12 ஏப்ரல், 2010

நினைவுகள்

மழை பெய்த
ஈர மண்ணின்
மணம்...

சாலையோர
பூக்களின்
வண்ணம்...

அலைகடல்
ஓரம் சூடான
சுண்டல்...

தெருவில் முழங்கும்
வியாபாரியின் குரல்...

மரங்களின் ஊடே
கசியும்
அந்த காலை
பதினொரு மணி வெயில்...

வாசலில் மார்கழி கோலம்
அம்மாவின் காபி...
தம்பியுடனான சீச்சீ சண்டை...

எப்போதும் கைகளில்
தவழும்
பாடப்புத்தகங்கள்...

தூரத்தில் கேட்கும்
பிடித்த பாடல்...

குயிலின் கானம்...

காந்தியின்
சத்திய சோதனை
விவேகானந்தர் சுயசரிதை
எல்லாம் நினைவில்
பசுமையாய்...

குழந்தைகளாகவே
இருந்திருக்கலாம்...
பொறுமையாகவே
வளர்ந்திருக்கலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக