19 ஏப்ரல், 2010

தொ. கா. வுக்கு ஒரு முற்றுப்புள்ளி

மடி கனிணியை

திறந்து வலை பார்க்க

ஆரம்பித்து

ஒரு மணி நேரம் ஆயிற்று...



தொ. கா வில் உன்

டோரா முடிந்து

டியோகோ வந்தாயிற்று...



போதும் கண்ணா

தொலைக்காட்சி பார்த்தது போதும்...



அன்று உன் சோர்ந்த

முகம் பார்த்து

போதும் அம்மா

எழுதியபின்...



ஒரு நாளில் உன் தொ. கா நேரம்

இனி ஒரு மணி நேரம் தான்...

முடிவான முடிவாயிற்று..



நீ போய் மடி கனிணியை

வைத்துக்கொண்டு

உட்கார்ந்திரு, என்னை விடு என

நீ சொல்ல ஆரம்பிக்குமுன்..

நான் சொல்கிறேன்...



வா வெளியில் சென்று

விளையாடலாம்...



காக்கை யை தேட முடியாது

கார் பார்த்துக்கொண்டே

சாப்பிடலாம்...



பூக்களையும், செடிகளையும்

ரசிக்கலாம்...



இதோ கையில்

உன் ஆசை தூரிகையை எடு

சுவர் முழுதும்

ஓவியம் தீட்டலாம்...



இன்னும் தண்ணீரில்

கூட விளையாடலாம்...



உனக்கான நேரம்

இன்னும் ஒரு வருடம் தான்

நீ பள்ளி செல்லும் வரை தான்



வா விளையாடலாம்

போதும் கண்ணா..

தொ. கா. வுக்கு இனி ஒரு முற்றுப்புள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக