29 மே, 2010

அமைதி

தெள்ளிய நீர் போல
ஒர் அதிர்வுமின்றி
அமைதியாய்
நின்றிருக்கிறது
மனப்பரப்பு

நெடுங்காலம்
கழித்து ஒரு
பேரமைதி

சிந்தனைகளின்றி
நிச்சலனமாய்
மனதின் மேற்பரப்பு

எண்ணங்களெல்லாம்
யோசனையில் ஆழ்ந்திருக்க
எப்போதும் ஓடிக்கோடிருக்கும்
அந்த மனக்குதிரை
சத்தமே இல்லாமல்...

சோர்ந்து விட்டதா?
ஓடிப்பயனில்லை
என தெரிந்து கொண்டு விட்டதா?

மெல்லிய இசையில்
மயங்கி விட்டதா?

மழைவிட்ட வானம் போல்
தெளிவாய்....

கழுவி விட்ட தரை போல்
புதிதாய்...

வயிறு நிறைந்த குழந்தை போல்
திருப்தியாய்...

நீர் விட்ட செடி போல்
வளமாய்...

தொடர்ந்து தோற்கும் என்
மனக்குதிரை நிறுத்தப்
போராட்டங்கள்
ஓய்ந்து போன நேரம்...

மாற்ற தேவையில்லா
சிறிய விஷயங்களும்

மாற்ற முடியாத
பெரிய விஷயங்களும்

தெரிந்து தெளிந்த
அலைகளில்லா கடல் போல...
அத்திப்பூ போல...
ஆர்பாட்டம் இல்லா
பேரணி போல...
அமைதியில் என் மனம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக