14 அக்டோபர், 2016

இடுக்கண் வருங்கால் நகுக

வள்ளுவர் இதை ஏன் எழுதினார் என்று சிந்தித்தால், ஓவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் தோன்றும். ஆனால் இப்போது எப்படி யோசித்தாலும் ஒரே ஒரு  காரணம் தான் தோன்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒன்று முடிந்து மற்றது வருகிறது, நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபாடு. எது வந்தாலும் முழுவதும் எதிர்க்காமல்  நம்மை தாண்டிச் செல்ல அனுமதித்தால் தானே ஓடி விடும். இதைத்தான் வள்ளுவர் கூறியிருக்கிறார். போராடி பார்த்து இது சரியான வழி இல்லை என்பதை மனப்பூர்வமாக புரிந்து கொண்டால் மட்டுமே இந்த புரிதல் சாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக