2 செப்டம்பர், 2010

காலம்

கடந்த காலமெனும்
நினைவுகளிலும்

எதிர்காலமெனும்
கற்பனைகளிலும்

நிகழ்காலமெனும்
நிஜத்தை

நின்று ரசிக்காமல்
ஓடி ஓடி எதையோ
தேடுகிறோம்

எதைத்தேடுகிறோம்
என  நினைத்துப்பார்த்தால்
பணம், பதவி, சொத்து,
வெற்றி, அங்கிகாரம்
இப்படி
ஏதுவோ ஒன்று

கிடைத்ததா? என்றால்
இல்லவே இல்லை

கிடைத்தாலும்
அதை  நினைக்க
நேரமேயில்லை

ஒன்றன் பின் ஒன்றாக
நம் இலக்குகள்
மாற மாற

தேடல் மட்டும்
ஓய்ந்தபாடில்லை

தேடலும் ஓடலும்
தவறேயில்லை
வாழ்வின் ஒளியே
அவைதான்

நிகழ்காலமெனும்
நிஜத்தில்
நின்று
நிதானமாய்

கடந்த காலத்தில்
இருந்து பாடத்தையும்

எதிர்காலத்திலிருந்து
இலக்கையும்

தவிர வேறெதையும்
நிகழ்காலத்தில்
சுமக்காமல்

வாழ்வை ரசிப்போம்
ரசித்தபடியே
ஓடுவோம்
தேடுவோம்

வெற்றியை
கொண்டாடுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக