2 மே, 2010

இயற்கை

மேகங்கள் மோதிச்செல்லும்
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...

சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...

எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...

இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...

மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...

அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...

காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...
வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்

மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக