13 மே, 2010

உரை நடை

கவிதை எழுதுவதே மிக சுலபமாக இருப்பதால் உரை நடையில் கவனம் செல்வதேயில்லை எனக்கு. கவிதை என்பது ஒரு நிமிட சமையல் மாதிரி. கவிதையில் எந்த இலக்கணத்திலும் சிறைபடாமல்  நான்கே வரிகளில் நினைத்ததை சொல்லிவிடலாம். சரியாக வரவில்லை என்றாலும் என் கவிதை இப்படித்தான் என்றாவது சொல்லிவிடலாம்.
ஆனால் உரை நடை என்பது பக்குவமாய் செய்து பந்தியிட்டு பரிமாற வேண்டிய முழு சமையல். எங்கேனும் ஒரு தவறிருந்தால் கூட  சரியான பதில் சொல்ல வேண்டும்.
எழுதித்தான் பார்ப்போமே என ஆரம்பிக்கிறேன். சிறப்பாக்கிக் கொள்ள உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக