒரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதன் விலை கோடி கணக்கில் இருப்பதும், அதுவே விற்பனைக்கு வந்ததும் சாமானியர்களுக்கு அசாத்திய விலையில் இருப்பதும், பின் 4 வருடங்கள் கழிந்தபின் கத்தரிக்காய் மலிந்தால் சந்தைக்கு வரும் என்பது போல் அநியாயமாக விலை குறைவதும்  நாம் தினம் பார்க்கிறோம்.
அதேபோல் ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜக்டின் வளர்ச்சியை பார்ப்போம்.
  • 2001 இல் முதல் டிராஃப்ட் முழுமை பெற $4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகியது.
  • 2007இல் இரு  நிறுவனங்கள் டிகோட்மீ, 23அன்ட்மீ பொதுமக்களுக்காக தொடங்கப்பட்டது. விலை $10 மில்லியன்.
  • பின் $1 மில்லியன்.
  • 2008 ல் இதற்கு $60,000 தேவைப்பட்டது.
  • 2010 ஒவ்வொரு நோயும் கண்டறிய $500 டாலர்கள் மட்டுமே.
இவை   டெய் சாக்ஸ் (ஒரு வகை உயிர்கொல்லி நோய்), ஃபினைல்கீட்டோனூரியா, ஹீமோஃபிலியா போன்ற  நோய்களை
கர்ப்பத்திலேயே கண்டுபிடிக்க உதவுகிறது. 
தொழில் நுட்பம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது!!!

26 மே, 2010

என் மகனின் குறும்பு

அப்போது அவனுக்கு ஐந்து வயது. இரண்டாம் குழந்தை பேற்றிற்காக தாய் வீடு சென்றிருந்தேன். என் தலை மகனை அருகில் உள்ள பள்ளியில் யூ கே ஜி சேர்த்து விட்டோம். தினமும் காலையில் சிணுங்கல் இல்லாமல் சீக்கிரமாக எழுந்து, குளித்து, சீருடை அணிந்து மிக சந்தோஷமாக வாசலுக்கு வரும் வேனில் பள்ளிக்கு செல்வான். போய் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே நிறைய நண்பர்கள், தைரியமாக பேசுவதால் ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவனாகிவிட்டான்.

ஒரு நாள் சாயுங்காலம் பள்ளி விட்டு வரும்போதே மிகவும் சோர்ந்து இருந்தான். என்ன என்றதற்கு இனி நான் அந்த பள்ளிக்கு போக மாட்டேன்.

அடிக்குறாங்க, நீ வா நம்ம சிங்கப்பூருக்கே போய்டுவோம் என்று ஒரே ஆர்ப்பாட்டம். அப்போது ஜூரமும் வந்து விட்டதால் இரு நாட்கள் கழித்து பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்களிடம் பேசினேன். ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள் என்று கேட்டேன். இல்லை அவன் கொஞ்சம் வாலு, சும்மா மிரட்டி, அடிப்பேன்னு சொன்னதுக்கே அழுதிட்டான் என்

று சொல்லி அனுப்பிவிட்டனர். ஆசிரியர்கள் சொன்னதில் சமாதானம் அடையாததால் அன்று இரவு அவனிடம் பேசினேன். தம்பி இப்போ அம்மாகிட்ட உண்மைய சொல்லு...

யார் உன்னை அடித்தது?

எங்க சார்

எப்போது உன்னை அடித்தார்?

க்ளாஸ் ல.

நீ என்ன செஞ்சே?

கம்பால சாரை அடிச்சேன்.

ஐய்யோ ஏன்?

அவரு என்னை அடிச்சாரு. நான் அவரை அதே கம்பால திரும்பி நிக்கும் போது அடிச்சேன்.

அவர் ஏன் உன்னை அடிச்சார்?

எழுதினதுக்கு.

எழுதினத்துக்கா அடிச்சாங்க?

ஆமாம்.

எதால எழுதின?

பேனாவால.

யாரோட பேனா?

சார் பேனா

எதுல எழுதின?

புக்குல

யார் புக்கு?

சாரோட புக்கு

எந்த புக்கு?

எல்லார் பேரும் எழுதியிருக்கும் இல்ல? அதுல கூட டிக் போடுவாங்களே காலைல. (அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்தர்??!!!)

ஹா ஹா இதை ஏன் ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது!! என் மகனின் குறும்பை இன்று நினைத்தாலும் வாய் விட்டு சிரிப்பேன்.

செய்திகள் வாசிப்பது... .......

சோதனையாக நானும் உரை நடை எழுதி எல்லோரையும் ஒரு வழி பண்ணுவதாக முடிவு செய்து விட்டேன். படித்து
விட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடுங்கள் (எல்லாம் ஒரு விளம்பரம் தான் :))
இல்லங்க அப்படியெல்லாம் பார்க்காதிங்க! இதுக்கு முன்னாடி ஒரு கதை எழுதி சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கத்துலருந்து (முத்தமிழ் விழா)
பரிசு கூட வாங்கியிருக்கேங்க. நிஜமாதான். ஆஸ்பிரின்லாம்
தேவையில்ல, தைரியமா படிங்க.
சரி சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். நான் ஆச்சர்யபட்ட ஒரு சம்பவம் இது. பெரும்பாலும் பொண்ணு, பையன் யாராவது வெளிநாட்டுல இருந்தா இந்த அப்பா, அம்மாக்கள் விடும் ரவுசு தாங்காது. ஒரு முறை எப்பாடு பட்டாவது போய்ட்டு வந்து சொந்தங்கள் கிட்ட புகைப்படம் காட்டி வெறுப்பேத்துற பெத்தவங்க மத்தியில என்னை பெத்தவங்க ஒரு தனி ரகம். எங்க பொண்ணு வீட்டுக்கு போக சிங்கப்பூர் வேண்டியிருக்குமோன்னு 8 வருஷம் பாஸ்ப்போர்டே வாங்கலைனா பாத்துகோங்க. 9 தாவது வருஷத்துல எப்படியாவது வரவைக்கனும் னு வம்பு பண்ணி எல்லாம் தயார் பண்ணினோம். ஒரு வழியாக வந்து இறங்கினாங்க எஸ் க்யூ விமானத்துல. சரின்னு ஒவ்வொரு இடமா சுத்தி காட்டினோம். ராபிள்ஸ் மெர்லயனை பார்த்து ஃபூ இவளோதானான்னு சொல்லிட்டாங்க. சரி அதாவது பரவாயில்ல, 14 மாடி உயரம்ன்னு சொன்னே இது தம்மாத்தூண்டு  நிக்குது, இதையா மின்னல் வந்து தாக்குச்சு பக்கத்துல இருக்குற கட்டடமெல்லாம் இதை விட உயரமா நிக்குது? அப்படின்னாங்க. அய்யோ அப்பா அது இதில்ல அது செந்தோசா வுல இருக்குன்னு சொன்னேன். அங்க கூட்டிட்டு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே ன்னு அடுத்த கேள்வி.  
லிஃப்ட் ல வரமாட்டேன் எங்கயாவது இடையில நின்னுடுச்சுன்னா என்னாகுறதுன்னு ஒரே வம்பு. ஆனா ஃபளையர் ல மட்டும் தைரியமா ஏறி சுத்தினாங்க ரெண்டுபேரும். எங்க அப்பா ஒரு என்சைக்ளோபிடியா, அவங்களுக்கு தெரியாத விஷயமே இல்லன்னு சொல்லலாம். அந்த காலத்து M. Sc Mathematics. டெக்னிக்கலா எல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு கலக்குற ஆல் ரவுன்டர். அவங்க ரசிச்ச இடங்கள்னு சொன்னா டிஸ்கவரி சென்டர், சயின்ஸ் சென்டெர் தான்.  அங்க செய்தி வாசிக்குற செட்டிங்க் இருக்கும் நம்ம படிக்குறது விடியோ மிஃஸ் ஆகி அங்க உள்ள தொலைக்காட்சில ஒளிபரப்பகும்.  நிறைய பேர் உக்கார்ந்து படிக்க தயங்கியபடி  நிற்க, எங்க அம்மா (அந்த காலத்து SSLC, ஆனா ஒரு புத்தகம் விடாம நிறைய படித்து நியாபகம் வைச்சிகிட்டு அப்பப்ப எங்களை அசத்துவாங்க GRE பரிட்சை வார்த்தைகளுக்கு கூட அர்த்தங்கள் அவங்கள கேட்டுக்கலாம், இவங்க ஒரு லிவிங்க் டிக்ஷ்னரி)  தயக்கமே இல்லாம நடந்து போய் செய்திகள் வாசிப்பது  நீனா மெராட்டா (அம்மா அவங்க பெயர் தான் சொன்னாங்க நான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்) ன்னு ஆரம்பிச்சு 5 நிமிஷத்துக்கு படிச்சு கலக்கிட்டாங்க. சில திறமைகள் எல்லாம் நம்ம அப்பா, அம்மா என்பதாலயே நம் கண்ணுக்கு தெரிவதில்லை. திரும்பி போகும் போது என்சைக்லோபிடியாவும், டிக்ஷ்னரியும் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க கேட்டா அசந்துடுவிங்க, அடுத்த முறை நாங்க வரனும்னா தரையோடு வீடு வாங்குங்க இந்த உயரத்துல தங்கறது எங்களுக்கு பிடிக்கலைனு!!! (எங்க வீடு ஆறாவது மாடில இருக்கு).  

25 மே, 2010

எண்ணித்துணிக கருமம்

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
யாரிடமும் சொல்லாமை நலம்.

செய்யமுடியலன்னா கூட யாரும் திட்டமுடியாது பாருங்க!!

18 மே, 2010

கருமை

நிழல் எழுத தேவைப்படுவாய்
நீயின்றி மெருகில்லை
எவ்வோவியத்துக்கும்
கோடுகள் எழுதவும்
புள்ளிகள் வரையவும்
நிறத்தை ஆழமாக்கவும்
கூட பயன்படுவாய்...
ஆம் நிறத்தின் ஓரம்
தூங்கும் கருமை நீ...
நிறத்தின் ஓரம் மட்டும் தூங்கு
மனிதர்கள் கண்களின் ஓரம்
உனகென்ன வேலை...?

15 மே, 2010

பாவம் வானவில்...

மழைவிட்ட பின்னும்
நீ குடை பிடித்தே நட
உன் பூப்போட்ட
சேலையில்
இருக்கும் நான்கு
வண்ணம் தவிர
மற்றணைத்தும்
உருகி ஊற்றுகின்றன பார்
பாவம் வானவில்...

கனவு மெய்ப்படும்...

இன்னும் நேரமிருக்கிறது
கண்களும் காற்றும் சந்திக்க...
இது இரவு

இன்னும் மிச்சமிருக்கிறது
கனவுகளோடு நம் உறக்கமும்...

இன்னும் பின்னியிருக்கிறது
நம் லட்சியங்களும்
அதற்கான முயற்சிகளும்...

இது விடியலுக்கு அருகே
சிறு தொலைவில் உள்ள
வைகறை...

பட்டியல் இருக்கிறது
விடியும்முன் எழுந்து
ஒவ்வொன்றாய் முடிக்க...

இன்னும் இரும்பாய் இருக்கிறது
அவ்வப்போது காயம் பட்டாலும்
உடையாத நம் தன்னம்பிக்கை...

இது விடியல்...

இன்னும் நீண்டிருக்கிறது
வெற்றிகான நம் பயணப்பாதை...

மன்றத்தில் தவழும்
தென்றலாய்....

இன்னும்
கிடைத்துக் கொண்டிருக்கிறது
முன்னேற ஊக்கமும்
உற்சாகமும்...

கண்முன்னே விரிகிறது
நம் கனவு மெய்ப்படும் காட்சி...
முயற்சி ஒன்றே வழி
காட்சி நனவாகும்
கனவு மெய்ப்படும்...

14 மே, 2010

அங்காடித்தெரு

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. வாழத்துடிப்பவர்களுக்கு ஒரு சிறந்த பாடம். பொதுவாக திரைப்படம் பார்ப்பது என்றாலே நேரவிரயம் என்றெண்ணும் என் போன்ற சிலருக்கும் இது பார்க்க வேண்டிய படம். நம்பிக்கை என்பது சூழலில் இல்லை எந்த நிலையிலும் நம் மனதில் நாம் பாதுகாத்து வைப்பது என்று தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். சென்னை சென்றால் பெரிய ஆளாய் வந்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை.
பெரிய கடைகளுக்கு சென்றால் அங்கு வேலை செய்பவர்கள் சரியாக கவனிப்பதில்லை என்ற குறை கூட இனி யாருக்கும் பெரிதாகத் தெரியாது. சக மனிதர்களின் வாழ்க்கை முறை கண்ணீர் வரவழைக்கிறது. சினிமாத்தனம் இல்லாமல் அறுவறுப்புக்காட்சிகள் இல்லாமல் கதையை மட்டும் நம்பி வரும் அபூர்வங்களில் இதுவும் ஒன்று.

13 மே, 2010

கிறுக்கல்

சிந்தனை முத்துக்கள்
சிங்காரமாய் சிதறின..
சிறகு முளைத்து
வானில் பறந்தன..
கணினியில் அச்சிட
கைகள் பரபரத்தன..
காகிதமாவது தென்படுகிறதா
கண்கள் தேடின..
பேருந்து பயணத்தின்
மத்தியில் நான்..
கணினியும் இல்லை
காகிதமும் இல்லை
வீட்டிற்குள்
வந்திறங்கியவுடன்
அந்த கவிதை மறந்து
வந்து விழுந்தது...
கவிதையில்லை கிறுக்கல்..

உரை நடை

கவிதை எழுதுவதே மிக சுலபமாக இருப்பதால் உரை நடையில் கவனம் செல்வதேயில்லை எனக்கு. கவிதை என்பது ஒரு நிமிட சமையல் மாதிரி. கவிதையில் எந்த இலக்கணத்திலும் சிறைபடாமல்  நான்கே வரிகளில் நினைத்ததை சொல்லிவிடலாம். சரியாக வரவில்லை என்றாலும் என் கவிதை இப்படித்தான் என்றாவது சொல்லிவிடலாம்.
ஆனால் உரை நடை என்பது பக்குவமாய் செய்து பந்தியிட்டு பரிமாற வேண்டிய முழு சமையல். எங்கேனும் ஒரு தவறிருந்தால் கூட  சரியான பதில் சொல்ல வேண்டும்.
எழுதித்தான் பார்ப்போமே என ஆரம்பிக்கிறேன். சிறப்பாக்கிக் கொள்ள உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.

12 மே, 2010

அன்னையர் தினம்

அன்னையர்க்கு என் அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்

4 மே, 2010

நான் தனிமையில் இல்லை...

விடுவிடுவென நீ
சென்றுவிட்டாய்...

உன் மனம்
புரியாதது போல்
நான் வெறுப்பேற்றியது...
தவறு தான்
என் இனியவளே..

எனக்கல்லவா தெரியும்
தினம் நான்
கடக்கும் பாதை
முள்ளும் கல்லும்
நிறைந்தது என...

யாவற்றையும்
சரிசெய்து
ஒரு நாள் வருவேன்
உன்னருகில்

அவசரப்படாமல்
காத்திரு...

அதுவரை

என் தோட்டத்தில்
தென்றலாய்
என்னருகிலேயே
வீசிக்கொண்டிரு

காதல் நிறைந்து
கண் பார்க்காமல்
கை தொடாமல்
உன் புகைப்படத்தை
மட்டும் தினம் பார்த்து
உன்னுடன்
பேசிக்கொண்டு
தானிருக்கிறேன்..

என்ன? காதோரம்
நரைமுடி கொஞ்சம்...

பிள்ளைகள் 
வளர்ந்த பின்
வரவேண்டியதாய்
இருக்கும்..

பணம் தேவையில்லை
என்பதெல்லாம்
பேச்சில் எல்லோர்க்கும்
இருந்தாலும்..


நீயும் நானும்
நம் பிள்ளைகளும்
நன்றாய் வாழ...

சிக்கிக்கொண்ட
சூழ் நிலை
கைதிகளாய்
நாம்...

எனக்கு நீ
உனக்கு நான்
இதில் எங்கு தனிமை...

நான் தனிமையில்

இல்லை...
என்னவளே...

நீ தான்
என் மனதில்
எப்பொதும்
இருக்கிறாயே...

3 மே, 2010

குழல்

காற்று புகுந்து உனை
மீட்டிச் சென்றால் இன்பம்...

அலைகடலென பொங்கும்
என் நினைவலைகள்...

என்னவளே காற்றோடு
விளையாடும் உன் குழல்...

அதனை ஒதுக்கும் போதெல்லாம்
மீட்டும் உன் விரல்கள்...

அமுத கானமோ என்
மனதிற்குள்...

2 மே, 2010

இயற்கை

மேகங்கள் மோதிச்செல்லும்
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...

சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...

எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...

இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...

மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...

அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...

காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...
வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்

மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...

1 மே, 2010

தன்னம்பிக்கை

வில்லாக வளைந்து வணங்கி
உன் முயற்சி அம்பை
குறிபார்த்து உன்
குறிக்கோள் இலக்கை
நோக்கி எய்துவிடு!
முயற்சிகள்
மண்ணாக கரைந்தாலும்
மறுபடியும் உயிர்த்தெழும்
புற்களைப்போல
நிமிர்ந்து வளர்த்திடு..
வெற்றிகள்
உன் வாசல் தேடி
வரிசையில் நின்றிடும்!

29 ஏப்ரல், 2010

புன்னகை

சகியே உன் உதடுகள்
இரண்டும் நீண்டு
கண்கள் இரண்டும் மலர்ந்து
எப்போது சிரிப்பாய்
எனைப்பார்த்து...

என காத்து கிடந்தேன்
காதலிக்கும் போது...

அந்த அழகில்
அமிழ்ந்து கிடந்தேன்
பல காலம்...

இப்போதும் ஏக்கத்துடன்
காத்துத்தான் கிடக்கிறேன்
நீ   நம் குழந்தைகளை
கவனிப்பதை முடித்து
என் பக்கம் எப்போது
பார்ப்பாயென்று...

ஒரு பிள்ளை இடையில்
தூக்கி ஒரு பிள்ளை
கையில் பிடித்து
நடக்கும் அழகில்
அமிழ்ந்து தான் போகிறேன்
இப்போதும்....

ஆனால்  நீ மட்டும் சகியே
அப்படியே இருக்கிறாயே
அதே புன்னகையுடன்...

நாஸ்த்தி - நாஸ்த்திகன்

"தம்பி நல்லா படிக்கனும், சமத்தா நடந்துக்கனும், நல்ல மதிப்பெண் எடுக்கனும்" என்று தினம் பாடும் பல்லவியை நான் பாட இடைமறித்த என் மகன் "நல்ல மார்க் எடுக்கலைனா நான் நாஸ்த்தி ஆகிடுவேன் அம்மா" என்றான்.  "ஏன்டா அப்படி சொல்ற..?" இது நான். "நாஸ்த்தின்னா தெரியாதா உனக்கு? அது தான் நான் பாரதி படத்துல பார்த்தேனே சாமிகிட்ட பேசுவாரே அவர், டாக்டர் க்கு கொடுக்க காசில்லை, இது போல் துன்பங்களுக்கு உட்படுத்தி கொண்டிருந்தால் நான் நாஸ்த்தி ஆகிவிடுவேன்னு பாரதியார் சொல்வாரே? அந்த நாஸ்த்தி தான், டாக்டர் கூட எனக்கு காசே வேணாம்னு சொல்லிடுவாரே" என்றான்.

 படத்தில் வருவதை யோசித்து விட்டு அது நாஸ்த்தி இல்லடா நா
ஸ்த்திகன், அவனுக்கு விளக்க "அப்படியா?" என சிரித்தான்.

19 ஏப்ரல், 2010

சில்லரை

கையில் சில்லரையுடன்

பேருந்து நிலையத்தில்

காத்திருப்பு...


பிச்சை கேட்டு ஓரு

சிறுவன் என் அருகில்...



கிழிந்த ஆடைகளுடன்

தலையில் எண்னெய் இன்றி..



கொடுக்கலாம் தான்

அதன் பின்

நடக்கபோகும் நிகழ்வு??



அங்கிருக்கும் அத்தனை

பிச்சைகாரர்களும் நம்மை

முற்றுகை இடுவதாக..



என் கண்முன்னே

பயமுறுத்த...



சற்றே யோசித்தபடி நான்



அதே கண​த்தில்

என் கையிலிருந்து

ஒரு நாணயம்

தரையில் தேங்கியிருந்த

அழுக்குத்தண்ணீரில்

விழ..



சடாரென குனிந்து

எடுத்தான்..

யோசனையாக என்னை

பார்த்தான்..

நீயே வைத்துக்கொள்

என்றேன்..

சொல்லிவிட்டு நாம் ஏன்

எடுக்கவில்லை..

எவ்வளவு சாமர்த்தியம்

அவனுக்கு..

இனி நடத்துனரிடம்

நூறு ரூபாய்

தந்து சில்லரை வாங்கி

அடக்கடவுளே..



சற்று நேரத்தில்

கையில் அரை அளவு தீர்ந்த

தின்பண்ட பாக்கேட்டுடன்

அவனே தான்..



நிஜமாகவே பசியா??

ஏதோ ஒன்று

அறைந்தது போல்

இருந்தது..



எத்தனை

அம்மா பசிக்குது வை

அலட்சிய படுத்தியிருக்கிறோம்...



இனி இவர்களுக்கென

தனிச் சில்லரை

என் பையில்

எப்போதும் இருக்கும்...

கவலை

தனியார் நிறுவன அறிவிப்பு பலகை.

புதிய அறிவிப்பு:

ஏதேனும் ஒரு காரணம் தேடிப்பிடித்து எப்போதும் கவலைப்படும் ஊழியர்கள் கவனிக்க..

நாள் முழுதும் உங்கள் கவலை வேலையை பாதிக்காமல் இருக்க..ஒரு வழி..

3 மணிக்கு கொடுக்கப்படும் தேனீர் இடைவேளையில் கவலைப்பட நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 1/2 மணி நேரம் கவலைப்படுங்கள் அது போதும், பின்பு 3.30 லிருந்து சரியாக வேலை செய்ய வேண்டும்..

மீறினால் அபராதம் உண்டு.


இதை பார்த்த பின் வந்த சில கமெண்ட்டுகள்.....

முழு நேரம் கவலைப்படும் அன்பர் 1

"அய்யோ எல்லாத்தையும் விட்டுட்டா அப்புறம் யார் தான் அவ்வளவு கவலையும் படுறது. இதெல்லாம் நடக்கிற காரியமா?"

கவலைப்படும் அன்பர் 2

"டீ குடிக்கும் போது கவலை படுவதா? அட போய்யா சான்ஸே இல்ல. என் மனைவியை இப்பல்லாம் டீ நேரத்துல தொலை பேசாதேன்னு சொல்லிட்டேன்"

கவலைப்படும் அன்பர் 3

"சரி பார்க்கலாம்" , அவ்வப்போது தோன்றிய கவலைகளை ஒத்திப்போட்டு 3 மணி அடித்ததும் யோசித்து பார்த்து

"ஏதோ யோசித்து வைத்தோமே நினைவு வரலையே" என கவலைப்பட்டார்.

கவலைப்படும் அன்பர் 4(வடிவேலு ??!!)

"கொடுக்கிற அரைமணி நேரத்தில லொள்ளைப் பாரு. நான் கவலைப் படுறதையே நிறுத்திட்டேன்ப்பா...அப்பாடி நம்பிட்டாய்ங்க.."

கவலைப்படும் அன்பர் 5


"அய்யோ மூணு மணி வரை கவலைப் பட முடியாதே"

கவலைப்படும் அன்பர் 6

"அப்படியா மற்ற நேரத்துல ஜாலியா இருக்க வேண்டியது தான்"

உழைப்பாளி!!!

கவலைப்படும் அன்பர் 7

இவர் மாத்தி யோசி அன்பர் போலும்...

நிறுவனத்தில் ஊழியர்கள் கவலையில்லாம இருக்கனும்னு தான்

இந்த அறிவிப்பு செய்திருக்காங்க. சபாஷ்!

தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி

மடி கனிணியை

திறந்து வலை பார்க்க

ஆரம்பித்து

ஒரு மணி நேரம் ஆயிற்று...



தொ. கா வில் உன்

டோரா முடிந்து

டியோகோ வந்தாயிற்று...



போதும் கண்ணா

தொலைக்காட்சி பார்த்தது போதும்...



அன்று உன் சோர்ந்த

முகம் பார்த்து

போதும் அம்மா

எழுதியபின்...



ஒரு நாளில் உன் தொ. கா நேரம்

இனி ஒரு மணி நேரம் தான்...

முடிவான முடிவாயிற்று..



நீ போய் மடி கனிணியை

வைத்துக்கொண்டு

உட்கார்ந்திரு, என்னை விடு என

நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..

நான் சொல்கிறேன்...



வா வெளியில் சென்று

விளையாடலாம்...



காக்கை யை தேட முடியாது

கார் பார்த்துக்கொண்டே

சாப்பிடலாம்...



பூக்களையும், செடிகளையும்

ரசிக்கலாம்...



இதோ கையில்

உன் ஆசை தூரிகையை எடு

சுவர் முழுதும்

ஓவியம் தீட்டலாம்...



இன்னும் தண்ணீரில்

கூட விளையாடலாம்...



உனக்கான நேரம்

இன்னும் ஒரு வருடம் தான்

நீ பள்ளி செல்லும் வரை தான்



வா விளையாடலாம்

போதும் கண்ணா..

தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.

போதும் அம்மா...

போதும் அம்மா...


மடி கணினியை

மடியை விட்டு

தூக்கி எறி....


என்னை

வைத்துக்கொள்....


தொலைக்காட்சி

பேசியது போதும்

நீ பேசு என்னுடன்...


பொம்மைகளோடு என்

விளையாட்டு போதும்

நீ விளையாடு என்னுடன்...


வலை பதிந்தது போதும்

என் கன்னத்தில்

முத்தம் பதி...

போதும் அம்மா...

