விடுவிடுவென நீ 
சென்றுவிட்டாய்...
உன் மனம்
புரியாதது போல்
நான் வெறுப்பேற்றியது...
தவறு தான் 
என் இனியவளே..
எனக்கல்லவா தெரியும்
தினம் நான் 
கடக்கும் பாதை
முள்ளும் கல்லும் 
நிறைந்தது என...
யாவற்றையும் 
சரிசெய்து 
ஒரு நாள் வருவேன்
உன்னருகில்
அவசரப்படாமல் 
காத்திரு...
அதுவரை
என் தோட்டத்தில்
தென்றலாய்
என்னருகிலேயே
வீசிக்கொண்டிரு
காதல் நிறைந்து
கண் பார்க்காமல்
கை தொடாமல்
உன் புகைப்படத்தை
மட்டும் தினம் பார்த்து
உன்னுடன் 
பேசிக்கொண்டு 
தானிருக்கிறேன்..
என்ன? காதோரம் 
நரைமுடி கொஞ்சம்...
பிள்ளைகள்  
வளர்ந்த பின்
வரவேண்டியதாய்
இருக்கும்..
பணம் தேவையில்லை
என்பதெல்லாம்
பேச்சில் எல்லோர்க்கும்
இருந்தாலும்..
நீயும் நானும்
நம் பிள்ளைகளும்
நன்றாய் வாழ...
சிக்கிக்கொண்ட 
சூழ் நிலை
கைதிகளாய்
நாம்...
எனக்கு நீ
உனக்கு நான்
இதில் எங்கு தனிமை...
நான் தனிமையில்
இல்லை...
என்னவளே...
நீ தான்
என் மனதில்
எப்பொதும் 
இருக்கிறாயே...
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக