7 ஏப்ரல், 2010

ஈசல்

கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். வழிபாடு முடித்து கோவில் சுற்றி வந்து உட்கார்ந்த இடத்தில் மின்விளக்கு வெளிச்சத்திற்கு சில பூச்சிகள் தரையில் வட்டமடித்த்துக் கொண்டிருந்தன. அதை என் மகன்  (7 வயது) பார்த்துக்கொண்டிருந்தான். திரும்பி வரும் போது வண்டியில் வழக்கம் போல் அவன் புதிதாய் தெரிந்துகொண்ட விஷயங்களை சொல்லிக்கொண்டு வந்தான்.

"அங்க பூச்சிக்கெல்லாம் ஒரே சண்டை டாடி, ஒரு எறும்புக்கும் ஈக்கும் பயங்கர சண்டை போலிருக்கு. ஒரு பெரிய குண்டு எறும்பு ஒண்ணு ஈ கிட்ட சண்டை போட்டு வின் பண்ணிட்டு போலிருக்கு, அதோட இறக்கையை பிச்சு பின்னாடி மாட்டிகிட்டு வேகமாக போச்சு டாடி". என்றான்.

"என்னடா சொல்ற புரியல" இது அவன் அப்பா.

"நிஜமா டாடி, நான் பார்த்தேன்"

"அவன் சொல்வது புரிந்ததால் அதற்கு சிரித்துக்கொண்டே விளக்கம் கொடுத்தேன். அவன் பார்த்தது ஈசல், ஈ யை எறும்பையும் மட்டுமே அதுவரை பார்த்திருந்ததால் அங்கு இருந்த ஈசலை தெரியவில்லை அவனுக்கு. ஈ பாவம் எறும்பு மோசம் என்று சொல்லிக்கொண்டிருந்தவன், அப்படியா ஒரு பூச்சி இருக்கு" என்றான்.

உடனே " அச்சொச்சோ இந்த மம்மி இதை  நாளைக்கு ப்ளாகுள போட்டுடுமே. ப்ளாகை கண்டு பிடிச்சதிலிருந்து இதே பிரச்சனை தான், மம்மிகிட்ட ஒன்னும் பேச முடியல" என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக