26 மே, 2010

என் மகனின் குறும்பு

அப்போது அவனுக்கு ஐந்து வயது. இரண்டாம் குழந்தை பேற்றிற்காக தாய் வீடு சென்றிருந்தேன். என் தலை மகனை அருகில் உள்ள பள்ளியில் யூ கே ஜி சேர்த்து விட்டோம். தினமும் காலையில் சிணுங்கல் இல்லாமல் சீக்கிரமாக எழுந்து, குளித்து, சீருடை அணிந்து மிக சந்தோஷமாக வாசலுக்கு வரும் வேனில் பள்ளிக்கு செல்வான். போய் சேர்ந்த ஒரு சில நாட்களிலேயே நிறைய நண்பர்கள், தைரியமாக பேசுவதால் ஆசிரியர்களுக்கும் பிடித்த மாணவனாகிவிட்டான்.

ஒரு நாள் சாயுங்காலம் பள்ளி விட்டு வரும்போதே மிகவும் சோர்ந்து இருந்தான். என்ன என்றதற்கு இனி நான் அந்த பள்ளிக்கு போக மாட்டேன்.

அடிக்குறாங்க, நீ வா நம்ம சிங்கப்பூருக்கே போய்டுவோம் என்று ஒரே ஆர்ப்பாட்டம். அப்போது ஜூரமும் வந்து விட்டதால் இரு நாட்கள் கழித்து பள்ளிக்கு அனுப்பும் போது ஆசிரியர்களிடம் பேசினேன். ஏன் என் பிள்ளையை அடித்தீர்கள் என்று கேட்டேன். இல்லை அவன் கொஞ்சம் வாலு, சும்மா மிரட்டி, அடிப்பேன்னு சொன்னதுக்கே அழுதிட்டான் என்

று சொல்லி அனுப்பிவிட்டனர். ஆசிரியர்கள் சொன்னதில் சமாதானம் அடையாததால் அன்று இரவு அவனிடம் பேசினேன். தம்பி இப்போ அம்மாகிட்ட உண்மைய சொல்லு...

யார் உன்னை அடித்தது?

எங்க சார்

எப்போது உன்னை அடித்தார்?

க்ளாஸ் ல.

நீ என்ன செஞ்சே?

கம்பால சாரை அடிச்சேன்.

ஐய்யோ ஏன்?

அவரு என்னை அடிச்சாரு. நான் அவரை அதே கம்பால திரும்பி நிக்கும் போது அடிச்சேன்.

அவர் ஏன் உன்னை அடிச்சார்?

எழுதினதுக்கு.

எழுதினத்துக்கா அடிச்சாங்க?

ஆமாம்.

எதால எழுதின?

பேனாவால.

யாரோட பேனா?

சார் பேனா

எதுல எழுதின?

புக்குல

யார் புக்கு?

சாரோட புக்கு

எந்த புக்கு?

எல்லார் பேரும் எழுதியிருக்கும் இல்ல? அதுல கூட டிக் போடுவாங்களே காலைல. (அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்தர்??!!!)

ஹா ஹா இதை ஏன் ஆசிரியர் என்னிடம் சொல்லவில்லை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது!! என் மகனின் குறும்பை இன்று நினைத்தாலும் வாய் விட்டு சிரிப்பேன்.

3 கருத்துகள்:

  1. ஐயோ ,இது சின்ன வாலில்லங்க.

    பதிலளிநீக்கு
  2. நன்றி மால்குடி! இப்போது அவன் ரொம்ப சமத்தா படிக்கிறான். முதல் 3 இடத்துக்குள்ள வந்திடுவான் படிப்பில் புலி.

    பதிலளிநீக்கு