ஓவியம்

ஒவ்வொரு முறை


நான் பேனா

எடுக்கும் போதும்



ஆசையாய் வாங்கி

அம்மா ம்ம் ம்ம்



என் காகிதம் முழுக்க

உன் கிறுக்கல்கள்



காகிதமும் நிறைந்தது

ஓர் மிகச் சிறந்த

இரண்டு வயது

ஓவியனின்

முதல் முயற்சியால்



தயக்கமே இல்லாத

உன் கோடுகள்

வட்டங்கள்



படைப்பாளிக்கு

வானமே எல்லை

உனக்கும் தான்



கூரை மட்டும்

எட்டவில்லை

தப்பித்து விட்டது



சுவற்றில் ஒரு இடம்

மீதியில்லை



மெழுகு வண்ணங்களில்

பல புதிரோவியங்கள்



மேஜையும்,

நாற்காலியும்

ஆழ் நிற சோபாவும்

கூடத்தான்



மெருகேறி இருக்கின்றன

உன் வண்ணக்காய்ச்சலில்

குளித்து



வென்னிற தரையும்

உன் விளையட்டுத்திடல்



எத்தனை முறை

கடிந்து கொண்டாலும்

அழகாய்

பெருமையாய்

ஒரு புன்சிரிப்பு

உன் உதடுகளில்



காலையிலிருந்து

மாலைவரை

நீ தீட்டிய

ஓவியங்களோடு



மாலையிலிருந்து

மறு நாள் காலைவரை

உன் தந்தையின்

சாய விலை ஆதியாக

அடித்த நேரம்

(நல்ல வேளை

ஆள் வைத்து

சாயம் அடிக்க

வில்லை

கூலியும் சேர்ந்திருக்கும்)

அழகு

.....அந்தம் வரை



வரும் பாட்டுக்களையும்

ரசிக்கிறேன்



என் சின்னத் திருமகனின்

ஓவியத்திறமையை

மெச்சியபடி.....

வெற்றியின் விலாசம்

முயற்சி செய்வதும்


தோற்பதும்

ஏன் வெல்வதும் கூட

மிகச்சாதாரணம் தான்

அவை மற்றவர்களுக்கு

நிகழும்போது

முயற்சி செய்வதும்

தோற்பதும்

இடியாய் இறங்கும்

நமக்கு எனும் போது



நீ தனித்தீவில்லை

தோல்வியின் விளிம்பில்

திசை தடுமாறி நிற்க



இன்று வென்றவர்

கதை அநேகம்

அவர்கள் தழுவிய

தோல்விகள் ஏகம்



முயல்வதும்

வெல்லும் வரை



அயராது முயல்வதுமே



வெற்றிக்கு விலாசம்



உன்னைத் தயார் செய்

வெல்வதற்கு

மனதையும்

அறிவையும்

உடலையும்

ஆன்மாவையும்

தயார் செய்



தனி ஒரு செல்லாக இருந்து

கருவறையில் வளர்ந்து

பின் பிறந்து

ஒரே வருடத்தில்

குப்புற படுத்து

மண்டி போடு

கை ஊன்றி

கால் பதித்து

தட்டு தடுமாறி நடந்து

பின் நன்றாகவும் நடந்து

பேசவும் கற்றுக்கொண்டு …..



உனக்கா முயற்சியில்லை?



எழு மனந்தளராதே

இன்னும் கொஞ்ச தூரம் தான்

வெற்றியை நெருங்க



வெற்றி உனக்கே!

18 ஏப்ரல், 2010

வாழ்க்கை

வரவேண்டிய மாற்றம்
வந்தே தீரும்...

போக வேண்டிய நாளும்
வந்தே தீரும்...

நம்  நிறுத்தம் வந்தவுடன்
இறங்கி விடத்தான்
போகிறொம் என்றாலும்....

பேருந்தில்
சௌகர்யமான இடம்
பார்த்து அமர்கிறோமே...

இறங்கும் நேரம் வரை
வெளியில் வேடிக்கை
பார்த்து...
ரசித்து...
அடுத்து செய்யப்போகும்
வேலைகளை திட்டமிட்டபடி...

அது போலத்தான்
வாழ்க்கை...