13 மே, 2010

கிறுக்கல்

சிந்தனை முத்துக்கள்
சிங்காரமாய் சிதறின..
சிறகு முளைத்து
வானில் பறந்தன..
கணினியில் அச்சிட
கைகள் பரபரத்தன..
காகிதமாவது தென்படுகிறதா
கண்கள் தேடின..
பேருந்து பயணத்தின்
மத்தியில் நான்..
கணினியும் இல்லை
காகிதமும் இல்லை
வீட்டிற்குள்
வந்திறங்கியவுடன்
அந்த கவிதை மறந்து
வந்து விழுந்தது...
கவிதையில்லை கிறுக்கல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக