19 மார்ச், 2011

டிஷ்யும்...டிஷ்யும்..சண்டை....

வயலருகே சாலையில் இருவர் ரத்தம் வழிய மோதி மிதித்துக் கொண்டிருந்தததை பார்த்த நண்பர் ஒருவர் விசனத்துடன், "என்னடா விஷயம், ஏண்டா இப்படி அடிச்சிக்குறிங்க? என்றார்.
சண்டையிட்டவர் 1, "அட நீங்க வேற, இவன் மாட்டை விட்டு என் வயலில் மேய்ப்பானாம். அதான் நாலு சாத்து சாத்தினேன்."
நண்பர், "நீ ஏண்டா அப்படிச்சொன்னே?"
சண்டையிட்டவர் 2 "அதில்ல அவன் என் வயலுக்கு தண்ணி தர மாட்டேன்னு சொன்னான். அதான்."
நண்பர், "நீ ஏண்டா அப்படி சொன்னே? சரி, இதுல எது உன் வயல்?"
சண்டையிட்டவர் 1,"அதுதான், ஆனா வண்டி ஓட்டி சம்பாதிச்சு இனிமேதான் வாங்கனும்."
நண்பர், "சரி, உன் வண்டி எங்க?"
சண்டையிட்டவர் 1,"அதுவா வேலையில் சம்பாதிச்சு இனி தான் வாங்கனும்"
நண்பர்,"என்ன வேலைக்கு போற?"
சண்டையிட்டவர், "அதுவா, இனிமேதான் தேடனும்."
நண்பர் யோசனையுடன் மற்றவரைப் பார்த்து, "சரி உன் மாடுங்க எங்க?"
சண்டையிட்டவர் 2, "அதுங்களா, இனிமேல் தான் வாங்கனும்."
நண்பர்  (நீங்கள் வடிவேலுவை கற்பனை செய்துகொள்ளலாம்), "ஒன்னுமே இல்லாதத்துக்காடா இப்படி அடிச்சிகிறிங்க? ஏண்டா?, ஏன்?, போய் பிழைப்பை பாருங்கடா." தலையில் அடித்தபடி நகர்கிறார்.
இது சின்ன வயதில் தேவையில்லாமல்  நானும் என் தம்பியும் சண்டைபிடித்த நேரங்களில் எங்கள் அப்பா சொல்லும் குறுங்கதைகளில் ஒன்று.

தெளிவுற சிந்திக்க கற்றுத் தந்தமைக்கு நன்றி அப்பா!

2 கருத்துகள்: