19 ஏப்ரல், 2010

கவலை

தனியார் நிறுவன அறிவிப்பு பலகை.

புதிய அறிவிப்பு:

ஏதேனும் ஒரு காரணம் தேடிப்பிடித்து எப்போதும் கவலைப்படும் ஊழியர்கள் கவனிக்க..

நாள் முழுதும் உங்கள் கவலை வேலையை பாதிக்காமல் இருக்க..ஒரு வழி..

3 மணிக்கு கொடுக்கப்படும் தேனீர் இடைவேளையில் கவலைப்பட நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். ஒரு நாளுக்கு 1/2 மணி நேரம் கவலைப்படுங்கள் அது போதும், பின்பு 3.30 லிருந்து சரியாக வேலை செய்ய வேண்டும்..

மீறினால் அபராதம் உண்டு.


இதை பார்த்த பின் வந்த சில கமெண்ட்டுகள்.....

முழு நேரம் கவலைப்படும் அன்பர் 1

"அய்யோ எல்லாத்தையும் விட்டுட்டா அப்புறம் யார் தான் அவ்வளவு கவலையும் படுறது. இதெல்லாம் நடக்கிற காரியமா?"

கவலைப்படும் அன்பர் 2

"டீ குடிக்கும் போது கவலை படுவதா? அட போய்யா சான்ஸே இல்ல. என் மனைவியை இப்பல்லாம் டீ நேரத்துல தொலை பேசாதேன்னு சொல்லிட்டேன்"

கவலைப்படும் அன்பர் 3

"சரி பார்க்கலாம்" , அவ்வப்போது தோன்றிய கவலைகளை ஒத்திப்போட்டு 3 மணி அடித்ததும் யோசித்து பார்த்து

"ஏதோ யோசித்து வைத்தோமே நினைவு வரலையே" என கவலைப்பட்டார்.

கவலைப்படும் அன்பர் 4(வடிவேலு ??!!)

"கொடுக்கிற அரைமணி நேரத்தில லொள்ளைப் பாரு. நான் கவலைப் படுறதையே நிறுத்திட்டேன்ப்பா...அப்பாடி நம்பிட்டாய்ங்க.."

கவலைப்படும் அன்பர் 5


"அய்யோ மூணு மணி வரை கவலைப் பட முடியாதே"

கவலைப்படும் அன்பர் 6

"அப்படியா மற்ற நேரத்துல ஜாலியா இருக்க வேண்டியது தான்"

உழைப்பாளி!!!

கவலைப்படும் அன்பர் 7

இவர் மாத்தி யோசி அன்பர் போலும்...

நிறுவனத்தில் ஊழியர்கள் கவலையில்லாம இருக்கனும்னு தான்

இந்த அறிவிப்பு செய்திருக்காங்க. சபாஷ்!

1 கருத்து: