23 ஜனவரி, 2016

ஞானம்



தேடலின் அக்னி தீவிரமாய் 
தேடிய மனத்தையே அழிக்க 
ஆரம்பித்திருந்த தருணம்

பல பயிற்சிகளையும் முயற்சிகளையும்
கெட்டியாக பிடித்திருந்த நேரம்

புலால் விலக்கி விரதமிருந்து
உடல் வாடி மனம் வாடி
நொந்து நோய் அடைந்த கணம்

முயற்சிகளெல்லாம் தோல்வியடைந்த  நொடி
சட்டென ஒரு மாயை

மனம் தானே இயங்குவதையும்
ஓடிச்சென்று அதனுடன் குழப்பம் செய்யும் 
மனதின் இன்னொரு பகுதி 
தனியாக இயங்குவதையும் தெளிவாக உணர்த்திய

அந்த வினாடி மிகச்சிறியது தான்
ஆனால் கிடைத்தற்கரிய மிகப்பெரிய பரிசு

விடுதலையான விந்தை
தொடர் மனப்போராட்டம் 
முற்றுப்பெற்ற முடிவு

ஓயாத மன அலைகள் 
இப்போதும்....
ஆனால் அவை ஒடும் போது 
உரசல்கள் இல்லை 
தடங்கலற்ற வெள்ளப் பிரவாகம்

இப்படியும் ஒரு ஞான நிலை 
இதே பைத்தியக்கார மனதில்....













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக