30 செப்டம்பர், 2010

நிறைந்த நிறைவிலி..

எதுவுமே போதாது போல
என்ன செய்தாலும்
நிறைவேயில்லாத மனம்...

எப்போதும் எதையாவது
செய்யாமல் இருப்பதே
தவறு போல் ஏங்கும்...

எதை ஆரம்பித்தாலும்
கால நேரம்
மறந்து அதனுள்
சென்றுவிடும்
சிறு குழந்தை போல்...

மீண்டு வந்தபின்
இவ்வளவு நேரம்
மற்ற வேலைகள்
செய்யவில்லையே
என ஏங்கும்...

நிகழும் நொடிகளை மட்டுமே
தொடர ஆரம்பித்த பின்
அட என்ன இது
இப்படி சமத்துக் குழந்தை
போல் சத்தமில்லாமல்
அலைபாயாமல்
அழகான பரிணாமத்தில்
அதே மனம்.

28 செப்டம்பர், 2010

பிரிட்ஜ் இல்லாத நாட்கள்

±¾¢÷À¡Ã¾ «¾¢÷¢ø ±Ã¢îºø ÅÃÅ¢ø¨Ä Á¡È¡¸ ¦Å̸¡ÄÁ¡¸§Å ²ì¸Á¡¸ þÕó¾ Å¢"Âò¨¾ «Óø ÀÎò¾ ¸¢¨¼ò¾ Å¡öôÒ측¸ ÁÉõ Ìà¸Ä¢ò¾Ð. ±ýÉ ¦ºöÂÄ¡õ?

ӾĢø ¯ûÇ¢Õó¾ ¦À¡Õð¸¨Ç ±ÎòÐ §Á¨ƒÂ¢ø ¨Åì¸ §Á¨ƒ§Â ¿¢¨ÈóÐ ÀÂÓÚò¾¢ÂÐ.

¸Å¨ÄìÌâ º¢Ä ¦À¡Õð¸û

  1. «¨Ã ¼ôÀ¡ §¾í¸¡ö ÐÕÅø
  2. ´Õ ¼ôÀ¡ À¡ø
  3. Àð¼÷
  4. ÌÆó¨¾Â¢ý ƒ¤Ã ÁÕóÐ
  5. º¢Ä ¸¡ö¸È¢¸û
  6. 3 ¦ÃʧÁð À§Ã¡ð¼¡ì¸û (Ò¾¢ÂÐ Å¡í¸ ÁÈóÐ §À¡É ஞாÀ¸ ºì¾¢ìÌ ¿ýÈ¢)
  7. À¡¾¢ ¾£÷ó¾ Á¡ì Áð¼ý
  8. ¦¸¡ïº§Á þÕó¾ மாக் º¢ì¸ý
  9. «¨ÃòÐ ¨Åò¾ §¾¡¨º Á¡×
  • º¢Ä Å¢¾¢Ó¨È¸û «ÅºÃÁ¡¸ «Óġ¢É...
  • «ýÚ §¾í¸¡ö ÐÕÅÖõ Á¡ì Áð¼ý Á¡ì º¢ì¸ý ±øÄ¡õ §º÷óÐ ´Õ ÌÆõÒ ¾ÂáÉÐ
  • À¡¸ü¸¡ö¸û ÀØòР⺽¢ôâì¸û §À¡ø «Æ¸¡¸ Ţâ󾨾 À¡÷òРú¢ì¸ §¿÷ó¾Ð
  • ´Õ Å¡ÃòÐìÌõ §ÁÄ¡¸ Å£½¡¸¡Áø Àð¼÷ þýÚõ ±ý¨É À¡÷òÐ º¢Ã¢ì¸¢ÈÐ
  • ´Õ À¡ò¾¢Ãò¾¢ø ¾ñ½£÷ ¨ÅòÐ «¾ý §Áø Á¡× ÌŨǨ ¨Åì¸ 2 ¿¡ð¸û ÒǢ측Áø §¾¡¨º ͨÅ¡¸ þÕó¾Ð, ÁÚ ¿¡û 芸ÄóÐ «õÁ¡Å¢ý Ó¨ÈôÀÊ ¦Á¡Ú ¦Á¡Ú §¾¡¨º.
  • ¸È¢§ÅôÀ¢¨Ä ¼ôÀ¡Å¢ø ¯ÕÅ¢ ¨Åò¾ ÀÊ ´Õ Å¡ÃÁ¡¸ «ôÀʦ þÕ츢ÈÐ
  • §¸Ãð, À£ýŠ ¦ÅǢ¢§Ä§Â ºó§¾¡"Á¡¸ þÕ츢ýÈÉ
  • ¾¢ÉÓõ ´Õ ³óÐ ¿¢Á¢¼ ¿¨¼Â¢ø ¦ºøÄìÜÊ Á¡÷즸ðÊø Ò¾¢Â ¸¡ö¸È¢¸û Å¡í¸¢ º¨Áயல்
  • §Á¨ƒÂ¢ý §Áø «ò¾¨É ÀÆí¸Ùõ «Äí¸¡ÃÁ¡ö «Î츢 ¨ÅôÀ¾¢ø þô§À¡Ð ±ø§Ä¡Õõ ¿¢¨È§ŠÀÆõ º¡ôÀ¢Î¸¢§È¡õ.
  • Ëô ôãºÃ¢ø ¨ÅìÌõ ¯¼ø ¿ÄòÐìÌ §¸Î Å¢¨ÇÅ¢ìÌõ ôâº÷§ÅðÊù §º÷ò¾ ¦À¡Õð¸¨Ç «È§Å ¾Å¢÷ôÀÐ.
  • Á¡¾ì¸½ì¸¡¸ ¸¡ö¸È¢ Å¡í¸¢ ¯û§Ç ¨ÅòÐ º¢ÄÅü¨È º¨Á측Á§Ä à츢¦ÂâÅÐ, ƒ¢øÖýÛ þÕìÌ ±Î측§¾ ±ýÚ ±¨¾Â¡ÅÐ ¦¾¡Îõ ÌÆ󨾸¨Ç Å¢ÃðÎÅÐ, ¿ì¦¸ðŠ ±Ûõ À¾ôÀÎò¾ Àð¼ ¯½¨Å ±ñ¦É¢ø ¦À¡Ã¢òÐ ÌüÈ ¯½÷×¼ý ¾¢ýÉ즸¡ÎôÀÐ. «ÅºÃòÐ측¸ Å¡í¸¢ ¨Åò¾¢ÕìÌõ ¦ÃʧÁð À§Ã¡ð¼¡¨Å «ÖôÒ측¸ ÍðÎ ¨ÅôÀÐ §À¡ýÈ ÀÆì¸í¸Ç¢Ä¢ÕóÐ þýŠ¼ýð Ţξ¨Ä
  • À¡ø ÁðÎõ ÀÂÓÚò¾¢ì¦¸¡ñÊÕó¾Ð... ´Õ ¿¡û ÓØÐõ ¾ñ½£÷ Å¢¼¡Áø ¸¡ö¨Åì¸ ¸¡¨Ä¢ø ¾¢Èó¾ À¡ø þÃ× Å¨Ã ºÁ÷ò¾¡¸ Å¡º¨ÉԼɢÕì¸...«ó¾ ÀÂÓõ ´Å÷..
  • º¨ÁÂĨÈ¢ø ±ô§À¡Ðõ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø §¸ðÌõ ¦ÁøĢ ¯÷ ¯÷ ºò¾õ þøÄ¡Áø ţΠ§ÀèÁ¾¢Â¡ö §¾¡ýÚ¸¢ÈÐ

þÉ¢ ÌÇ¢÷ º¡¾É ¦ÀðÊ §Åñ¼¡õ ±Ûõ ÓÊ×ìÌ ¿¡ý ÅóРŢð¼¡Öõ...âô§À÷ À¡÷ì¸ Åó¾ ¬û ºÃ¢ ¦ºö Ҿ¢Â¾¢ý Ó측ø Å¢¨Ä §¸ð¸ §ÀÕóÐ ¸ð¼½õ ¦¸¡ÎòÐ «ÛôÀôÀð¼¡ý. ±ýɾ¡ý þ¾¢Ä¢ÕìÌõ ±É þ¨½Âò¾¢ø À¡÷ò¾¡ø ²¸ôÀð¼ Å¢Çì¸ôÀ¼íÙ¼ý, ¸¢¨¼ò¾ ¾¸Åø¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ ¿¡§Á À¢Ã¢òÐ À¡÷ô§À¡§Á ±É À¡÷ò¾¡ø ôãº÷ìÌû þÕìÌõ ôÄ¡ŠÊì ¸Å¨Ã ¸ÆüȢɡø ¯û§Ç ±øÄ¡§Á ¦¾÷Á§¸¡ø, à츢 ±Ã¢Ôõ ¦À¡Õð¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ «ùÅÇ× À½õ Å¡í¸¢ ¦¸¡û¸¢È¡÷¸û, ¸õôú÷, â§Ä ŠÅ¢ðî, §Àý, ÜÄ÷, ¸¢Ã¢ø, ÌÆ¡ö¸û ¾Å¢Ã ¦ÅÚõ Ìô¨À ¾¡ý ±øÄ¡õ. À¢Ã¢ðƒ¢ý §ÁÄ¢Õó¾ Á⡨¾ Íò¾Á¡¸ «×ð. ±í§¸ ²Á¡ó§¾¡õ ±É ¿¢¨ÉòÐôÀ¡÷ò¾¡ø þÐÄ ¬ÃõÀòÐÄ þÕó§¾ Àô ¾¡ý ±É þÕÀ¾¡ñθÙìÌ Óý Áɾ¢ø À¾¢ó¾ Å¢ÇõÀà Áí¨¸ Ó¸õ ¿¢ÆÄ¡¸...

þÉ¢ Ò¾¢Â§¾ Å¡í¸¢É¡Öõ Á¡¾ò¾¢ø 15 ¿¡ð¸û ¿¢Úò¾¢§Â ¨Åì¸ ´Õ øº¢Â ¾¢ð¼ò§¾¡Î þÕ츢§Èý.

17 செப்டம்பர், 2010

மார்கழிக்கோலம்

மார்கழி அதிகாலை...

முதல் நாள் இரவே
தின்னையில் வரைந்து
பழகியிருந்த
கலர் கோலம்....

தெருவை அடைத்தபடி
பெரிதாய் உயிர்பெற....

கையில் கலர்களும் கோலமாவும்
காயவைத்த சாரமிழந்த டீத்தூளும்
சலித்தெடுத்த ஆற்றுமணலும்
வேகமாக நிறமாற்றங்களை
சந்திக்க...

மனம் மட்டும் கோலத்திலேயே
அமிழ்ந்திருக்க...

அம்மா, பாட்டி, அத்தைகள்
யாவரும் தூக்கத்திலிருந்து
வெளிவர போராடியபடி...

இந்த டீயை குடித்து விட்டு
மிச்சத்தை போடம்மா...
தலையில் ஒரு கம்பளி
போட்டுகொள்ள கூடாதா?
ரொம்ப குளிருதே...
சின்ன கோலமா போடேன்...

கூஜாவிலிருந்து டம்ளருக்கு
மாறிய சூடான கடை டீயுடன்
உண்மை கரிசனத்துடன்
என் தாத்தா...

எல்லாம் தூங்கரதை பாரு
சின்ன குழந்தையை
கோலம் போட விட்டுட்டு....
என்னால் மற்றவர்களுக்கு
கிடைக்கும் போனஸ் திட்டு...

பஜனை வரும் நேரத்தில்
அவசரமாக கோலத்தை
முடிக்கும் அடுத்த வீட்டு
சின்னப் பாட்டி...

பாம்பு கிடக்கும் நீ
தனியே கொல்லைக்கு
போகாதேன்னு
எத்தனை முறை
சொல்றது...

பதறியபடி
பூசணிப்பூ பறித்து தரும்
என் ஆசைபாட்டி...

தூக்கம் வராமல்
பார்த்துக்கொண்ட
கோவில் ஒலிபெருக்கியின்
சத்தமான பக்தி பாடல்கள்

அரையாண்டு பரிட்சைகள்..
இடையில் படிக்க கிடைத்த
விடுமுறை நாட்கள்...

குளிர் கால மதிய வெயில்
சுட்டெரிக்காமல்
மெல்ல பட்டுச்செல்ல
நாள் முழுதும்

ஊதல் காற்று...

தூரத்தில் கேட்கும்
பறவைகளின் ஒலி
குயிலின் ஒசை

புது பாவாடை சரசரக்க
இனிப்பு வழங்க
வரும் பிறந்த நாள் சிறுமி

இந்த வீட்டுக்கோலம் தான்
ரொம்ப பெரிசா அழகா இருக்கு...
ஆச்சரியத்தபடி போகும்
வழிபோக்கர்கள்...

"யாரு தாத்தா
கோலம் போட்டது?"

"என் பேத்திம்மா"
பெருமையாய்
என் தாத்தா புன்முறுவலுடன்...

என் வீட்டு வாசலில்
சிறிதாய் கோலமிடும் என் அம்மா...

"என்னடீ தாத்தா வீட்டில்
பெரிய கோலமா போடுற
இங்க சின்ன கோலம்
தான் போடமுடியுது
தினமும்"

குளிர் ஒத்துக்கொள்ளாத
அங்கலாய்ப்புடன் அன்பு அம்மா...

"இனி இங்கயும் பெரிய
கோலம் போடுறேம்மா"
இருவீட்டிலும் கோலம்
போட்டு காலை ஏழு மணிக்கு
படுத்துறங்கிய சில நாட்கள்

போகி பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
நாட்களில் மட்டும்
என்னை கோலம் போட விடாத
வில்லி அத்தைகள்...

அன்றெல்லாம் அம்மாவின்
திருப்த்திகாய்
இடம் தெரியா வண்ணம்
பாய் விரித்தது போல் ரங்கோலி
என் வாசலில்...

இள வேனிற் காலம் முழுதும்
மார்கழி நினைவில்....

அடுத்த மார்கழி எப்போது
வருமென காத்திருப்பு...

"அவள் வெளி நாட்டில்
இருக்கிறாள்"
இன்று
பெருமையாய் என்
பெற்றோர்...

ஆறாம் மாடியில்...
அப்பார்ட்மென்ட்
வாசலில்....

இருக்கும் இடத்தில்
கோலமிட
மனமில்லாமல்
அதே நான்....

16 செப்டம்பர், 2010

யோகா

யோகா என்றால் ஒரு தனி மதிப்பு இருக்கிறது, மற்ற உடற்பயிற்சிகள் போலில்லாமல் உடலையும், உள்ளுறுப்புகளையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பயிற்சியாக அது அமைகிறது. எந்த வயதினரும் செய்யக்கூடிய பயிற்சிகள் அதில் உண்டு . நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்காக வாழ்வில் சாப்பிடுவது தூங்குவது போல இதையும் ஓர் அங்கமாக பிடிவாதாமாக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே. இதனால் கிடைக்கும் பலன்கள் எண்னற்றவை. இதை தொடர்ந்து செய்து வருவோரை பார்க்கும் போது  நாம் உணரலாம். இவையெல்லாம் நமக்கு நன்றாக தெரிந்தும் தினமும்  நம் வாழ்வில் கடைபிடிப்பதில்லை. அதை தட்டிக்கழிக்க ஆயிரம் காரணங்கள். யோக பயிற்சி மட்டும் நம் வாழ்க்கை முறையானால் வாழ்வே இனிமையாக மாறிவிடும்.

13 செப்டம்பர், 2010

உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தாரா?

அட இப்படி ஒரு கதையா? என்று நினைக்கவைத்த ஒரு கதையை உங்களுடன் பகிர்கிறேன்...

மிஸ்டர் சங்கரனுக்கு ஒரு தாத்தா இருந்தார். அவர் ஒரு பெரிய குல்லா வியாபரி. பரம்பரையாகவே சங்கரனின் குடும்பம் குல்லா வியபாரம்தான் செய்து வந்தார்கள். எனவே சங்கரனும் குல்லா வியாபாரமே செய்து வந்தார். அவரது தாத்தா குல்லா  விற்பனையில் தனது சாதனைகள், அனுபவங்கள், விற்பனை நுணுக்கங்கள் எல்லாவற்றையும் விரிவாக அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தார். எனவே சங்கரனும் தாத்தாவின் அறிவுரைகளை நினைவில் வைத்து குல்லா விற்பனை செய்து வந்தார்.

ஒரு முறை சங்கரன் ஒரு கிராமத்தில் குல்லா விற்றுவிட்டு அடுத்த கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். பாதி தூரம் செல்லும் போது ஒரே வெய்யிலாக இருந்ததால் ஒரு மர நிழலில் ஓய்வெடுத்துவிட்டு செல்ல தீர்மானித்தார். குல்லா மூட்டையை பாதுகாப்பாக அருகிலேயே வைத்துவிட்டு சற்று கண்ணயர்ந்தார். சற்று நேரத்துக்குப்பிறகு க்றீச் க்றீச் என்ற ஒலி அருகில் கேட்கவே திடுக்கிட்டு கண்விழித்தார். முதலில் மூட்டையை பார்த்தார் ஆ ஒரு குல்லாய் கூட மூட்டையில் இல்லை. அங்குமிங்கும் பார்த்தவர் மரத்தின் மேலிருந்த குரங்கு கூட்டத்தை பார்த்து அசந்து போனார். ஒவ்வொரு குரங்கின் தலையிலும் ஒவ்வொரு குல்லாய். 

ஆனால் சங்கரன் அலட்டிக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் இந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என அவருக்கு தாத்தா சொல்லி கொடுத்திருக்கிறார்.  நாம் செய்வதையே குரங்குகளும் திரும்ப செய்யும் எனவும் தலையில் உள்ள ஒரு குல்லாயை வைத்து எல்லாவற்றையும் திருப்பிவிடலாம் என நினைத்தார்.

மரத்தின் மேலிருந்த குரங்குகள் எல்லாம் அவரை பார்த்து பல்லை காண்பித்து இளித்துக்கொண்டிருந்தன.

'சிரிக்கிறீர்களா? முட்டாள் குரங்குகளே உங்களிடமிருந்து எப்படி குல்லாய் வாங்குவது என எனக்கு தெரியும்' என்று மனதிற்குள் சிரித்தவாரே தனது தலையிலிருந்த குல்லாயை தூரமாய் தூக்கி எறிந்து விட்டு அலட்சியமாக மேலே பார்த்தார்.

அட, இது என்ன, ஒரு குரங்கு கூட குல்லாவை தூக்கி எறியவில்லையே என்று நினைத்த போது ஒரு குட்டிக்குரங்கு மரத்திலிருந்து வேகமாக இறங்கி வந்து இவர் வீசி எறிந்த குல்லாவை எடுத்துக்கொண்டு மரத்தின் மேலேறிக்கொண்டது.

சங்கரனுக்கு ஒரே ஆச்சர்யம், என்னங்க ஆதி இப்படி ஆகிப்போச்சே! என்ன கொடும சரவணன் இது!  என்னங்கடா   இது புது தினுசா இருக்கு! உக்காந்து யோசிப்பாய்ங்களோ என்றெல்லாம் ரெடிமேட் வசனங்களுடன் அவர் அங்கலாய்க்கும் போது, இன்னொரு அதிர்ச்சி,
அந்த குட்டிக்குரங்கு பேசியது "உனக்கு மட்டும் தான் தாத்தா இருந்தார்னு நினைச்சுகிட்டியா?"

2 செப்டம்பர், 2010

காலம்

கடந்த காலமெனும்
நினைவுகளிலும்

எதிர்காலமெனும்
கற்பனைகளிலும்

நிகழ்காலமெனும்
நிஜத்தை

நின்று ரசிக்காமல்
ஓடி ஓடி எதையோ
தேடுகிறோம்

எதைத்தேடுகிறோம்
என  நினைத்துப்பார்த்தால்
பணம், பதவி, சொத்து,
வெற்றி, அங்கிகாரம்
இப்படி
ஏதுவோ ஒன்று

கிடைத்ததா? என்றால்
இல்லவே இல்லை

கிடைத்தாலும்
அதை  நினைக்க
நேரமேயில்லை

ஒன்றன் பின் ஒன்றாக
நம் இலக்குகள்
மாற மாற

தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை

தேடலும் ஓடலும்
தவறேயில்லை
வாழ்வின் ஒளியே
அவைதான்

நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்

கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்

எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்

தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்

வாழ்வை ரசிப்போம்
ரசித்தபடியே
ஓடுவோம்
தேடுவோம்

வெற்றியை
கொண்டாடுவோம்