19 நவம்பர், 2010

தியான லிங்கம்

தீராத தாகமும்
ஓயாத தேடலும்
எனை துளைத்தெடுக்கும்
கேள்விகளும்
ஏது செய்தாலும்
கிடைக்காத நிறைவும்
கணப்பொழுதும் நீங்காத
செய்ய வேண்டியதை
செய்யாமலிருப்பது போன்ற
குற்ற உணர்வும்
சதா எனை ஆட்டிப்படைக்க
என்ன தேடுகிறேன் என்ற
தெளிவே இல்லாமல்
தேடுவதும்
இங்கு தான் எங்கோ
இருக்கிறது வழி
தேடு தேடு என்று
மனம் கட்டளை இடுவதுமே
வாழ்க்கையாகி போனது
இவற்றிலிருந்து தப்பிக்க
நானாக இழுத்து
விட்டுக்கொண்டிருக்கும்
புதிய வேலைகளும்
சீக்கிரமே அவையும்
அலுத்து விடுவதும்
என்றுமே அலுக்காத
புத்தகம் படிக்கும்
பழக்கமும்
ஒவ்வொரு தேடலுக்கும்
முடிவுண்டு நிச்சயமாக
என்ற எண்ணமும்
வீண் போகவில்லை
கையில் கிடைத்தன
காட்டுப்பூ
அத்தனைக்கும்
ஆசைபடு
ஆயிரம் ஜன்னல்
எனும் நூல்கள்
தியான லிங்கத்தையும்
சத்குருவையும் பார்க்க
ஆவல் வந்தது
அதற்கான நேரமும்
கூடி வந்தது
என்னவோ விஞ்ஞானம்
எதுவோ என்னை ஈர்த்தது
தினம் ஒரு மணி நேரம்
போராடியபின் அடையும்
தியான நிலை
தியான லிங்கத்தின்
சன்னதியில்
இரு நிமிடங்களில்
கிடைத்தது
பேரமைதியும்
பயமேயில்லாத
மனமும்
என்னவோ ஒரு
அசெளகர்யமும்
சத்குருவின்
தரிசனத்தின் போது
உணர நேர்ந்தது
சந்தேகத்துடன் சில சமயம்
கண்மூடித்தனமாக சில சமயம்
கடவுள் பக்தி உள்ளதால்
கடவுளாக யாரையுமே
ஏற்றுக்கொள்வது
சாத்தியமேயில்லை எனக்கு
நல்ல ஒரு வழி காட்டியாக
உணர்கிறேன் த்குருவை