29 ஏப்ரல், 2010

புன்னகை

சகியே உன் உதடுகள்
இரண்டும் நீண்டு
கண்கள் இரண்டும் மலர்ந்து
எப்போது சிரிப்பாய்
எனைப்பார்த்து...

என காத்து கிடந்தேன்
காதலிக்கும் போது...

அந்த அழகில்
அமிழ்ந்து கிடந்தேன்
பல காலம்...

இப்போதும் ஏக்கத்துடன்
காத்துத்தான் கிடக்கிறேன்
நீ   நம் குழந்தைகளை
கவனிப்பதை முடித்து
என் பக்கம் எப்போது
பார்ப்பாயென்று...

ஒரு பிள்ளை இடையில்
தூக்கி ஒரு பிள்ளை
கையில் பிடித்து
நடக்கும் அழகில்
அமிழ்ந்து தான் போகிறேன்
இப்போதும்....

ஆனால்  நீ மட்டும் சகியே
அப்படியே இருக்கிறாயே
அதே புன்னகையுடன்...

2 கருத்துகள்: