சில்லென்ற காற்று
ஐஸ் வெப்பத்தில் தண்ணீர்
வெளிச்சமில்லா விடியல்
நிறுத்தாமல் கொட்டும் மழை
ஜன்னல் ஒரங்களில்
சாரல் முத்துக்கள்
சாக்கு விரித்த தரை
என்னேரமும் எரியும்
மின் விளக்கு
ஓடத்தேவை ஏற்படாத
காற்றாடி
வெயிலுக்காக
காத்திருக்கும்
துவைக்காத துணிகள்
இரும்பு மேஜையின் மீது
புதிதாய் விரிப்பு
தேடிப்பிடித்து அணியப்படும்
ஸ்வெட்டர்கள்
வீதியில் விரியும்
குடைப் பூக்கள்
வண்ண வண்ணமாக
மழைச்சட்டைகள்
அலுத்துக்கொள்ளும்
சலித்த மனம்
மழையை கண்டால்
தோகை விரித்து
ஆடும் மயில் போல்
முன்பு குதித்த அதே மனம்
அம்மாவின்
குளிர் கால பயம்
என்னையும் பற்றிக்கொள்ள
மழையென்றால்
ஏன் பயப்படுகிறாய்
என அம்மாவிடம்
கேள்வி எழுப்பிய
என் பேதமையும்
ஒரு நாள்
பாத்திரம் தேய்த்துப்பார்
என சவால் விடாமல்
இரு இரு
இன்னும் கொஞ்ச காலம்
தானே இப்படி
அவிழ்த்து விட்டது
போல் திரியமுடியும்
அதன் பின் உனக்கே தெரியும்
என்ற உள் குத்து
இப்போது தான்
புரிகிறது
புரிந்தாலும் அம்மா
எவ்வளவோ
பண்ணிட்டோம்
இதென்ன பெரிய வேலை?
நடுங்கிக்கொண்டே
பாத்திரம் தான்
தேய்ப்போமே
வேறு வழி??!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக