11 பிப்ரவரி, 2010

வசூல்

ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வரிசையாக கார்கள் நின்றிருந்தன . கடைசியில் நின்ற கார்க்காரர் அந்த ப்பக்கம் சென்ற மனிதரை நிறுத்தி, " என்னாச்சு அங்கே?" என்றார்.
" நம்ம நாட்டுல உள்ள எல்லா அரசியல்வாதிகளையும் தீவிரவாதிகள் கடத்திடாங்க. நூறு கோடி ரூபா தரலைன்னா அவங்களை கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க. அதான் எல்லா காரையும் நிறுத்தி வசூல் பண்ணிக்கிட்டு இருக்கோம்." என்றார் அவர்.
"அப்படியா? இதுவரைக்கும் எவ்வளவு வசூல் ஆகியிருக்கு?"
"வெறும் பத்து லிட்டர் பெட்ரோல் தான்!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக