30 செப்டம்பர், 2010

நிறைந்த நிறைவிலி..

எதுவுமே போதாது போல
என்ன செய்தாலும்
நிறைவேயில்லாத மனம்...

எப்போதும் எதையாவது
செய்யாமல் இருப்பதே
தவறு போல் ஏங்கும்...

எதை ஆரம்பித்தாலும்
கால நேரம்
மறந்து அதனுள்
சென்றுவிடும்
சிறு குழந்தை போல்...

மீண்டு வந்தபின்
இவ்வளவு நேரம்
மற்ற வேலைகள்
செய்யவில்லையே
என ஏங்கும்...

நிகழும் நொடிகளை மட்டுமே
தொடர ஆரம்பித்த பின்
அட என்ன இது
இப்படி சமத்துக் குழந்தை
போல் சத்தமில்லாமல்
அலைபாயாமல்
அழகான பரிணாமத்தில்
அதே மனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக