23 மார்ச், 2010

கடற்கரை

கலங்கரை வீதியில்
நீலப் புன்னகை
கடலா? வானா?
கேள்விக்கொக்கிகள்
சிவப்பா? மஞ்சளா?
அந்திச் சூரியன்
வெள்ளையாய் கறுப்பாய்
மணலில் சிப்பிகள்
பெரிதாய் சிறிதாய்
சிறுவர் கோட்டைகள்
வேகமாய் மெதுவாய்
நதியில் படகுகள்
என்றென்றும் சலிக்காத
அழகான அலைகள்
இமை நனைந்து
மனம் குமுறி
களைத்து வருவோரை
இதமாய் வருட
வரும் கடற்காற்று
இது போதும்
இப்போது
மனம் நிறைந்து
வழிகிறது மகிழ்ச்சியில்
நன்றி! இயற்கை!
மறுபடியும்
உனைப்பார்க்கும்
கணம் வரை
விழியோரம் ஆவல்
மனமெல்லாம்
ஏக்கம்.....

17 மார்ச், 2010

சின்னக் கண்ணன்

காலையிலேயே
உன் கைகளில்
நீலத் தூரிகை....

முன் பகலுக்கு முன்
தாள்களும் உன்
கால்களும்

நீல மேக ஷ்யாமள வண்ணம்.

8 மார்ச், 2010

நல்ல கணக்கு


ஒரு வலைப்பதிவில் பார்த்த


சத்தம் போட்டு சிரிக்க வைத்த


ஒரு படம்


இதோ உங்கள் பார்வைக்கு...


6 மார்ச், 2010

வெ - பா

வெள்ளியன்று விடியல்
வெண்பனிச்சூழல்
வெங்கலத் தகடு வானில்
வெட்டுப்படா மரம்
வெறுக்காத ரீங்காரம்
வெளிச்சக் கீற்று
வெயில் கன்று
வெள்ளை நிறப் பறவை
வெற்றிக் கொண்ட பார்வை
வெளியே நம் உலகம்
வெறுக்காது நாளும்
வெளியேற்றிடு வஞ்சம்
வெட்டி வீழ்த்திடு வெஞ்சினம்
வெல்லம் போல் நெஞ்சம்
வெகுமதி உன் தஞ்சம்

5 மார்ச், 2010

பேனாவை வீணடிப்பது எப்படி?

கொஞ்சம் நேரம்
தாளில் எழுத வேண்டும்
அம்மா பார்க்கும் வரை...

அப்புறம் மேஜையில்
பின் புத்தகம், சுவர், தரை,
கை, கால், வயிறு என
அனைத்திலும் முயற்சித்து
பார்க்க வேண்டும்.....
அம்மாவுக்கு தெரியாமல் .....

பார்த்து விட்டால்
தப்பித்துக்கொள்ள
கையோடு ஒரு
காகிதமும்
வைத்திருக்க வேண்டும்

அவள் பார்க்கும் நேரம்
காகிதத்தில் மட்டுமே
எழுதுவதாக பாசாங்கு
செய்ய வேண்டும்

பேனா எழுதுவதை
நிறுத்திய பிறகு
அண்ணனின் பள்ளிப்பையிலோ
அப்பாவின் சட்டைப்பையிலோ
தயாராக இருக்கும்
அடுத்த பேனா !!!!