26 ஜனவரி, 2011

ஓங்கி உரைத்திடும் இயற்கை

ஓய்வின்றி பாய்கிறது
வெள்ளி நீரோடை...
வெள்ளமாய் வீழ்கிறது
மலையருவி...
இருள்பொத்தி அமைதி
காக்கிறது கானகம்...
எல்லாம் கூடி
என்ன சொல்கின்றன?
தணிந்த அசைவுகள்
அன்பு பொங்கும் இதயம்,
சலனமில்லா மனம்,
திமிரும் பெருமிதம்,
ஒப்பிலா இயற்கையில்
எல்லாம் சாத்தியம்!

...இது நான் மிகவும் ரசித்த கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக