19 ஏப்ரல், 2010

சில்லரை

கையில் சில்லரையுடன்

பேருந்து நிலையத்தில்

காத்திருப்பு...


பிச்சை கேட்டு ஓரு

சிறுவன் என் அருகில்...



கிழிந்த ஆடைகளுடன்

தலையில் எண்னெய் இன்றி..



கொடுக்கலாம் தான்

அதன் பின்

நடக்கபோகும் நிகழ்வு??



அங்கிருக்கும் அத்தனை

பிச்சைகாரர்களும் நம்மை

முற்றுகை இடுவதாக..



என் கண்முன்னே

பயமுறுத்த...



சற்றே யோசித்தபடி நான்



அதே கண​த்தில்

என் கையிலிருந்து

ஒரு நாணயம்

தரையில் தேங்கியிருந்த

அழுக்குத்தண்ணீரில்

விழ..



சடாரென குனிந்து

எடுத்தான்..

யோசனையாக என்னை

பார்த்தான்..

நீயே வைத்துக்கொள்

என்றேன்..

சொல்லிவிட்டு நாம் ஏன்

எடுக்கவில்லை..

எவ்வளவு சாமர்த்தியம்

அவனுக்கு..

இனி நடத்துனரிடம்

நூறு ரூபாய்

தந்து சில்லரை வாங்கி

அடக்கடவுளே..



சற்று நேரத்தில்

கையில் அரை அளவு தீர்ந்த

தின்பண்ட பாக்கேட்டுடன்

அவனே தான்..



நிஜமாகவே பசியா??

ஏதோ ஒன்று

அறைந்தது போல்

இருந்தது..



எத்தனை

அம்மா பசிக்குது வை

அலட்சிய படுத்தியிருக்கிறோம்...



இனி இவர்களுக்கென

தனிச் சில்லரை

என் பையில்

எப்போதும் இருக்கும்...

1 கருத்து: