3 ஜூலை, 2010

மலர்..

உன் இதழ்களோரம்
ஈர மென்மை

பார்த்தவுடன் புத்துணர்வு

காய்ந்திடத்தான் போகிறோம்

எனத்தெரிந்தும் சுணங்காமல்

அழகை அள்ளித்தருகிறாய்...

வண்ணத்திலும் வாசத்திலும்

மனதை கொள்ளை கொள்கிறாய்...

இன்றலர்ந்த மலர் நீ

ஒர் ஆயிரம் அழகை

தோற்கடிக்கும் அரசி நீ

காலையில் பிறப்பும்

மாலையில் இறப்பும்

விரும்பி ஏற்கும்

அதிசய அழகி நீ...

உனை எங்கு பார்த்தாலும்

நின்று விடத்தோன்றுகிறது.

கண்களால் படம்பிடித்து

மனதில் பதித்து

பத்திரப்படுத்த...

எத்தனை முறை

கவி வார்த்தாலும்

போதாது போலவே

உன்னழகை அரைகுறையாய்

சொன்னது போலவே...

தவிப்புடன் நான்...

இயற்கையின்

பிரம்மிப்பில்

முதலிடம் உனக்கு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக