எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் தமிழ் அணங்கே!! உன் சீர் இளமை திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துகிறேன்!!
27 அக்டோபர், 2010
பார்த்துப்பழகிய அதே....
அதே ஊர்
அணுஅணுவாய் ரசித்த
அதே இடங்கள்
ஒவ்வொரு மண்ணிலும்
கலந்திருக்கும்
என் அன்பு
உயர உயர
பறந்து சென்று
பறக்காமலே
பெரிய வட்டமாக
சுற்றி இறங்கும்
பிற்பகல் பறவை
எப்போதும் உயிருடன்
இருப்பதை
அறிவுறுத்திக்
கொண்டிருக்கும்
கடிகாரமுள் சத்தம்
என் அன்பு
என் கோபம்
என் அழுகை
என் வெறுப்பு
என் பதற்றம்
என் ஏமாற்றம்
எல்லாம் பார்த்தும்
எனை வெறுக்காத
என் வீடு
காய்கறியோ
கோலமாவோ
ப்லாஸ்டிக் பொருளோ
கூவி விற்கும்
வியாபாரியின் குரல்
காரைக்கால் வானொலி
நிலைய காலை
நேரப்பாடல்கள்
கூடவே
இப்போது நேரம்
காலை ---மணி -- நிமிடங்கள்
அறிவிப்பாளரின் குரல்
வாழ்க்கையின்
பாதியைத் தின்ற
பேருந்துக்காத்திருப்புகள்
தினம் தவிர்க்க
முடியாத
பேருந்துப்பயணங்கள்
வழி நெடுகிலும்
துணை வரும்
அரசலாறு...
பயிலுமிடத்தை
நெருங்கும்போது
காரணமின்றி
அதிகப்படும்
பதட்டம்
அன்பான ஆசிரியர்கள்
அழகான படிப்பு
எல்லாம்
அதிவேகமாய்
அன்னியப்படுத்தபட்ட
சிங்கப்பூர் சம்பந்தம்
முன்பெல்லாம்
இந்தியப்பயணத்தை
வெகுவாய்
எதிர்பார்த்திருந்த
மனம்
இத்தனை வருடங்களில்
நொந்து குழம்பி இனி
சென்றால் சுற்றுலா தான்
என்னும் நிலைக்கு
தெளிந்து
பக்குவப்பட்டுவிட்ட
அறிவு
காலத்தினூடே
ஓட கற்றுக்கொண்டால்
வாழ்க்கையே
எளிது! எளிது!
இனிது! இனிது!
30 செப்டம்பர், 2010
நிறைந்த நிறைவிலி..
என்ன செய்தாலும்
நிறைவேயில்லாத மனம்...
எப்போதும் எதையாவது
செய்யாமல் இருப்பதே
தவறு போல் ஏங்கும்...
எதை ஆரம்பித்தாலும்
கால நேரம்
மறந்து அதனுள்
சென்றுவிடும்
சிறு குழந்தை போல்...
மீண்டு வந்தபின்
இவ்வளவு நேரம்
மற்ற வேலைகள்
செய்யவில்லையே
என ஏங்கும்...
நிகழும் நொடிகளை மட்டுமே
தொடர ஆரம்பித்த பின்
அட என்ன இது
இப்படி சமத்துக் குழந்தை
போல் சத்தமில்லாமல்
அலைபாயாமல்
அழகான பரிணாமத்தில்
அதே மனம்.
28 செப்டம்பர், 2010
பிரிட்ஜ் இல்லாத நாட்கள்
±¾¢÷À¡Ã¾ «¾¢÷¢ø ±Ã¢îºø ÅÃÅ¢ø¨Ä Á¡È¡¸ ¦Å̸¡ÄÁ¡¸§Å ²ì¸Á¡¸ þÕó¾ Å¢"Âò¨¾ «Óø ÀÎò¾ ¸¢¨¼ò¾ Å¡öôÒ측¸ ÁÉõ Ìà¸Ä¢ò¾Ð. ±ýÉ ¦ºöÂÄ¡õ?
ӾĢø ¯ûÇ¢Õó¾ ¦À¡Õð¸¨Ç ±ÎòÐ §Á¨ƒÂ¢ø ¨Åì¸ §Á¨ƒ§Â ¿¢¨ÈóÐ ÀÂÓÚò¾¢ÂÐ.
¸Å¨ÄìÌâ º¢Ä ¦À¡Õð¸û
- «¨Ã ¼ôÀ¡ §¾í¸¡ö ÐÕÅø
- ´Õ ¼ôÀ¡ À¡ø
- Àð¼÷
- ÌÆó¨¾Â¢ý ƒ¤Ã ÁÕóÐ
- º¢Ä ¸¡ö¸È¢¸û
- 3 ¦ÃʧÁð À§Ã¡ð¼¡ì¸û (Ò¾¢ÂÐ Å¡í¸ ÁÈóÐ §À¡É ஞாÀ¸ ºì¾¢ìÌ ¿ýÈ¢)
- À¡¾¢ ¾£÷ó¾ Á¡ì Áð¼ý
- ¦¸¡ïº§Á þÕó¾ மாக் º¢ì¸ý
- «¨ÃòÐ ¨Åò¾ §¾¡¨º Á¡×
- º¢Ä Å¢¾¢Ó¨È¸û «ÅºÃÁ¡¸ «Óġ¢É...
- «ýÚ §¾í¸¡ö ÐÕÅÖõ Á¡ì Áð¼ý Á¡ì º¢ì¸ý ±øÄ¡õ §º÷óÐ ´Õ ÌÆõÒ ¾ÂáÉÐ
- À¡¸ü¸¡ö¸û ÀØòР⺽¢ôâì¸û §À¡ø «Æ¸¡¸ Ţâ󾨾 À¡÷òРú¢ì¸ §¿÷ó¾Ð
- ´Õ Å¡ÃòÐìÌõ §ÁÄ¡¸ Å£½¡¸¡Áø Àð¼÷ þýÚõ ±ý¨É À¡÷òÐ º¢Ã¢ì¸¢ÈÐ
- ´Õ À¡ò¾¢Ãò¾¢ø ¾ñ½£÷ ¨ÅòÐ «¾ý §Áø Á¡× ÌŨǨ ¨Åì¸ 2 ¿¡ð¸û ÒǢ측Áø §¾¡¨º ͨÅ¡¸ þÕó¾Ð, ÁÚ ¿¡û 芸ÄóÐ «õÁ¡Å¢ý Ó¨ÈôÀÊ ¦Á¡Ú ¦Á¡Ú §¾¡¨º.
- ¸È¢§ÅôÀ¢¨Ä ¼ôÀ¡Å¢ø ¯ÕÅ¢ ¨Åò¾ ÀÊ ´Õ Å¡ÃÁ¡¸ «ôÀʦ þÕ츢ÈÐ
- §¸Ãð, À£ýŠ ¦ÅǢ¢§Ä§Â ºó§¾¡"Á¡¸ þÕ츢ýÈÉ
- ¾¢ÉÓõ ´Õ ³óÐ ¿¢Á¢¼ ¿¨¼Â¢ø ¦ºøÄìÜÊ Á¡÷즸ðÊø Ò¾¢Â ¸¡ö¸È¢¸û Å¡í¸¢ º¨Áயல்
- §Á¨ƒÂ¢ý §Áø «ò¾¨É ÀÆí¸Ùõ «Äí¸¡ÃÁ¡ö «Î츢 ¨ÅôÀ¾¢ø þô§À¡Ð ±ø§Ä¡Õõ ¿¢¨È§ŠÀÆõ º¡ôÀ¢Î¸¢§È¡õ.
- Ëô ôãºÃ¢ø ¨ÅìÌõ ¯¼ø ¿ÄòÐìÌ §¸Î Å¢¨ÇÅ¢ìÌõ ôâº÷§ÅðÊù §º÷ò¾ ¦À¡Õð¸¨Ç «È§Å ¾Å¢÷ôÀÐ.
- Á¡¾ì¸½ì¸¡¸ ¸¡ö¸È¢ Å¡í¸¢ ¯û§Ç ¨ÅòÐ º¢ÄÅü¨È º¨Á측Á§Ä à츢¦ÂâÅÐ, ƒ¢øÖýÛ þÕìÌ ±Î측§¾ ±ýÚ ±¨¾Â¡ÅÐ ¦¾¡Îõ ÌÆó¨¾¸¨Ç Å¢ÃðÎÅÐ, ¿ì¦¸ðŠ ±Ûõ À¾ôÀÎò¾ Àð¼ ¯½¨Å ±ñ¦É¢ø ¦À¡Ã¢òÐ ÌüÈ ¯½÷×¼ý ¾¢ýÉ즸¡ÎôÀÐ. «ÅºÃòÐ측¸ Å¡í¸¢ ¨Åò¾¢ÕìÌõ ¦ÃʧÁð À§Ã¡ð¼¡¨Å «ÖôÒ측¸ ÍðÎ ¨ÅôÀÐ §À¡ýÈ ÀÆì¸í¸Ç¢Ä¢ÕóÐ þýмýð Ţξ¨Ä
- À¡ø ÁðÎõ ÀÂÓÚò¾¢ì¦¸¡ñÊÕó¾Ð... ´Õ ¿¡û ÓØÐõ ¾ñ½£÷ Å¢¼¡Áø ¸¡ö¨Åì¸ ¸¡¨Ä¢ø ¾¢Èó¾ À¡ø þÃ× Å¨Ã ºÁ÷ò¾¡¸ Å¡º¨ÉԼɢÕì¸...«ó¾ ÀÂÓõ ´Å÷..
- º¨ÁÂĨÈ¢ø ±ô§À¡Ðõ Ü÷óÐ ¸ÅÉ¢ò¾¡ø §¸ðÌõ ¦ÁøÄ¢Â ¯÷ ¯÷ ºò¾õ þøÄ¡Áø ţΠ§ÀèÁ¾¢Â¡ö §¾¡ýÚ¸¢ÈÐ
þÉ¢ ÌÇ¢÷ º¡¾É ¦ÀðÊ §Åñ¼¡õ ±Ûõ ÓÊ×ìÌ ¿¡ý ÅóРŢð¼¡Öõ...âô§À÷ À¡÷ì¸ Åó¾ ¬û ºÃ¢ ¦ºö Ҿ¢Â¾¢ý Ó측ø Å¢¨Ä §¸ð¸ §ÀÕóÐ ¸ð¼½õ ¦¸¡ÎòÐ «ÛôÀôÀð¼¡ý. ±ýɾ¡ý þ¾¢Ä¢ÕìÌõ ±É þ¨½Âò¾¢ø À¡÷ò¾¡ø ²¸ôÀð¼ Å¢Çì¸ôÀ¼íÙ¼ý, ¸¢¨¼ò¾ ¾¸Åø¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ ¿¡§Á À¢Ã¢òÐ À¡÷ô§À¡§Á ±É À¡÷ò¾¡ø ôãº÷ìÌû þÕìÌõ ôÄ¡ŠÊì ¸Å¨Ã ¸ÆüȢɡø ¯û§Ç ±øÄ¡§Á ¦¾÷Á§¸¡ø, à츢 ±Ã¢Ôõ ¦À¡Õð¸¨Ç ¨ÅòÐ즸¡ñÎ «ùÅÇ× À½õ Å¡í¸¢ ¦¸¡û¸¢È¡÷¸û, ¸õôú÷, â§Ä ŠÅ¢ðî, §Àý, ÜÄ÷, ¸¢Ã¢ø, ÌÆ¡ö¸û ¾Å¢Ã ¦ÅÚõ Ìô¨À ¾¡ý ±øÄ¡õ. À¢Ã¢ðƒ¢ý §ÁÄ¢Õó¾ Á⡨¾ Íò¾Á¡¸ «×ð. ±í§¸ ²Á¡ó§¾¡õ ±É ¿¢¨ÉòÐôÀ¡÷ò¾¡ø þÐÄ ¬ÃõÀòÐÄ þÕó§¾ Àô ¾¡ý ±É þÕÀ¾¡ñθÙìÌ Óý Áɾ¢ø À¾¢ó¾ Å¢ÇõÀà Áí¨¸ Ó¸õ ¿¢ÆÄ¡¸...
þÉ¢ Ò¾¢Â§¾ Å¡í¸¢É¡Öõ Á¡¾ò¾¢ø 15 ¿¡ð¸û ¿¢Úò¾¢§Â ¨Åì¸ ´Õ øº¢Â ¾¢ð¼ò§¾¡Î þÕ츢§Èý.
17 செப்டம்பர், 2010
மார்கழிக்கோலம்
முதல் நாள் இரவே
தின்னையில் வரைந்து
பழகியிருந்த
கலர் கோலம்....
தெருவை அடைத்தபடி
பெரிதாய் உயிர்பெற....
கையில் கலர்களும் கோலமாவும்
காயவைத்த சாரமிழந்த டீத்தூளும்
சலித்தெடுத்த ஆற்றுமணலும்
வேகமாக நிறமாற்றங்களை
சந்திக்க...
மனம் மட்டும் கோலத்திலேயே
அமிழ்ந்திருக்க...
அம்மா, பாட்டி, அத்தைகள்
யாவரும் தூக்கத்திலிருந்து
வெளிவர போராடியபடி...
இந்த டீயை குடித்து விட்டு
மிச்சத்தை போடம்மா...
தலையில் ஒரு கம்பளி
போட்டுகொள்ள கூடாதா?
ரொம்ப குளிருதே...
சின்ன கோலமா போடேன்...
கூஜாவிலிருந்து டம்ளருக்கு
மாறிய சூடான கடை டீயுடன்
உண்மை கரிசனத்துடன்
என் தாத்தா...
எல்லாம் தூங்கரதை பாரு
சின்ன குழந்தையை
கோலம் போட விட்டுட்டு....
என்னால் மற்றவர்களுக்கு
கிடைக்கும் போனஸ் திட்டு...
பஜனை வரும் நேரத்தில்
அவசரமாக கோலத்தை
முடிக்கும் அடுத்த வீட்டு
சின்னப் பாட்டி...
பாம்பு கிடக்கும் நீ
தனியே கொல்லைக்கு
போகாதேன்னு
எத்தனை முறை
சொல்றது...
பதறியபடி
பூசணிப்பூ பறித்து தரும்
என் ஆசைபாட்டி...
தூக்கம் வராமல்
பார்த்துக்கொண்ட
கோவில் ஒலிபெருக்கியின்
சத்தமான பக்தி பாடல்கள்
அரையாண்டு பரிட்சைகள்..
இடையில் படிக்க கிடைத்த
விடுமுறை நாட்கள்...
குளிர் கால மதிய வெயில்
சுட்டெரிக்காமல்
மெல்ல பட்டுச்செல்ல
நாள் முழுதும்
ஊதல் காற்று...
தூரத்தில் கேட்கும்
பறவைகளின் ஒலி
குயிலின் ஒசை
புது பாவாடை சரசரக்க
இனிப்பு வழங்க
வரும் பிறந்த நாள் சிறுமி
இந்த வீட்டுக்கோலம் தான்
ரொம்ப பெரிசா அழகா இருக்கு...
ஆச்சரியத்தபடி போகும்
வழிபோக்கர்கள்...
"யாரு தாத்தா
கோலம் போட்டது?"
"என் பேத்திம்மா"
பெருமையாய்
என் தாத்தா புன்முறுவலுடன்...
என் வீட்டு வாசலில்
சிறிதாய் கோலமிடும் என் அம்மா...
"என்னடீ தாத்தா வீட்டில்
பெரிய கோலமா போடுற
இங்க சின்ன கோலம்
தான் போடமுடியுது
தினமும்"
குளிர் ஒத்துக்கொள்ளாத
அங்கலாய்ப்புடன் அன்பு அம்மா...
"இனி இங்கயும் பெரிய
கோலம் போடுறேம்மா"
இருவீட்டிலும் கோலம்
போட்டு காலை ஏழு மணிக்கு
படுத்துறங்கிய சில நாட்கள்
போகி பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
நாட்களில் மட்டும்
என்னை கோலம் போட விடாத
வில்லி அத்தைகள்...
அன்றெல்லாம் அம்மாவின்
திருப்த்திகாய்
இடம் தெரியா வண்ணம்
பாய் விரித்தது போல் ரங்கோலி
என் வாசலில்...
இள வேனிற் காலம் முழுதும்
மார்கழி நினைவில்....
அடுத்த மார்கழி எப்போது
வருமென காத்திருப்பு...
"அவள் வெளி நாட்டில்
இருக்கிறாள்"
இன்று
பெருமையாய் என்
பெற்றோர்...
ஆறாம் மாடியில்...
அப்பார்ட்மென்ட்
வாசலில்....
இருக்கும் இடத்தில்
கோலமிட
மனமில்லாமல்
அதே நான்....