31 மே, 2010

மரபணுக்கள்..

மரபணு என்றால் என்ன?


மரபணு பற்றி எளிதாக தெரிந்து கொள்ள அதனை ஒரு புளூபிரிண்டோடு ஒப்பிடலாம்.

உயிரற்ற பொருளை செய்வதற்கு முதலில் அதன் வரைபடம் தயார் செய்து நீள, அகல உயர அளவுகள் எல்லாம் தேர்வு செய்து எப்படி இருக்க வேண்டும் என யோசித்து அந்த தகுதிகள் எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைப்பது போல் இந்த மரபணு இழைகளில் மனிதனுக்கு தேவையான அத்தனை குணங்களும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒரு மனிதனின் ஒட்டு மொத்த சாப்ட்வேர் அவனின் முடி மற்றும் ரத்த செல்கள் உட்பட ஒவ்வொரு செல்லுக்குள்ளும் இருக்கும். இந்த இழைகளின் வேலை பதிவுகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்ய மற்ற செல் உறுப்பினர்களுக்கு கட்டளை இடுவதும் தான்.

அரசன் பாதுகாப்பாக கோட்டைக்குள் இருந்து கொண்டு ஓலையில் கட்டளை அனுப்புவது போல் இந்த மரபணுக்கள் பத்திரமாக ஒவ்வொரு செல்லின் நியூக்ளியஸ் எனப்டும் பகுதியில் ஹாயாக இருந்து கொண்டு மெசஞ்சர் ஆர் என் ஏ வாக கட்டளைகளை பிறப்பிக்கும். இந்த எம். ஆர். என். ஏக்கள் சைட்டோப்லாசம் பகுதிக்கு வந்து சேர்ந்தவுடன் கட்டளைகளை செயல்படுத்த ஆரம்பிக்கும். இதற்கு உதவி செய்ய நிறைய சிப்பாய்கள் சைட்டோப்லாசம் பகுதியில் சுற்றிக்கொண்டிருக்கும். கட்டளை வந்தவுடன் செயல் படுத்தவே இந்த ஏற்பாடு.

மரபணுக்களை மீண்டும் தொடர்வோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக