23 மார்ச், 2010

கடற்கரை

கலங்கரை வீதியில்
நீலப் புன்னகை
கடலா? வானா?
கேள்விக்கொக்கிகள்
சிவப்பா? மஞ்சளா?
அந்திச் சூரியன்
வெள்ளையாய் கறுப்பாய்
மணலில் சிப்பிகள்
பெரிதாய் சிறிதாய்
சிறுவர் கோட்டைகள்
வேகமாய் மெதுவாய்
நதியில் படகுகள்
என்றென்றும் சலிக்காத
அழகான அலைகள்
இமை நனைந்து
மனம் குமுறி
களைத்து வருவோரை
இதமாய் வருட
வரும் கடற்காற்று
இது போதும்
இப்போது
மனம் நிறைந்து
வழிகிறது மகிழ்ச்சியில்
நன்றி! இயற்கை!
மறுபடியும்
உனைப்பார்க்கும்
கணம் வரை
விழியோரம் ஆவல்
மனமெல்லாம்
ஏக்கம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக