19 ஏப்ரல், 2010

ஓவியம்

ஒவ்வொரு முறை


நான் பேனா

எடுக்கும் போதும்



ஆசையாய் வாங்கி

அம்மா ம்ம் ம்ம்



என் காகிதம் முழுக்க

உன் கிறுக்கல்கள்



காகிதமும் நிறைந்தது

ஓர் மிகச் சிறந்த

இரண்டு வயது

ஓவியனின்

முதல் முயற்சியால்



தயக்கமே இல்லாத

உன் கோடுகள்

வட்டங்கள்



படைப்பாளிக்கு

வானமே எல்லை

உனக்கும் தான்



கூரை மட்டும்

எட்டவில்லை

தப்பித்து விட்டது



சுவற்றில் ஒரு இடம்

மீதியில்லை



மெழுகு வண்ணங்களில்

பல புதிரோவியங்கள்



மேஜையும்,

நாற்காலியும்

ஆழ் நிற சோபாவும்

கூடத்தான்



மெருகேறி இருக்கின்றன

உன் வண்ணக்காய்ச்சலில்

குளித்து



வென்னிற தரையும்

உன் விளையட்டுத்திடல்



எத்தனை முறை

கடிந்து கொண்டாலும்

அழகாய்

பெருமையாய்

ஒரு புன்சிரிப்பு

உன் உதடுகளில்



காலையிலிருந்து

மாலைவரை

நீ தீட்டிய

ஓவியங்களோடு



மாலையிலிருந்து

மறு நாள் காலைவரை

உன் தந்தையின்

சாய விலை ஆதியாக

அடித்த நேரம்

(நல்ல வேளை

ஆள் வைத்து

சாயம் அடிக்க

வில்லை

கூலியும் சேர்ந்திருக்கும்)

அழகு

.....அந்தம் வரை



வரும் பாட்டுக்களையும்

ரசிக்கிறேன்



என் சின்னத் திருமகனின்

ஓவியத்திறமையை

மெச்சியபடி.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக