24 ஜனவரி, 2011

மறுபடியும் ஒரு அழகான கடற்கரை மாலைப்பொழுது....

மெத்தென்ற பச்சைப்
புல்வெளி...
கண்ணுக்கெட்டிய
தூரம்வரை...
அந்தி நேர ஈரக்காற்று...
பறக்கும் பட்டங்கள்...
புதுமையாய்
வண்ணங்களும்
வடிவங்களும்...
பறக்க விடுவதே கருத்தாய்
ஒரு நூறு மனிதர்கள்...
கூடவே விளையாடும்
சிறுவர்கள்...
கடற்கரை ஒரத்தில்
மனதை வசீகரிக்கும்
மாலைப்பொழுது...
பல கடற்கரை பொழுதுகளில்
இதுவும் ஒன்றானாலும்...
இது புதுமை...
பார்வையாளினியாய்
பார்ப்பதை விடுத்து
களமிறங்கியதில்...
பட்டத்தோடு பரிச்சியம்....
அது உயர உயர பறக்க
கிடைத்த பரவசம்...
மறுபடி அது கீழேவிழ
மடிந்து போகும் அகம்பாவம்...
காற்றும் நம் விரல்களும்
ஒருங்கினைந்து விளையாட
காற்று விசும் திசையை
உணரும்  நுட்பத்தை...
என்னேரமும் அறிய
உண்டாகும் விழிப்புணர்வு...
படித்த பல புத்தகங்களில்
கிடைகாத அனுபவம்...
எதுவாய் இருந்தாலும்
களமிறங்கி
விளையாடிப்பார்ப்பதும்...
அதில் அமிழ்ந்து விடுவதும்...
புத்தகம் படிப்பது போலவே
சுவரஸ்ய வரங்கள் தான்...
பிடித்தது பிடிக்காதது
என பகுத்து பார்த்து
சிலவற்றில் சிக்கிக்கொண்டு...
பலவற்றை ஓரம் வைக்காமல்...
பிடிக்காததையும்
விருப்பத்துடன்
செய்து பழகினால்...
உள்ளே உறுதிபடும் ஒன்று
மனமா? அறிவா? புத்தியா? உடலா?
சரியாகத்தெரியவில்லை...
ஒரு மகத்தான பாடம்.
மனதில் பதிய வித்திட்ட
அழகான மாலைப்பொழுது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக